படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Wednesday, October 06, 2004

திசைகள்-அக்டோபர் 2004

அக்டோபர் 2004 திசைகள் இதழில் இராம.கி. அவர்களின் நேர்காணல் வந்துள்ளது. அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று. சில மாதங்களுக்கு முன்பு மடலாற் குழுக்களில் தமிழ் யுனிகோடு பற்றி மிக விரிவாக எழுதியிருந்தார். நம் மக்களுக்குக் கருத்தாடல்கள் என்றாலே ஒவ்வாதா என்ன?

அதோடு, "காணாமல் போகும் வாசகர்கள்" என்ற சில கட்டுரைகளும் கவனிக்கப்பட வேண்டியவை.

சில கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் என்ற அளவிலேயே திசைகள் உள்ளது. பல்துறை சார்ந்த நல்ல எழுத்தாளர்கள் இதில் எழுத முன்வரவேண்டும். இணையத்திலாவது உருப்படியாக வாசிக்க ஏதேனும் கிடைக்கட்டும்.

No comments: