படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Sunday, January 04, 2004

இசை/கச்சேரி பற்றி நா.கண்ணன், காசி ஆகியோர் எழுதியுள்ள வலைப்பதிவுகள் இதுபற்றி சில எண்ணங்களை முன் கொணர்கின்றன.

1. கச்சேரிகளில் (இதுவரை கச்சேரிகளுக்குக்கெல்லாம் சென்று சங்கீதம் கேட்டதில்லை) வித்துவான்கள் தமிழில் அவ்வளவாகப் பாடுவதில்லை என்கிறார்கள்; தமிழில் பாடல்களுக்குக் குறைவா என்ன? தமிழில் பாடினால் அகெளரவம் என்று நினைக்கிறார்களோ என்னவோ!
2. தமிழகத்தில் பெரியவர் சுப்புடு போன்று நிறைய இசை விமர்சகர்கள் உள்ளனரா (நான் அறிந்ததில்லை)? உண்டெனில் இசைக்கும், கலைஞர்களுக்கும் நல்லது.
3. கச்சேரி அரங்க, ஒலி அமைப்புகளிலும், கச்சேரி கேட்கப் போகும் சில நபர்களிடத்தும் ஒரு நேர்த்தி (professionalism-ற்கு என்னாங்க சொல்றது?) காணப்படாததேன்? ("...மைக் செட் தகராறு செய்தாலும், ஏர் கண்டிஷன் திடீரென்று துருவப் பிரதேசத்தையும் அடுத்த நொடியில் சஹாரா பாலைவனத்தையும் சிருஷ்டித்தாலும், யார் குறுக்கே மொபைலோடு நடந்தாலும்..." )

No comments: