படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Thursday, July 15, 2004

இலங்கையில் மீண்டும் போர் வருமா?

வரவே வேண்டாம் என்றுதான் மனது விரும்புகிறது. ஆனால், கள நிலவரம் அவ்வாறு இல்லையென்று ஊடகங்கள் செய்திகளைப் பரப்பிக்கொண்டுள்ளன. இணையத் தமிழ் ஊடகமொன்றில் இன்று வந்த செய்தியொன்று இவ்வாறு செல்கிறது:

"இதற்கிடையே, இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கலாம் என 'Stratfor' (strategic forecasting) என்ற சர்வதேச புலனாய்வு மையம் எச்சரித்துள்ளது.

கருணாவைப் பயன்படுத்தி குழப்பம் ஏற்படுத்து போன்ற செயல்களில் இலங்கை ராணுவம் ஈடுபட்டுள்ளதாகக், போரை நோக்கியே இலங்கை அரசின் செயல்பாடுகள் இருப்பதாகவும் அந்த மையம் கூறியுள்ளது.

புலிகளை முறியடிப்பதாற்கான தந்திர உபாயங்களை இலங்கை ராணுவத்தினருக்கு அமெரிக்க நிபுணர்கள் அளித்து வருவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது."


[இவர்கள் குறிப்பிட்டுள்ள STRATFOR இணைய தளத்தில் விரிவான செய்திகளைப் படிக்க காசு கொடுக்க வேண்டும் போலுள்ளது.]

வெண்ணை திரண்டு வரும் வேளையில் தாழியை உடைத்த கதையாகத்தான் கருணா போன்றோரின் சுயநல நடவடிக்கைகள் அமைந்துள்ளன. கடந்த காலப் போரினால் தமிழர்கள் அடைந்த கஷ்டமும், நஷ்டமும் போதும்; அமைதி வரட்டும், அனைவரின் வாழ்வும் செழிக்கட்டும். சுயநலக்காரர்களே! நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்யாதிருங்கள், ஏதாவது புண்ணியம் கிட்டும்.

No comments: