படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Wednesday, December 01, 2004

எய்ட்ஸ்

எய்ட்ஸ் நோயால் பாதிப்படைந்துள்ளோரில் பெரும்பாலானோர் வளரா மற்றும் வளரும் நாடுகளில் வசிக்கும் மக்கள்; அதிலும் குறிப்பாகப் பெண்கள் என்பது மிகவும் வருந்தத்தக்க செய்தியாக உள்ளது. இந்நோயினால் நாளொன்றிற்குச் சுமார் 600 பேர் இறப்பதாகச் சொல்கின்றனர். பாதிக்கப்பட்டோர், நோயின் தொந்தரவுடன், சக மனிதர்களின் வெறுப்பு, ஒதுக்குதல், கேலி, தாக்குதல் முதலானவற்றிற்கு உள்ளாவது மிகவும் கொடுமையானது.

அரசுகளும், அரசு சாரா அமைப்புகளும் இந்நோயைத் தடுக்கும் முறைகளை எவ்வளவோ முயன்று பிரச்சாரம் செய்கின்றன. இருப்பினும், அறியாமை, அலட்சியம் போன்றவற்றால் இந்த அவலம் தொடர்ந்து கொண்டேதான் உள்ளது. நிரந்தர தீர்விற்கான மருந்துகள் வரும் வரை இன்னும் பல உயிர்கள் மாய்வது தொடரவே செய்யும்.

எய்ட்ஸ் பற்றிய உயிரியல் கூறுகளைச் சுருக்கமாக இங்கு காணமுடிகிறது.

No comments: