படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...

Friday, February 19, 2010

ரயில்வே பராமரிப்புப் பணி தகவலறிவிப்பு

அஞ்சல் பெட்டியில் ரயில்வேயிலிருந்து வந்த தகவல் அறிவிப்பு தாளொன்று கிடந்தது.

மதிப்பிற்குரிய பகுதிவாழ் குடிமக்களே,

வரும் 28ந் தேதி முதல் மார்ச் 19 வரை தண்டவாளப் பகுதியில் பராமரிப்புப் பணிகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொள்கிறது. இதன்போது கம்பிவடங்கள் புதிதாக இடப்படும்.

ரயில் போக்குவரத்துக் காரணங்களையொட்டி இப்பணிகளை இரவு நேரங்களில் மட்டுமே மேற்கொள்ள முடியும். திட்டமிடப்பட்டுள்ள இவ்விரவுப் பணியின் எப்பகுதிகள் அதிக ஒலி,இரைச்சல் கொண்டதாயிருக்கும் என்பதைப் பின்பக்கத்திலுள்ள அட்டவணையில் காணமுடியும். ஏதேனும் எதிர்பாராத பணியைக் குறைந்த அவகாசத்தில் செய்ய வேண்டி நேரிட்டால் மேற்குறிப்பிட்ட காலத்திட்டத்தில் சிறிய மாறுதல்கள் ஏற்படலாம் என்பதையும் கவனத்தில் கொள்க.

இப்பணிகளின் போது ஏற்படும் சத்தத்தை முடிந்த அளவு குறைக்க முயற்சிகளை மேற்கொள்கிறோம். இதனால் தங்களுக்கு ஏற்படும் இடையூறுக்கு வருந்துகிறோம்.

மேற்கொண்டு எழும் கேள்விகளுக்கு பணியிடக் கட்டுமானத்தலைவரைப் பின்வரும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இங்ஙனம்,
கம்பிவடப் பிரிவுத்தலைவர் மற்றும்
பணியிட கம்பிவட அணித்தலைவர்

No comments: