இந்திய ஊழல் சாதனை
இந்த ஊழல் முன் நடந்தவற்றையெல்லாம் எடுத்து விழுங்கிவிட்டது. இத்தனை கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளது என்று யாராலும் சரியாகச் சொல்லிவிட முடியுமா என்று இன்னும் தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் தொகை ஏறிக்கொண்டேபோகிறது. சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்களும் புதிதாக வெளிச்சத்துக்கு வந்துகொண்டே உள்ளன. இவ்வரலாற்று ஊழல் தொடர்பான விஷயங்களை இங்கே தொகுத்து வருகின்றனர்.
வேலிகளே ஒவ்வொரு மாநிலத்தின் 'பயிர்'களையும் மேய ஆட்டுக்காரனுக்கு உதவியுள்ளன. என்னே ஒரு ஒற்றுமை இதில், அட அட! போடுங்க ஒரு பெரிய சல்யூட். காசைக் கொடுத்தால் தான் காக்கும் நகரங்களையேகூட விற்றுவிடுவார்கள் போலுள்ளது. அந்த அளவிற்கு ஊழல் தொகைகளெல்லாம் கோடிகளில் புழங்குவது சர்வ சாதாரணமாகிவிட்டது; ரூபாய்க்கு மதிப்பே இல்லையோ! ம்... அப்புறம், தமிழகத்தின் பங்கு மாத்திரம் இல்லாமல் இருந்தால் எப்படி, இங்குள்ளவர்கள் மட்டும் அவ்வளவு சளைத்தவர்களா என்ன!
இவ்வளவு பெரிய ஊழலையும் பத்தோடு பதினொன்றாக எடுத்துக் கொண்டு மறுநாள் வேலையைப் பார்க்க நம்மால் மட்டுமே முடியும். "இந்தியா ஒளிர" வேண்டாமா!
படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...
Monday, February 23, 2004
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment