படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Thursday, October 28, 2004

பட்ட காலே படும்!

அது இதுவென்று சொல்லி, ஏற்கனவே பொருளாதாரத் தடைகளால் பல்லாயிரக் கணக்கான உயிர்களை இழந்து, நொந்து நூலான நாட்டின் மீது படையெடுத்து, ஆக்கிரமித்து ஒரு வழி செய்து கொண்டுள்ளனர் 'கூட்டணிப்' படையினர். இவர்கள் போதாதென்று தீவிரவாதக் கும்பல்களின் அட்டூழியம் சொல்லி மாளாது. தினம் தினம் மக்களைக் கொன்று குவித்துக் கொண்டே உள்ளனர்.

போருக்கு முன்பு இருந்ததைவிட இப்போது இறப்போரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்று இச்செய்தி தெரிவிக்கிறது. இறப்போரில் பெண்களும், குழந்தைகளும் கணிசமானோர். 'ஜனநாயக ஏகாதிபத்திய'மன்றோ! தொடரும் இக்கொடூரச் சூழ்நிலை இன்னும் எத்தனை உயர்களை பலி வாங்கப்போகிறதோ? மனிதன் நாகரிகம் அடைந்துவிட்டதாகப் பெருமை வேறு பேசிக்கொள்கிறான்!!

No comments: