படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Friday, March 26, 2004

என்னவென்று சொல்ல...

சாந்திநிகேதன் அருங்காட்சியகத்திலிருந்து இரவீந்திரநாத் தாகூர் பெற்ற நோபல் பரிசு களவுபோயுள்ளது பற்றி நாளிதழ்கள் அனைத்திலும் நேற்று செய்தி வந்திருந்தது. சாதாரணத் திருட்டுகள் சர்வசாதாரணமாக நடப்பதால் (ஆளை வெட்டி நடக்கும் கொள்ளைகள் கூட) அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால் இத்திருட்டு மகாக் கேவலமான ஒன்று. நம் நாட்டிற்குக் கிடைத்த அற்புதமான மனிதர்களில் ஒருவருக்கு வழங்கப்பட்ட ஒரு சர்வதேச அங்கீகாரத்தைக் களவாடித் தங்களை அசிங்கப்படுத்திக் கொண்டுள்ளனர் என்றுதான் சொல்லவேண்டியுள்ளது.

யார்தான் எதிர்பார்த்திருப்பார்கள் இப்படியொரு திருட்டு நடந்திருக்குமென்று! அம்மாநிலக் காவல்துறை விரைவில் களவாளர்களைக் கண்டுபிடித்து இழந்த பொருளை மீட்பார்கள் என எதிர்பார்ப்போம்.

No comments: