படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Sunday, February 29, 2004

"தன்-சா-வூர்"

மகாமகச் செய்திகளால் கும்பகோணம் அடிக்கடி கண்ணில் தென்படுகிறது. கும்பகோணம் என்றதும் மகாமகம் நினைவுக்கு வருகிறதோ இல்லையோ ஸ்ரீனிவாச ராமானுஜன் வருகிறார். இந்தியா, உலகிற்கு அளித்த பொக்கிஷங்களில் ஒருவரான அவரது வரலாற்றை Robert Kanigel என்பவர் The Man Who Knew Infinity - A life of the genius Ramanujan எழுதிய புத்தகத்தில் முன்பு படித்தது. கும்பகோணத்தில் தொடங்கி, சென்னை, கேம்பிரிட்ஜ் என்று ராமானுஜன் வாழ்வில் வரும் பல ஊர்களையும், பல மனிதர்களையும், நிகழ்ச்சிகளையும் விவரிக்கும் நேர்த்தியான ஒரு புத்தகம் இது.

"கொடிது கொடிது இளமையில் வறுமை" எவ்வளவு உண்மையானது ராமானுஜன் வாழ்வில்! நல்ல மனிதர்கள் சிலரால் உலகிற்கு அறியப்பட்டார். கடும் உழைப்பும், திறமையும் மட்டும் போதாது, அங்கீகாரம், சிபாரிசுகள், அதிர்ஷ்டம் எல்லாமும் வெற்றிபெறத் தேவைப்படுகின்றன. அன்றிருந்த சூழ்நிலைகளின் காரணமாக இளமையிலேயே உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டு அற்ப ஆயுளில் உயிர் துறந்திருக்கிறார். கணித உலகம் அவரை முழுமையாகப் புரிந்துகொள்ள இன்னும் முயன்று கொண்டுள்ளது.

(நோய்வாய்ப்பட்ட தன் வாழ்நாளின் கடைசி காலத்தில்கூட ஒருகட்டத்தில் அம்மேதை தஞ்சாவூரை நகையாக விளித்த வண்ணம்தான் மேலுள்ளது.)

No comments: