படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Tuesday, March 16, 2004

ஸ்பானியத் தேர்தல் முடிவுகள்

சென்ற வாரத்தில் ஸ்பெயினில் நடந்த குண்டு வெடிப்புகளின் தாக்கம் கடந்த ஞாயிறு நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் எதிரொலித்துள்ளது. ஆளும் 'பாப்புலர் பார்ட்டி'யிடமிருந்து சோஷலிஸ்டுகள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். ஈராக் போருக்கு பலியான முதல் ஆட்சி. பிரதம மந்திரியாக வரவிருப்பவர் Jose Luis Rodriguez Zapatero.

சனிக்கிழமை இரவு மாட்ரிட்டில் உள்ள 'பாப்புலர் பார்ட்டி'யின் தலைமை அலுவலகத்திற்கு முன்பு மக்கள் இக்கட்சி சுயநலத்திற்காக குண்டுவெடிப்பு பற்றிய உண்மைகளை மறைப்பதாகக் குற்றம் சாட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அன்றிரவுதான் உள்துறை அமைச்சர் ஐந்து பேரைக் கைது செய்துள்ளதாக அறிவித்தார் (3 மொராக்கியர்கள், 2 இந்தியர்கள்).

வெற்றி பெற்றதும் Zapatero, ஜூன் 30ற்குள் ஈராக்கின் நிலைமையில் மாற்றம் ஏதும் ஏற்படாவிடில் (ஐநாவிடம்/ஈராக்கியர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தல்) அங்குள்ள தனது நாட்டுத் துருப்புகளைத் திரும்ப அழைப்பதாக அறிவித்துள்ளார். (ஈராக் போரையும், அரசாங்கம் அச்சமயத்தில் எடுத்த நிலைப்பாட்டையும், போருக்குப் பின்பு அங்கு படைகளை அனுப்பியதையும் பெரும்பாலான ஸ்பானிய மக்கள் விரும்பவில்லை.)

படைகளைத் திரும்பப் பெறும் இம்முடிவை பல சாதகபாதகங்களைக் கொண்டது.

ஆதரிப்போர் :
1. இப்போருக்கு அரசு ஆதரவளித்ததனால்தான் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது, ஆகவே படைகளைத் திரும்ப வரவழைத்தலே நல்லது.
2. மேலும் தாக்குதல்களைத் தவிர்க்கலாம்.

விமர்சிப்போர்:
1. படைகளைத் திரும்ப அழைத்தால் பயங்கரவாதிகளது செயலுக்கு 'வெற்றி' கிடைத்ததாக ஆகிவிடும். இதுபோல் மேலும் மேலும் தாக்குதல் நடத்த முயற்சிப்பார்கள்.
2. மற்ற நாடுகளும் வருங்காலத்தில் தமது ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள தங்களது படைகளை திரும்ப அழைக்கலாம்.
3. கூட்டணிப்படைகள் வெளியேறுவதால் ஈராக்கிலுள்ள நிலைமை மோசமைடயக் கூடும்.

மேற்கண்ட நிலையை அமெரிக்கா நிச்சயம் விரும்பாது. பார்ப்போம்.

No comments: