படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Friday, July 02, 2004

கடலில் நதி நீர் வீணாகவா கலக்கிறது?

"கேரளத்திலிருந்து வீணாக கடலை நோக்கிப் பாயும் ஆற்று நீரைத் தமிழகத்திற்கு திருப்பிவிடலாம்", "மழை வெள்ளத்தால் பெருக்கெடுத்து வீணாக கடலில் கலக்கும் நதியின் தண்ணீரை...." போன்ற செய்திகளை அவ்வப்போது ஊடகங்களில் காணும்போது எழும் கேள்வி - "கடலில் நதி நீர் வீணாகவா கலக்கிறது?". தனக்கு பயன்படவில்லையென்றால் ஒன்றை வீண் என்று சொல்லிவிடுவது மனிதனின் வாடிக்கை. எங்கோ ஒரு மலை அல்லது சுனையில் பிறந்து, காடு, மேடு தாண்டி, நாட்டில் உருண்டு கடலில் சென்று சேரும் வண்ணம் இயற்கை ஏற்படுத்தியிருக்கும் இந்த அமைப்பு வீணாக இருக்கவே முடியாது என்பது என் எண்ணம்.

நம் நாட்டில் சமீப காலங்களில் பேசப்பட்டுவரும் நதி நீர் இணைப்புத் திட்டத்திலும் இவ்வாதம் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது எவ்வளவு அபத்தமானது என்பதை ஜூன் மாத காலச்சுவடில் வந்துள்ள கட்டுரை ஒன்று பறைசாற்றுகிறது.

No comments: