படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Thursday, January 29, 2004

ஜெருசலேம் - அகமதாபாத்

ஜெருசலேம் நகரில் இன்று நடந்த பேருந்து தற்கொலைத் தாக்குதலுக்கு ஆளாகி பலர் மாண்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு பாலஸ்தீனத் தீவிரவாதக் குழுவொன்று 'பொறுப்பும்' ஏற்றுள்ளது! இவர்கள் சொல்லும் காரணம் - ஓரிரு நாட்களுக்கு முன் இஸ்ரேலியப் படைகள் காஸா பகுதியில் நடத்திய 'தேடுதல் வேட்டை'யும் அதன் விளைவாக நடந்த சாவுகளும். இன்றைய பேருந்து நிகழ்வைக் காரணம் காட்டி இஸ்ரேல் மீண்டும் சில தாக்குதல்களைக் கண்டிப்பாக நடத்தும். 2000-மாவது ஆண்டு செப்டம்பரில் துவங்கிய இந்த சமீபத்திய கொந்தளிப்பு/அமைதியின்மை தாக்குதல்-பதில் தாக்குதல் என்று சொல்லி பல நூற்றுக்கணக்கான உயிர்களை இருதரப்பிலும் பலிவாங்கியுள்ளது, இன்னும் நிற்பதாகத் தெரியவில்லை. அமெரிக்காவின் 'அமைதி' முயற்சியிலும் சொல்லிக்கொள்ளும்படி எந்தவித முன்னேற்றமும் காணவில்லை. என்றுதான் இப்பிராந்தியத்தில் அமைதி திரும்புமோ!

இன்னும் சில நாட்களுக்கு இந்திய ஊடகங்களில் அகமதாபாத் நீதிமன்ற கையூட்டு விஷயம் பெருமளவில் இடம் பெறும். அப்புறம் எல்லோரும் மறந்து விடுவோம்! மறுபடியும் வேறெங்காவது 'இப்படி நடந்து' என்று செய்திவரும், 'ஓ அப்படியா' என்று சொல்லிவிட்டு அவரவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்து விடுவோம். தெகல்காவிற்கு நடந்த கதை அனைவரும் அறிந்த ஒன்றுதானே! நடப்பவைகளைக் கண்டால் சமுதாயத்தின் மீது நம்பிக்கை வருவேனா என்கிறது. :(

No comments: