படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Friday, August 06, 2004

சென்னையும் மதுரையும்

சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளையொன்றை மதுரையில் ஆரம்பித்தாலும் ஆரம்பித்தார்கள் நாள்தோறும் நடக்கும் சச்சரவுகள் தீர்ந்தபாடில்லை. மெத்தப்படித்த மேதாவிகள் போடும் சண்டைகளைச் சொல்லி மாளாது. சென்னை உயர்நீதி மன்றத்திற்கு இத்தனை மாவட்டங்கள் வேண்டும் என்று அங்குள்ள வழக்கறிஞர்களும், தங்களுக்கு ஒதுக்கியதை திரும்பப்பெறக் கூடாதென்று மதுரைப் பக்கத்தில் இருப்போரும் மாறி மாறி நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்தும், ஒரு சிலர் நீதிபதிகளுக்கு எதிராக முழங்கிக்கொண்டும் இருப்பதாகப் படித்தறிகிறோம். இவர்களின் செயல்கள் அப்பட்டமான சுயநலமாகவே தெரிகிறது; வருமானத்தை இழந்து விடுவோம் என்பதாலா இவ்வளவு ஆர்ப்பரிக்கிறார்கள்?

(வேறு - மே மாதம் கோவையில் காதில் விழுந்த செய்தி: நீதித்துறையில் தற்சமயம் நடக்கும் கையூட்டுகள்/ஊழல்கள், 'வளம் கொழிக்கும்' பதிவுப் பத்திரத் துறையையே எடுத்து விழுங்கி விடுகிறதாம்!)

No comments: