படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Sunday, April 19, 2009

நல்லது செய்தல் ஆற்றீராயினும்...

தமிழகத்து அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக நடத்திக் கொண்டிருக்கும் கூத்துகள் இலங்கையில் நிகழும் படுகொலைகளுக்குச் சற்றும் குறைவில்லாதது.

சுயலாபத்தையே முதன்மையாகக் கருதி போட்டிக் குழுக்களை அமைத்துக்கொண்டு அடுத்தவரை ஏசியும் தூற்றியுமே இனப்பற்றைக் காப்பதாகச் சொல்லி காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள். அங்கோ நூற்றுக்கணக்கான உயிர்கள் தினமும் பலியாகின்றன. இங்கு வெற்றுக் கூச்சல்களுக்குக் குறைவில்லை; அதனால் இதுவரை சாதித்ததும் ஒன்றும் இல்லை. போதாக்குறைக்குத் தேர்தல் வேறு வந்து இனப்பற்றை இன்னும் வளர்த்துவிட்டுவிட்டது.

கொடுமைகள் என்று நிற்கும்?

No comments: