படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Sunday, May 02, 2004

எழுத்துச் சீர்திருத்தம்!

தமிழ் எழுத்துகளில் முன்பெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக தூவப்பட்டுக் கொண்டிருந்த ஆங்கில வார்த்தைகள், மெல்லமெல்ல அங்கிங்கெணாதபடி எங்கும் நிரம்பத் துவங்கியது; அதன் 'வளர்ச்சி' தொடர்ந்துகொண்டும் உள்ளது. தமிழின் இவ்'வளர்ச்சி'க்கு பத்திரிக்கைகள் ஆற்றிய, ஆற்றும் தொண்டு மகத்தானது. அவ்வரிசையில் மற்றுமொரு மைல்கல் - ஆங்கில (ரோமன்) எழுத்துகளிலேயே தமிழை எழுத ஆரம்பிப்பது. எப்படியென்றால் - "Siரிப்பு Maaமே, Siரிப்பு!" (ஆனந்த விகடன் - 05.05.04 இணையப்பதிப்பு). பிறகு உயிர், மெய், உயிர்மெய்யெல்லாம் தேவையில்லை; அனைத்தையும் இருபத்தாறு எழுத்துகளுக்குள் அடக்கிவிடலாம். தமிழில் 'எழுத்துச் சீர்திருத்தம்' நடைமுறைக்கும் வந்துவிடும். பொறுங்கள் தமிழர்களே, இது முழுமைப்பட்டு பட்டிதொட்டியெங்கும் வந்து சேருவதற்கு இன்னும் சில பதிற்றாண்டுகளே தேவை. கணினியாளர்கள் டிஸ்கி, யுனிகோடு முதலியவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டு மண்டையை உடைத்துக்கொள்ளவும்வேண்டியதில்லை.

[திருத்தங்கள்: 04.05.2004 - Siரிப்பு Maaமே, Siரிப்பு! மற்றும் ஆனந்த விகடன் ஆகியவற்றிற்கான சுட்டிகள் சேர்க்கப்பட்டன.]

No comments: