நேற்றைய தொலைக்காட்சிச் செய்தியொன்றில் ஐக்கிய அரபுக் குடியரசுத் தலைவர் ஷேக் ஜாயத் அவர்கள் உடல் நலம் குன்றியிருப்பதாகச் சொன்னார்கள். இன்று காலை, உடன் பணிபுரியும் அரபு நாட்டைச் சார்ந்த நண்பர் ஒருவர் குடியரசுத் தலைவர் இறந்துவிட்ட தகவலைக் குறுஞ்செய்தி வாயிலாக மிகவும் சோகத்துடன் பகிர்ந்து கொண்டார். நாள் முழுவதும் பலமுறை ஒரு நல்ல மனிதரை நாடு இழந்து விட்டதே என்று வருத்தப்பட்டுக் கொண்டேயிருந்தார்.
1971-ல் அந்நாடு உருவானது முதல் ஷேக் ஜாயத் அதன் தலைவராக இருந்துள்ளார். தன்நாட்டு மக்களின் மதிப்பிற்கும், உண்மையான அன்பிற்கும் பாத்திரமானவர். எண்ணெய் வளத்தால் கிடைத்த செல்வத்தின் பயனை நாடு முழுவதிற்கும் கிடைக்கச் செய்ததோடு மட்டுமன்றி, மிகக் குறைந்த காலத்தில் இந்நாடு மகத்தான வளர்ச்சி கண்டது இவரது ஆட்சியின் கீழ்தான்.
பி.கு.: இன்றைய பஹ்ரைன், கத்தார் ஆகிய நாடுகளுக்கும் 1971-ல் ஐக்கிய அரபுக் குடியரசில் சேர்ந்து கொள்ள விடப்பட்ட அழைப்பை, ஏதோ காரணத்தால் அவை ஏற்க மறுத்துவிட்டனவாம்.
No comments:
Post a Comment