படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Tuesday, August 22, 2006

இசை ஆர்வலர்களுக்கு...

"இளையராஜாவின் திருவாசகம் சிம்பொனியை அளித்த சாந்தோம் தமிழ் மையம், Mozart Meets India என்னும் 60 நிமிட ஆல்பத்தை வெளியிட இருக்கிறார்கள். கர்னாடக சங்கீதத்தின் சங்கராபரணம், சிந்துபைரவி, காபி, பிலஹரி, பந்துவராளி, ஹம்ஸாநந்தி போன்ற ராகங்களை மேற்கத்திய இசையுடன் இழையூடவைத்து, பாம்பே ஜெயஸ்ரீ, ஓ.எஸ்.அருண், கத்ரி கோபால்நாத், எம்பார் கண்ணன், ஏ.கே.தேவி, எல்.கிஷோர்குமார் போன்றவர்களுடன், 75க்கும் மேற்பட்ட வாத்தியக் கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி ஒன்றை ஃபாதர் ஜகத் காஸ்பர்ராஜ் ஏற்பாடு செய்திருக்கிறார். இதற்கு இசையமைத்த நெல்லை ஜேசுராஜின் பெயரை இனி அடிக்கடி கேட்கப்போகிறோம். இது கர்னாடக சங்கீதத்தின் குவி மையமான மியூஸிக் அகாடமியில் ஒலிக்கவிருக்கிறது. ஒரு மியூஸிக் வீடியோவும், ஓப்பெராவும் அளிக்கவும் திட்டமிட்டுள்ளார்கள்." என்று எழுத்தாளர் சுஜாதா தனது 'கற்றதும்... பெற்றதும்...' பகுதியில் (ஆனந்த விகடன்-20.08.2006) எழுதியுள்ளார். இசை நிகழ்ச்சி நடக்கப்போகும் மற்றும் 'ஆல்பம்' கிடைக்கப்போகும் தேதிகள் குறித்து ஒன்றும் தெரியவில்லை.

No comments: