படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Monday, November 14, 2005

சிறை-விவசாயி

என்னய்யா நடக்கிறது நாட்டில்?! ஆயிரம் பேர் சிறைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி தங்களுக்கு வேண்டியவர்களை 'விடுவித்துச்' செல்வதென்பதை என்னவென்று சொல்வது? தாக்குதல் திட்டங்களைப் பற்றிய செய்திகளைப் படிக்கும்போது அதுபோன்றவைகளைக் காட்டும் சினிமாக்கள் தோற்றுவிடவேண்டும் போலுள்ளது. உளவு அமைப்புகள் என்பதே அங்கு இல்லையா? இல்லை, எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் இருக்கிறார்களா? பிகார் போன்ற சில மாநிலங்களில் மக்களை வளரவிடாமல் தடுக்கும் சமூக நோய் ஆழப் பரவியுள்ளது. அவைகளுக்குத் தீர்வு காணும் வரையில் இது போன்ற அவலங்கள் நடந்து கொண்டேதானிருக்கும்.

திறந்து கிடந்த சிறைக்குள்ளிருந்து தப்பிச் செல்ல விரும்பாமல் அங்கேயே சிலரும், தாக்குதலின் போது உயிர் பிழைக்கத் தப்பி விட்டு மீண்டும் சிறைக்கே வந்தோரும் இருக்கிறார்களாம். இதை எந்த வகையில் சேர்ப்பதென்று தெரியவில்லை.

-----------

ஒரு விவசாயிதான் விவசாய நிலத்தை வாங்க வேண்டுமென்று மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டமுள்ளதாம், இன்றுதான் கேள்விப்படுகிறேன். "அமிதாப்பச்சன், நீங்கள் நடிகரா, விவசாயியா? முதலில் தெளிவுபடுத்துங்கள்". பாவம் அமிதாப், இப்படியெல்லாம் கஷ்டமான கேள்வியைக் கேட்கலாமா? ஒருவர் தான் செய்யும் தொழிலை நிரூபிக்கச் சான்றிதழைக் கூடப் பெறலாமோ! ஒன்னும் தெரியமாட்டேங்குது போங்க :(

No comments: