படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Monday, April 05, 2004

குவியும் செல்வம்

வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் 2003ம் ஆண்டில் இந்தியாவிற்கு அனுப்பிய தொகையின் அளவு $18.2 பில்லியன்கள் (!!) என்று 'ரிசர்வ்' வங்கியின் அறிக்கையொன்றை மேற்கோள் காட்டி இணையத்தில் ஒரு இன்றொரு செய்தி. அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 30% அதிகமான தொகை இந்தியாவிற்கு வந்துள்ளது. இன்றைய மதிப்புப்படி ($1=ரூ.43.67) இந்திய ரூபாயில் இது 794 ஆயிரத்துச் சொச்சம் கோடிகள். (ஆயிரம் கோடி, லட்சம் கோடி, கோடி கோடி.... அப்புறம்? பேசாமல் இல்லியன்களுக்கு மாறிவிட்டால் கொஞ்ச நாளைக்கு எண்ணிக்கைப் பிரச்சனையைத் தள்ளிப்போடலாம் என்று தோன்றுகிறது). இதன் மூலம் நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு அதிகரித்துள்ளதாக அச்செய்தி தெரிவிக்கிறது.

அந்நியச் செலாவணி (அ.செ) என்றால் என்ன?
அதை யார், எப்படிப் பாதுகாத்துப் பராமரிக்கிறார்கள்?
அ.செ. எவ்வளவு இருக்க வேண்டும்?
எந்த சதவீதத்தில் ஒவ்வோர் ஆண்டும் அது வளர வேண்டும்?
அ.செ. கையிருப்பு அதிகரித்தாலோ, குறைந்தாலோ ஏற்படும் நன்மை, தீமைகள் யாவை?
..... முதலான பலவற்றை விளக்கும்வண்ணம் பொருளாதாரம் பற்றி நன்கு அறிந்தவர்கள் கட்டுரைகளை (தமிழில்) எழுதினால் தமிழ் மக்கள் படித்துச் சுபிட்சம் அடைவார்கள்.

No comments: