படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Friday, December 31, 2004

வருடத்தின் இறுதிநாள்

இன்னும் சிலமணி நேரங்களில் இவ்வாண்டு வரலாறாகிவிடும். எளிதில் மறந்துவிடமுடியாத சோகத்தை எல்லோர் மனதிலும் அப்பிச் சென்றுவிட்ட வருடமிது.

உலகில் பலரும் பல வழிகளில் தம்மாலான உதவிகளைச் செய்துவருகின்றனர்; அவை பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்லபடியாகச் சென்றடையட்டும். அத்துடன், இறந்த குழந்தைகள் முதலானோரை நினைவுகூறும் விதத்திலும், அனைத்தையும் இழந்து நொந்துகிடப்போரின் துயரில் பங்குகொள்ளும் வண்ணமும் ஒவ்வொரு வீட்டிலும் இன்று விளக்கையோ, மெழுகுவர்த்திகளையோ ஏற்றி வைப்போம். இதனால் ஆகிவிடப்போவதொன்றுமில்லை என்றாலும் ஒருவருக்கொருவர் காட்டும் மானசீக ஆதரவின் அடையாளமாக அதைக் கொள்ளலாம்.

கனத்த நினைவுகளுடன் புதுவருடத்திற்குள் அடியெடுத்து வைக்கிறோம். வருங்காலமாவது மக்களுக்கு நிம்மதியை அளிக்கட்டும்!

No comments: