படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Monday, April 26, 2004

வளைக்கப்படும் விதிமுறைகள்

இன்றைய தமிழ் நாளிதழ்கள் பெரும்பாலானவற்றில் வந்த 'பரபரப்பான' செய்தியொன்று ஞாயிறன்று சென்னை விமான நிலையத்தில் நடந்த சம்பவம் பற்றியது. மிக முக்கியமான நபர்களின் வாகனங்கள் ஓடுபாதையில் செல்ல அனுமதி வழங்கப்படுமாம்! விமானக்கட்டுப்பாட்டு அறையின் அனுமதியின்றியே, அதுவும் விமானமொன்று தரையிறங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில், ஓரிரு வாகனங்களை ஓடுபாதையில் செல்லவிட்டுள்ளனர். பல பயணிகளுக்குப் பொறுப்பான அவ்விமானியின் நிலைமை எப்படி இருந்திருக்கும்! அவசரத் தடைகளை (breaks) உபயோகிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார், பாவம்.

விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதில் என்ன ஓர் அலட்சியம்! எல்லா இடத்திலும்தான் அது இல்லையென்றாகிவிட்டது, முக்கியமான இடங்களில் கூடவா இப்படி நடக்க வேண்டும். சென்னை விமான நிலையத்தில் இப்படி நிகழ்வது இது மூன்றாவது முறையாம்!? (காண்க, தினமணி 26.04.2004). விசாரணை, அது இது என்கிறார்கள், உருப்படியாக ஏதேனும் விளைந்தால் மகிழ்ச்சியே. நம் நாட்டு விமான நிலையங்களைச் சிலாகித்துப் "பரவாயில்லையே!" என்று சொல்லிக்கொள்ளும் நாள் எந்நாளோ?

No comments: