படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Thursday, May 06, 2004

விடுமுறை

கடந்த சில நாட்களாக ஊருக்குப் போக வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்ததால் வலையில் எதையும் பதிக்க முடியவில்லை. ஒரு வழியாக நேற்று மூட்டை முடிச்சுகளை விமான நிலையத்தில் கொண்டுபோய் வைத்துவிட்டு வந்தாயிற்று. இந்த 'ப்ரி-செக்இன்' வசதியால் போகும் நாளன்று அதிக சிரமப்படவேண்டியதில்லை. இருந்தாலும் எல்லாவற்றையும் எடுத்துவைப்பது, அஞ்சல் நிலையத்தில் கடிதங்களை வைத்திருக்க வேண்டி எழுதிக் கொடுப்பது, வீட்டில் ஏதாவது செடிகள் இருந்தால் தெரிந்தவர்களிடம் பார்த்துக்கொள்ளச் சொல்வது, அது இது என்று அப்பப்பா...!

ஒன்டிக்கட்டையாக இருந்த காலத்தில் எல்லா சமாச்சாரங்களையும் ஒருநாளில் முடித்துவிடலாம். இம்முறை முதல்தடவையாக குழந்தையையும் எடுத்துச் செல்வதால் கேட்கவே வேண்டாம். போதாதற்கு லேசான தூறல் வேறு. இன்னும் ஒரு சில மணி நேரத்தில் விமான நிலையம் செல்லவேண்டும். முதன்முறையாக சென்னை வழியாக கோவைக்குச் செல்கிறேன். வழக்கமான வழி மும்பை (இவ்விமான நிலையத்தைப் பற்றி எனக்கு இன்னும் நல்ல அபிப்பிராயம் வரவில்லை). நான்கு வார விடுமுறையின்போது ஊரில் உள்ள சமயத்தில் வலைப்பதிவுகளைப் படிக்கவோ, எழுதவோ முடியுமா என்று தெரியவில்லை, முயற்சி செய்கிறேன்.

அன்பான வேட்பாளப் பெருமக்களே! எங்கள் வீட்டின் சார்பாக உங்கள் யாரேனுக்கும் இரண்டு 'பொன்னான வாக்குகள்' கண்டிப்பாக உண்டு. வருவதற்குள் ஆட்களை வைத்து 'கள்ள ஓட்டைப்' போட்டுவிடாதீர்கள்!

No comments: