படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Thursday, January 08, 2004

தமிழகக் காவிரி விவசாயிகளின் சோகம்

நேற்றைய தினமணியில் (07.01.2004) வெளியாகியிருந்த காவிரி விவசாயிகளைப் பற்றிய கட்டுரை (அழிவின் நிழலாடும் காவிரிப் பாசனப்பகுதி) மனதிற்கு வேதனையளிக்கக் கூடியதாக இருந்தது. மேட்டூர் அணையில் நீரில்லை, மழையில்லை, கர்நாடகத்தின் முரண்டு காரணமாக ஆற்றிலும் நீரில்லை, என்னதான் செய்வார்கள் விவசாயிகள்! இவ்விவகாரத்தை வைத்து நன்றாக அரசியல் செய்கிறார்களே ஒழிய உருப்படியான தீர்வு காண்பாரில்லை.

விவசாயிகளும் நிலைமையைக் கருத்தில் கொண்டு நெற் சாகுபடியை விட்டு மாற்றுப் பயிர் முறைக்கு மாற ஆரம்பிப்பது நல்லது. வேளாண் அறிஞர்கள், அதிகாரிகள் முன்வந்து விவசாயிகளுக்கு மாற்றுப் பயிர் முறைகளை அறிமுகப்படுத்தி அவற்றைப் பயிரிட ஊக்குவிக்கவேண்டும். வங்கிகள் (ஏராளமான பணத்தைக் கையிருப்பில் வைத்துள்ளதாகச் சொல்கிறார்கள்) இச்சமயத்தில் நிறைய விவசாயக் கடனுதவிகள் வழங்க முன் வர வேண்டும். எத்தனையோ பணம் விழுங்கி நிறுவனங்களுக்கு கொடுப்பதைவிட துயர்ப்படும் விவசாயிகளுக்குக் கடன் கொடுத்து நஷ்டப்படுவதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.

பணத்தாளிலும் விளம்பரம்

இனி எப்போதாவது அமெரிக்கப் பணத்தாள் ஒன்றில் ஏதாவது குரங்கின் படமோ இல்லை வேறு படமோ ஒட்டப்பட்டிருப்பதைக் கண்டால் ஆச்சரியப்படத் தேவையில்லை. விளம்பரம் செய்வதற்கான புதிய உத்தியாமிது! மேலதிகத் தகவல்கள் இங்கே.

No comments: