குழந்தைகள் கடத்தப்பட்டால் நாடு முழுவதும் அறியப்படும் வகையிலான 'அலர்ட்' முறை இன்றிலிருந்து (01.01.2010) சுவிஸில் நடைமுறைக்கு வருகிறது.
இம்முறைப்படி, கடத்தல் பற்றிய அறிக்கையைக் கிடைக்கப் பெற்றவுடன் மாநில காவல்துறையினர் தலைநகர் பெர்னிலுள்ள மத்திய காவல் அலுவலகத்திற்குத் தெரியப்படுத்துவர். அங்கிருந்து செய்தியானது கார் வானொலி அறிவிப்புகள், நெடுஞ்சாலை மின்தட்டிகள், ரயில் மற்றும் விமான நிலைய ஒலிபெருக்கி போன்றவற்றில் பரப்பப்படும்.
கடத்தல் நிகழ்ந்த ஆரம்ப மணிகளில் கடத்தியோர் நகர்விலே இருக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாலும், இதுபோன்ற அறிவிப்புகளால் பொதுமக்கள் யாரேனும் அவர்களைப் பார்த்து தகவல் சொல்லும் வாய்ப்பிருப்பதாலும் இந்த முறை பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா, ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில் ஏற்கனவே சில ஆண்டுகளாக நடைமுறையிலுள்ள இம்முறையானது அங்கு நல்ல பயனளிப்பதால் இங்கும், கடந்த ஆண்டுகளில் நிகழ்ந்த மோசமான கடத்தல் நிகழ்வுகளைத் தொடர்ந்து, நடைமுறைப்படுத்தப் பெற வேண்டி அழுத்தங்கள் எழுந்தன.
படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Nice post. Its a very necessry measure for countries like India, where child kidnaping is very common. And ur posts about Swiz r interesting. Its like a window to watch over a nation far away. I m Pradeep from Madurai. My blog is dragondeep.blogspot.com. Plz visit my blog and give ur comments.
Post a Comment