படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Saturday, May 01, 2004

கற்கால மனிதர்கள் இன்னும் வாழ்கிறார்கள்!


நாய்கள்கூட இவ்வாறு செய்யுமா?

என்ன பாவம் செய்தார்கள ஈராக்கிய மக்கள்? தொடர்ச்சியாகப் பத்தாண்டுகளுக்கும் மேலாக பொருளாதாரத் தடைகளால் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளும், மக்களும் சரியான உணவு, மருந்தின்றிக் கொல்லப்பட்டனர். பிற்பாடு பேரழிவு ஆயுதங்களை அழிக்கிறோம் (இவர்களிடம் இல்லாதாதா இல்லை இவர்களால் உபயோகப்படுத்தப்படாததா?), கொடுமையான சர்வாதிகாரியை தூக்கி எறிந்து மக்களுக்கு விடுதலை அளிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு, நொடிந்துபோன நாடொன்றை மிக நவீனத் தொழில்நுட்பம் கொண்ட கருவிகள், படைகளால் கேவலமாக ஆக்கிரமித்து அட்டூழியம் செய்தனர்.

இப்போது அந்நாட்டு மக்களை அவமானப்படுத்தும் படலத்தை ஆரம்பித்துள்ளனர் சில ஜந்துகள். ஒன்றுமே செய்யாத ஓர் இளைஞனைப் பிடித்து எப்படியெல்லாம் சித்ரவதை செய்துள்ளனர்! சதாமைக் கொடுமைக்காரன் என்று சொல்லிக்கொள்ளும் இவர்கள் எந்த வகையைச் சேர்ந்தவர்கள்? இவர்களுக்கிடையில் ஏதாவது வித்தியாசம் உண்டா?

No comments: