படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Saturday, April 03, 2004

எல்லைகளற்ற செய்தியாளர்கள்

Reporters without Borders (எல்லைகளற்ற செய்தியாளர்கள் எனலாமா?) என்றவோர் அமைப்பு, ஒவ்வொரு நாட்டிலும் பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எந்த அளவில் மதிப்பு-மரியாதை உள்ளது என்பதை அந்நாட்டிலுள்ள நிருபர்கள், ஆராய்ச்சியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் போன்றோரிடம் கேள்விப் பட்டியல் ஒன்றின் மூலமாக கருத்துக் கணிப்பை நடத்தி முடிவுகளை வரிசைப்படுத்தியுள்ளது. பெரும்பாலான ஸ்கேன்டிநேவிய நாடுகளில் பத்திரிக்கை சுதந்திரம் நன்றாக இருப்பதாக 166 நாடுகளின் முடிவுகளைக் கொண்ட 2003ம் ஆண்டின் பட்டியல் தெரிவிக்கிறது. இந்தியா 128-வது இடத்தில் (2002 விட பின்தங்கியநிலையில்)! இவ்வமைப்பின் நோக்கம், எந்த அடிப்படையில் மேற்சொன்ன தரப்பட்டியல் வெளியிடப்படுகிறது போன்ற விவரங்கள் அவர்களது இணைய தளத்தில் சொல்லப்பட்டுள்ளது.

மேலும், சென்ற வருடம் பாக்தாத்திலுள்ள பாலஸ்தீன் விடுதியில் நிருபர் ஒருவர் கொல்லப்பட்டதன் புலன் விசாரணை அறிக்கை, 'ஆன்லைன்' அடக்குமுறை விருதுகள் போன்ற (பத்திரிக்கையாளர்களால் கவனிக்கப்படவேண்டிய) பல விஷயங்கள் இத்தளத்தில் காணக்கிடைக்கின்றன.

No comments: