படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Sunday, February 26, 2006

நன்றி!

சன்னாசி, தாணு, தங்கமணி, தேன் துளி ஆகியோருக்கு முதலில் நன்றிகள் - இந்தியா செல்வதற்கு முன் (சென்ற டிசம்பர் கடைசி வாரத்தில்) எழுதியிருந்த பதிவில் (அழிக்கப்பட்டுள்ளது, பிறகு சொல்கிறேன்) வாழ்த்துச் சொன்னமைக்கு. அதை இவ்வளவு தாமதமாகச் சொல்வதற்கு வருத்தமும் தெரிவித்துக் கொள்கிறேன். ஊரில் இருந்தபோது மின்னஞ்சல்களைப் பார்க்க மட்டுமே இணையப்பக்கம் ஓரிரு முறை வரமுடிந்தது. திரும்பி வந்து சில வாரங்களாயினும் வேறு வேலைகள், ஆர்வமின்மையே அதிகமான இருந்தது.

சென்ற வார இறுதியில் தமிழ்மணத்தைப் பார்த்தபோது முற்றிலும் மாறியிருந்தது. மேலோட்டமாகப் பார்த்துவிட்டு, அப்படியே விட்டுவிட்டு வேறு வேலைகளைப் பார்க்கப் போய்விட்டேன். அவ்வப்போது ஒருசில பதிவுகளை மேலோட்டமாகப் பார்ப்பதோடு சரி. இன்று எப்படியோ மனது வந்து ப்ளாக்கர் அடைப்பலகையில் மாற்றங்களைச் செய்து தமிழ்மணத்தில் இணைந்து கொண்டாயிற்று. தொடர்ந்து எழுத முயல்வேன்.

அழிக்கப்பட்ட அப்பதிவைப் பற்றி: என்னுடைய பதிவை இன்றுதான் ஒழுங்காகத் திறந்து, பின்னூட்டங்களைப் பார்த்தேன். அதிர்ச்சிதான் காத்திருந்தது. காரணம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. 'போலி'யின் கைவரிசைதான். பிப்ரவரி 14ந் தேதியன்று படிக்க முடியாத ஒரு பின்னூட்டத்தை இட்டுச் சென்றுள்ளது. காரணம், நான் டோண்டு அவர்களின் பதிவில் பின்னூட்டம் இட்டுவிட்டேனாம்!! எப்பொழுது என்று எனக்கே தெரியாது! அப்படியே இட்டிருந்தாலும், அதற்காக இப்படியா?! மனநிலை பாதிப்பின் வெளிப்பாடுகள், பாவம்!