படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Wednesday, February 25, 2004

வம்புக்கு வேட்டு

மதுரை சட்டக் கல்லூரியில் இளம் வகுப்பு மாணவர்களை வம்பு [Rag-ற்கு சரியான தமிழ்ச்சொல் தெரியவில்லை :( - சீண்டல், கேலி, வம்பு?] செய்து துன்புறுத்தியது தொடர்பாக பதினெட்டு மாணவர்களை சம்பந்தப்பட்ட நிர்வாகம் கல்லூரியிலிருந்தே நீக்க உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகள் தேவையென்றேபடுகிறது. மாணவர்கள் பெரும்பாலும் குழுவாகச் சேரும்போதுதான் தங்களது 'வீர'த்தைக் காண்பிக்கின்றனர். தங்களது சிந்தனைகளைப் படிப்பிலும் எதிர்காலத்தை நோக்கியும் செலுத்துவதை விட்டுவிட்டு இம்மாதிரி வம்புதும்புகள் செய்வது அவர்களுக்கு நன்மை பயக்காது. மாணவர்கள் தங்களுக்குள் கேலி செய்ய வேண்டியதுதான், ஒரு வரைமுறை என்று உண்டல்லவா!

வன்முறையால் மதுரைப் பகுதி பொருளாதார ரீதியில் மற்ற நகரங்களைவிட பின்தங்கியுள்ளதைப் பற்றி யாரும் கவலை கொள்வாரில்லை. இவ்விமரிசனக் கட்டுரையில் மதுரை பின் தங்க ஆரம்பித்தமைக்கான குறிப்பு காணப்படுகிறது.

No comments: