படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Monday, January 10, 2005

நான் ஆணையிட்டால்...

12.01.2005 'ஜூனியர்' விகடனில் வந்திருக்கும் ஒரு கட்டுரை ("வேதனையில் சமூக சேவகி"), சுனாமியால் பாதிக்கப்பட்ட இடத்திற்குச் சென்ற தமிழக அமைச்சர் ஒருவர் பிறப்பித்த சில உத்தரவுகளை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை என்கிறது. தனிப்பட்ட முறையில் அமைச்சராக இருக்கும் மனிதர் ஒருவர் எப்படிப்பட்டவராகவோ, எக்கட்சியைச் சார்ந்தவராகவோ இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அமைச்சர் என்று வரும்போது அது மதிக்கப்பட வேண்டிய பொறுப்பு. அந்நிலையில் இருந்து பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை, "நீங்கள் சொல்லி, நாங்கள் என்ன கேட்பது" என்று உதாசீனம் செய்தால் என்னவென்பது? அமைச்சர் ஆணையிட்டால் அதிகாரிகள் அதைக் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டுமென்ற விதிகள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. அவ்வாறு இருக்கும் என்று அனுமானிக்கிறேன்.

அதேபோன்று, சென்ற வெள்ளியன்று (07.01.2005) சென்னையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடந்து முடிந்தபின் திமுக துணைப்பொதுச் செயலாளர் அளித்துள்ள பேட்டியில் " 'ஆணையிட்டிருக்கிறேன்' என 25 முறை முதல்வர் கூறினார். அந்த ஆணைகள் எல்லாம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு, செயல்வடிவம் பெற வேண்டும்; பாதிக்கப்பட்டவர்கள் பலன் பெற வேண்டும். இதுவே எங்களது விருப்பம்." என்கிறார் (நன்றி: தினமணி 08.01.2005). ஆணையிட்டாலும் அது நிறைவேறாமல் போகக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் எழுப்பப்பட்ட நம்பிக்கையாகவே இது உள்ளது. ஆணைகளுக்கு ஏன் இந்த நிலைமை?

ஆணைகள் தொடர்பான வேறொரு செய்தி.

No comments: