படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Thursday, April 29, 2004

ஐரோப்பிய ஒன்றிய விரிவாக்கம்

நாளை மறுநாள் (01.05.2004) ஐரோப்பிய ஒன்றியத்தில் புதியதாகப் பத்து நாடுகள் இணையப்போகின்றன. இம்முறை இணையும் நாடுகளின் எண்ணிக்கை முன்னெப்போதையும் விடக் கூடுதலாகும். 1951-ல் இத்தாலி, ஃபிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், லக்ஸம்பர்க், ஜெர்மனி ஆகிய ஆறுநாடுகளுடன் தொடங்கிய இவ்வொன்றியம் தொடர்ந்து வளர்ந்து வந்துள்ளது.

1973 - அயர்லாந்து, இங்கிலாந்து (யு.கி), டென்மார்க்
1981 - கிரேக்கம் (க்ரீஸ்)
1986 - போர்ச்சுகல், ஸ்பெயின்
1995 - ஆஸ்திரியா, ஃபின்லாந்து, ஸ்வீடன்

இன்று வரை உள்ள பதினைந்து நாடுகளுடன் இணையும் நாடுகள்: எஸ்த்தோனியா, செக் குடியரசு, சைப்ரஸ், மால்டா, போலந்து, லாத்வியா, லித்துவேனியா, ஹங்கேரி, ஸ்லொவாக் குடியரசு, ஸ்லொவீனியா. இவற்றில் பல நாடுகள் சமீப காலம் வரை கம்யூனிஸ ஆதிக்கத்தின் கீழிருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. பல்கேரியா மற்றும் ருமேனியா 2007-ல் சேரும்போலத் தெரிகிறது. துருக்கியின் நிலைமை அதற்குத்தான் தெரியும்.

ஓர் ஐரோப்பிய நாடு இவ்வொன்றியத்தில் சேரவேண்டுமானால், அங்கு

* நிலையான ஜனநாயக நாடாக விளங்க வேண்டும்.
* மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்.
* சட்டப்படி ஆட்சி நடக்க வேண்டும் (rule of law).
* சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பிருக்க வேண்டும்.
* சந்தைப் பொருளாதாரம் நடைமுறையில் இருக்க வேண்டும்.
* இன்னும் பல...

(படத்தில் 25 நாடுகளின் கொடிகள்)

No comments: