படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Wednesday, March 30, 2005

இக்கட்டில் பூமி

அது தெரிந்ததுதானே என்கிறீர்களா? இருந்தாலும், இன்றைக்கு ஐ.நா. மற்றும் வேறு சில அமைப்புகளின் சார்பில் கடந்த நான்காண்டுகளாக சூழமை/சூழியல் தொடர்பாக விரிவானதோர் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

இவ்வறிக்கையின்படி, பல்கிப் பெருகும் உணவு, உறையுள், உடை, எரிபொருள் போன்ற தேவைகளுக்கான முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த ஐம்பதாண்டுகளில் மனித இனம் சூழமையை அதிவேகமாகவும் பரந்த அளவிலும் மாற்றிவிட்டது. இதுகாறும் மனிதன் பெற்ற நல்வாழ்வு மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள் யாவும் இயற்கையை அழித்தே பெற்றவை.

இயற்கையின் மீதான இந்த அழிவுப் படலம் இந்நூற்றாண்டின் முதல் ஐம்பதாண்டுகளில் மேலும் கணிசமான அளவிற்கு அதிகரிக்கப்போவதாக எச்சரிக்கிறது அவ்வறிக்கை.

சீர்குலைந்து கொண்டிருக்கும் சூழமையைச் சரிசெய்வதும், அதேசமயத்தில் பெருகி வரும் தேவைகளை ஈடுகட்டுவதும் சில கடினமான மாற்றங்களால் சாத்தியமானது என்றும் தெரிவிக்கிறது.

சூழமைச் சீர்கேட்டால் அதிகம் பாதிக்கப்படப்போவது வழக்கம்போல ஏழை, எளியோர்தான். (உடனடியாக மனதில் தோன்றும் உதாரணம்: ஜப்பான் தன்நாட்டில் மரம் வெட்டுவதைத் தடைசெய்துவிட்டு இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தால் கடைசியில் பெரிதும் பாதிக்கப்படப்போவது இந்நாட்டு மக்களல்லவா.)

இதையும் மற்றோர் அறிக்கை என்று அலட்சியப்படுத்தாமல் ஒவ்வொருவரும் விழித்துச் செயல்பட்டால் நல்லது.

இவ்வறிக்கை சார்ந்த சில சுட்டிகள்:

Experts Warn Ecosystem Changes Will Continue to Worsen, Putting Global Development Goals At Risk
Study highlights global decline
Millennium Ecosystem Assessment-Synthesis Reports

No comments: