<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-6269013</id><updated>2011-10-02T14:55:44.990+02:00</updated><category term='மொழி'/><category term='ரயில்'/><category term='குழந்தைகள்'/><category term='சுவிஸ்'/><category term='வாழ்க்கை'/><category term='நகரியல்'/><category term='ஜூரிக்'/><category term='தகவல்'/><category term='வானொலி'/><title type='text'>நினைவோடை</title><subtitle type='html'>படித்தவை, பார்த்தவை, கேட்டவை, எண்ணியவை...</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>194</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-6064666044362148922</id><published>2010-03-21T16:35:00.003+01:00</published><updated>2010-03-21T17:56:39.417+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வானொலி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><title type='text'>ஆல் இண்டியா ரேடியோ-1</title><content type='html'>இன்றுள்ளதைப் போல் நினைத்தவுடன் ஒரு பொருள் கிடைத்தோ, வாங்கியோவிடக்கூடிய காலமல்ல அது. காலணி, மிதிவண்டி, வானொலிப்பெட்டி என்று எதுவேண்டுமானாலும் இருக்கலாம். அதனாலேயோ என்னவோ ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு மதிப்பும், சொல்லக்கூடிய வாழ்நாள் காலமும் இருந்தது. விளைவாக அப்பொருளும், அது சார்ந்த நிகழ்வுகளும் ஏதோவொரு வகையில் நினைவுகளாகத் தொடர்ந்து கொண்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;80களின் துவக்கத்தில் வீட்டிற்கு முதல் வானொலி அண்ணன் வாயிலாக வந்தது. அதற்கு முன்பு ஒன்று இருந்ததாவென்று கேட்டுக் கொண்டதில்லை, எனக்கு அதுதான் முதலாகத் தெரிந்தது. அளவான வடிவத்திலிருந்த ஃபிலிப்ஸ் நிறுவனத் தயாரிப்பு. எப்பொருள்களுக்கும் அதன் ஆரம்ப காலத்தில் கிடைக்கும் அளவுக்கு மீறிய கவனிப்பு இதற்கும் கிடைத்தது. வேகமாகத் திருப்பாதே, மெதுவாக 'பேன்டை' மாற்று, நிறுத்தியதும் மின்சாரத்தைத் துண்டி......என இன்று நாம் கொடுத்துக் கொண்டிருக்கும் அத்தனை அதட்டல் அறிவுரைகளை அன்றைக்கு நமக்கும் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் பிறப்பதற்கு முன்பு ஆகாசவானி என்று சொல்லிக்கொண்டிருந்தார்களாம். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக அது ஆல் இண்டியா ரேடியோவாகிவிட்டது. கேட்டதில் நிறைய கோவை வானொலிதான். கரகரவில்லாமல் நன்றாகக் கேட்டதன் காரணமாயிருந்திருக்காலாம். ஆல் இண்டியா ரேடியோ, கோயமுத்தூர் வானொலி நிலையம், 300.3m, 999khz அலைவரிசையில் இன்றைய நிகழ்ச்சிகளைக் கேட்கலாம் என்று அதிகாலையில் ஒரு குரலுடன் நாள் துவங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறளோ, பக்தி சிந்தனையொன்றோ சொல்வார்கள். அதற்குப் பிறகு பாமாலை வரும். இதைப் பலகாலம் பாலாமை எனச் சொல்லிக்கொண்டு திரிந்தேன். இரண்டு பாட்டுகள் இந்துக்களுக்கு, ஒன்று முஸ்லிம்களுக்கும், ஒன்று கிறிஸ்தவர்களுக்குமென நன்றாகவே இட ஒதுக்கீட்டைச் செய்திருந்தனர். 6.30க்கு விவசாயிகளுக்கான சில தகவல்கள் 10-15 நிமிடங்களுக்கு வரும். தொடர்ந்து மாநிலச் செய்திகளுக்கு சென்னை அஞ்சல் என்று சொல்லிவிடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்ச்சி நிரல் சொல்லிவிட்டு 7.15 வரை நிலைய வித்துவான்களை வைத்து ஏதேனும் கச்சேரி செய்வார்கள். பாடிக் கொண்டிருக்கும் போதே 'ஆகாசவானி, செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண் சுவாமி' அதற்கப்புறம் செய்திகளைவிட அக்குரலே 10 நிமிடங்களுக்கு கேட்போரைக் கட்டிப் போட்டுவிடும். ராஜாராமும் நன்றாகப் படிப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி முடிந்ததும், வட்ட முகம், நீண்ட கழுத்து, பூப்போட்ட சட்டையுடன் காணாமல் போனவரைக் கண்டுபிடித்துத் தெரிந்தால் வேறெங்கோ சொல்லிவிடச் சொல்வார்கள். அடுத்த அரைமணி நேரத்திற்கு இளையபாரதம் போன்று ஒரு நிகழ்ச்சி. இச்சமயத்தில் பெரும்பாலான நேரம் திருச்சி நிலையத்திற்குத் திரும்பியிருப்போம், நாளின் முதல் திரைப்பாடல் அங்கு ஒலிக்கும். அரிதான சமயங்களில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபன தமிழ்ச் சேவை.&lt;br /&gt;&lt;br /&gt;8 மணி முதல் 8.20 வரை இந்தி, ஆங்கில செய்திகளை டெல்லியிலிருந்து வாசிக்கச் செய்து வானொலிக்கு ஓய்வு கொடுப்பார்கள். மீண்டும் கோவை நிலையத்தில் திரைப்பாடல்களுடன் குதூகலமாக 40 நிமிடங்கள் செல்லும். பிற்காலத்தில் வந்த விளம்பரங்கள் பாடல்களின் எண்ணிக்கையைக் குறைத்திருந்தன. காலை முடிந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-6064666044362148922?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/6064666044362148922/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=6064666044362148922' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/6064666044362148922'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/6064666044362148922'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2010/03/1.html' title='ஆல் இண்டியா ரேடியோ-1'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-6303463601259964785</id><published>2010-02-19T22:24:00.007+01:00</published><updated>2010-02-19T23:20:36.293+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரயில்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தகவல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுவிஸ்'/><title type='text'>ரயில்வே பராமரிப்புப் பணி தகவலறிவிப்பு</title><content type='html'>அஞ்சல் பெட்டியில் ரயில்வேயிலிருந்து வந்த தகவல் அறிவிப்பு தாளொன்று கிடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;மதிப்பிற்குரிய &lt;/span&gt;பகுதிவாழ் குடிமக்களே,&lt;br /&gt;&lt;br /&gt;வரும் 28ந் தேதி முதல் மார்ச் 19  வரை தண்டவாளப் பகுதியில் பராமரிப்புப் பணிகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொள்கிறது. இதன்போது கம்பிவடங்கள் புதிதாக இடப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;ரயில் போக்குவரத்துக் காரணங்களையொட்டி இப்பணிகளை இரவு நேரங்களில் மட்டுமே மேற்கொள்ள முடியும். திட்டமிடப்பட்டுள்ள இவ்விரவுப் பணியின் எப்பகுதிகள் அதிக ஒலி,இரைச்சல் கொண்டதாயிருக்கும் என்பதைப் பின்பக்கத்திலுள்ள அட்டவணையில் காணமுடியும். ஏதேனும் எதிர்பாராத பணியைக் &lt;span&gt;&lt;/span&gt; குறைந்த அவகாசத்தில் செய்ய வேண்டி நேரிட்டால் மேற்குறிப்பிட்ட காலத்திட்டத்தில் சிறிய மாறுதல்கள் ஏற்படலாம் என்பதையும் கவனத்தில் கொள்க.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பணிகளின் போது ஏற்படும் சத்தத்தை முடிந்த அளவு குறைக்க முயற்சிகளை மேற்கொள்கிறோம். இதனால் தங்களுக்கு ஏற்படும் இடையூறுக்கு வருந்துகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கொண்டு எழும் கேள்விகளுக்கு பணியிடக்&lt;span&gt;&lt;/span&gt; கட்டுமானத்&lt;span&gt;தலைவரைப் பி&lt;/span&gt;ன்வரும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்ஙனம்,&lt;br /&gt;கம்பிவடப் பிரிவுத்தலைவர் மற்றும்&lt;br /&gt;பணியிட கம்பிவட அணித்தலைவர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-6303463601259964785?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/6303463601259964785/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=6303463601259964785' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/6303463601259964785'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/6303463601259964785'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2010/02/blog-post.html' title='ரயில்வே பராமரிப்புப் பணி தகவலறிவிப்பு'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-8941351031831163433</id><published>2010-01-01T20:39:00.004+01:00</published><updated>2010-01-01T20:46:07.008+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குழந்தைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுவிஸ்'/><title type='text'>சுவிஸ் நாட்டு நடப்பு-குழந்தைக் கடத்தல் 'அலர்ட்'</title><content type='html'>குழந்தைகள் கடத்தப்பட்டால் நாடு முழுவதும் அறியப்படும் வகையிலான 'அலர்ட்'  முறை இன்றிலிருந்து (01.01.2010) சுவிஸில் நடைமுறைக்கு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இம்முறைப்படி, கடத்தல் பற்றிய அறிக்கையைக் கிடைக்கப் பெற்றவுடன் மாநில காவல்துறையினர் தலைநகர் பெர்னிலுள்ள மத்திய காவல் அலுவலகத்திற்குத் தெரியப்படுத்துவர். அங்கிருந்து செய்தியானது கார் வானொலி அறிவிப்புகள், நெடுஞ்சாலை மின்தட்டிகள், ரயில் மற்றும் விமான நிலைய ஒலிபெருக்கி போன்றவற்றில் பரப்பப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;கடத்தல் நிகழ்ந்த ஆரம்ப மணிகளில் கடத்தியோர் நகர்விலே இருக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாலும், இதுபோன்ற அறிவிப்புகளால் பொதுமக்கள் யாரேனும் அவர்களைப் பார்த்து தகவல் சொல்லும் வாய்ப்பிருப்பதாலும் இந்த முறை பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கா, ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில் ஏற்கனவே சில ஆண்டுகளாக நடைமுறையிலுள்ள இம்முறையானது அங்கு நல்ல பயனளிப்பதால் இங்கும், கடந்த ஆண்டுகளில் நிகழ்ந்த மோசமான கடத்தல் நிகழ்வுகளைத் தொடர்ந்து, நடைமுறைப்படுத்தப் பெற வேண்டி அழுத்தங்கள் எழுந்தன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-8941351031831163433?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/8941351031831163433/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=8941351031831163433' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/8941351031831163433'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/8941351031831163433'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2010/01/blog-post.html' title='சுவிஸ் நாட்டு நடப்பு-குழந்தைக் கடத்தல் &apos;அலர்ட்&apos;'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-8610589784646152432</id><published>2009-12-21T16:39:00.001+01:00</published><updated>2009-12-21T16:42:32.018+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொழி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுவிஸ்'/><title type='text'>பிரச்சனைகள் பலவிதம்</title><content type='html'>இல்லாதவனுக்குத் தேடல் பிரச்சனை, இருப்பவனுக்குக் காப்பது பிரச்சனை. ஓன்று பிரச்சனைகளை தேடிக் கொள்கிறோம் இல்லை அவை வந்து சேர்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சுவிட்சர்லாந்து நிலத்தால் சூழப்பட்ட நாடு என்பதை அறிவோம். அதன் எல்லைகளின் திக்குக்கேற்ப மொழிகளும் அமைந்துள்ளன. வடக்கு, கிழக்கு மற்றும் மையப்பகுதிகளில் ஜெர்மனும், மேற்கில் ஃபிரெஞ்சும், தெற்கில் இத்தாலியனும், கிழக்கில் வெகு சொற்ப அளவில் ரொமான்ட்சும் பேச்சு வழக்கிலுள்ளன. பெரும்பான்மை மொழியாக இருப்பது ஜெர்மன். ஜெர்மனை டாயிட்ச் (Deutsch) என்றே சொல்வார்கள். டாயிட்சும், டச்சும் (Dutch) வெவ்வேறு மொழிகள். முன்னது ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா முதலான நாடுகளிலும், பின்னது ஹாலந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளிலும் வழக்கிலுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;சுவிஸிலும் வட்டார வழக்குகள் உண்டு (வட்டார வழக்கில்லா மொழி இருக்குமாவென்று தெரியவில்லை). ஜூரிக் மாநிலத்தில் (மாநிலம் இங்கு கான்டோன் என்று சொல்லப்படுகிறது) பேசப்படுவது ஜூரி டாயிட்ச் என்றும், தலைநகர் உள்ள பெர்ன் (Bern) மாநிலத்தில் வழங்குவது பெர்ன் டாயிட்ச், இத்யாதி என வட்டாரத்திற்கு ஏற்றவாறு பேசப்படுகிறது. ஒன்றுக்கொன்று பலுக்கலில் வேறுபடுவதால் சில சமயங்களில் ஓரு வட்டாரத்தினரது சில சொற்களும், சொலவடைகளும் மற்றவருக்கு எளிதில் விளங்கிவிடுவதில்லை. இந்நிலையில் வேற்று நாட்டவரின் பாடு சொல்லித் தெரியவேண்டியதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெர்மன் நாட்டவரும் இதில் விதிவிலக்கல்ல. துவக்கத்தில் சற்றே தடுமாறினாலும் காலப் போக்கில் சமாளித்துக் கொள்கின்றனர். நல்ல வாழ்க்கைத் தரம், பணி, குறைந்த வரி (அவர்கள் நாட்டைக் காட்டிலும்) முதலான காரணங்களுக்காக ஜெர்மனியிலிருந்து சுவிஸிற்கு இடம் பெயர்பவர்கள் நிறைய. மருத்துவம், வங்கி, போக்குவரத்து, ஊடகம், மார்கெட்டிங், விற்பனை, பொறியியல் என சகல துறையைச் சார்ந்தவர்களும் வந்து செல்கின்றனர். அயல்நாடுகளிலிருந்து வந்து சுவிஸில் குடியேறுபவர்களில் ஜெர்மானியர் அதிக அளவில் இருப்பதாக ஓரு கணக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களின் மொழி, டாயிட்சாக இருப்பினும் (அதை உயர் டாயிட்ச் என்பார்கள்), உள்ளூர் மொழியிலிருந்து தெளிவாக வேறுபடுவது கண்கூடு. மொழியைப் பயன்படுத்துவதில் உள்ள வேறுபாட்டாலோ அல்லது நிறைய வேலைகளை வந்து ஆக்கிரமித்துக் கொள்கின்றனர் என்ற ஓரு பொதுப்புத்தியாலோ ஜெர்மானியர்கள் மேல் சிவிஸில் ஓரு சாராரிடம் ஓரு வகையான வெறுப்புணர்வுண்டு, அவ்வளவாக வெளிக்காட்டிக் கொள்ளப்படுவதில்லையாயினும். முன்பு பழைய யுகோஸ்லாவியர்களின்பால் இவ்வகையான வெறுப்பிருந்ததாகச் சொல்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீப காலத்தில் இவ்வெறுப்பு சிலருக்கு நேரடியாக மிரட்டல் கடிதங்கள் வந்து சேருமளவிற்கு வளர்ந்துவிட்டதாகச் செய்தி. அசம்பாவிதங்கள் ஓன்றுமில்லையென்றாலும் சிலர் அஞ்சி வாழவேண்டியுள்ளது. இப்பிரச்சனையால் நாட்டிற்குத் திரும்பியோரும் உளராம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரச்சனைகள் இல்லாத மனிதனோ, இடமோ உண்டா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-8610589784646152432?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/8610589784646152432/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=8610589784646152432' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/8610589784646152432'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/8610589784646152432'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2009/12/blog-post.html' title='பிரச்சனைகள் பலவிதம்'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-5169493720377489575</id><published>2009-04-19T23:16:00.003+02:00</published><updated>2009-04-19T23:44:52.942+02:00</updated><title type='text'>நல்லது செய்தல் ஆற்றீராயினும்...</title><content type='html'>தமிழகத்து அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக நடத்திக் கொண்டிருக்கும் கூத்துகள் இலங்கையில் நிகழும் படுகொலைகளுக்குச் சற்றும் குறைவில்லாதது.&lt;br /&gt;&lt;br /&gt;சுயலாபத்தையே முதன்மையாகக் கருதி போட்டிக் குழுக்களை &lt;span&gt;அமைத்துக்கொண்டு&lt;/span&gt; அடுத்தவரை ஏசியும் தூற்றியுமே இனப்பற்றைக் காப்பதாகச் சொல்லி காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.  அங்கோ நூற்றுக்கணக்கான  உயிர்கள் தினமும் பலியாகின்றன. இங்கு வெற்றுக் கூச்சல்களுக்குக் குறைவில்லை; அதனால் இதுவரை சாதித்ததும் ஒன்றும் இல்லை.  போதாக்குறைக்குத் தேர்தல் வேறு வந்து இனப்பற்றை இன்னும் வளர்த்துவிட்டுவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கொடுமைகள் என்று நிற்கும்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-5169493720377489575?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/5169493720377489575/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=5169493720377489575' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/5169493720377489575'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/5169493720377489575'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2009/04/blog-post.html' title='நல்லது செய்தல் ஆற்றீராயினும்...'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-6921768382055481667</id><published>2009-03-15T00:39:00.002+01:00</published><updated>2009-03-15T00:42:29.562+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகரியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜூரிக்'/><title type='text'>நகர பரிபாலனம்</title><content type='html'>சில வாரங்களுக்கு முன்பு ஜூரிக் நகர நிர்வாகத்திலிருந்து ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்கள். அதில், வரிசைமுறையேதுமின்றி ஓர் அளவீடு/ஆய்வுக்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரின் சில ஆயிரம் குடியிருப்போர்களில் நானும் ஒருவனென்றும், வரும் நாட்களில் ஓர் அமைப்பு/நிறுவனமொன்றின் வாயிலாக கேட்கப்படும் வினாத்தொகுப்பிற்கு முடிந்தால் விடையளித்து உதவும்படி குறிப்பிட்டிருந்தனர். வெள்ளி (13.03.09) மாலை பெண்மணியொருவர் தொலைபேசியினூடாகத் தொடர்பு கொண்டு பல்வேறு வினாக்களைக் கேட்டிருந்தார். கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் நடந்த அக்கேள்வியாடலில் நினைவிலுள்ள சில:&lt;br /&gt;&lt;br /&gt;-நகரில் நீங்கள் முக்கியமாக விரும்புவதை எவற்றை?&lt;br /&gt;-நகரில் நீங்கள் முக்கியமாக விரும்பாதவை எவை?&lt;br /&gt;&lt;br /&gt;-நகரின் பொருளாதார நிலை எவ்வாறு உள்ளது?&lt;br /&gt;-இன்னும் ஓரிரு ஆண்டுகளில் அதன் நிலைமை எவ்வாறு இருக்கும்?&lt;br /&gt;-அதையொட்டி உங்களது பொருளாதார நிலையின் தாக்கத்தின் மதிப்பீடு என்ன?&lt;br /&gt;-நகரானது போதிய அளவு வேலைவாய்ப்புகளை வழங்குகிறதா?&lt;br /&gt;-கல்வி மற்றும் மேற்படிப்பிற்கான வசதிகள் எவ்விதத்தில் உள்ளன?&lt;br /&gt;&lt;br /&gt;-நகர நிர்வாகம் குறித்த உங்கள் மதிப்பீடு என்ன?&lt;br /&gt;-உங்கள் பகுதி நகர மன்ற உறுப்பினர்கள் உங்களைச் சரியாகப் பிரதிநிதிப்படுத்துகிறார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;-நகரத் தூய்மை பற்றிய மதிப்பீடு?&lt;br /&gt;-துப்புரவு சரியாக நடக்கிறதாகக் கருதுகிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;-நகரில் போதிய பசுமை உள்ளதாகக் கருதுகிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;-நகரின் பொதுப் போக்குவரத்து வசதிகள் குறித்த மதிப்பீடு என்ன?&lt;br /&gt;-பேருந்து, ட்ராம் போன்றவைகள் இடநெரிசலைக் கொண்டுள்ளனவா?&lt;br /&gt;-நீங்கள் அடைய வேண்டிய இடத்தை ஒரே வண்டியில் சென்றடைய முடிகின்றதா/இல்லை இடையில் எத்தனை மாற்றல்கள் தேவைப்படுகின்றன?&lt;br /&gt;-போக்குவரத்து நிறுத்தங்கள் உங்களது இடத்தின் அருகிலேயே உள்ளனவா?&lt;br /&gt;-பெயர்ப்பலகைகள் சரியான தகவல்களைக் கொண்டுள்ளனவா?&lt;br /&gt;-போக்குவரத்து சரியான கால அட்டவணைப்படி இயங்குகின்றதா?&lt;br /&gt;&lt;br /&gt;-பாதசாரிகள் இலகுவாகச் செல்ல முடிகிறதா?&lt;br /&gt;-மிதிவண்டி ஓட்டிகளால் ஏதேனும் இடைஞ்சல் ஏற்படுகிறதா?&lt;br /&gt;-சாலையைக் கடக்கும்போது ஏதேனும் பயம் இருக்கிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;-எத்தனை நாட்களுக்கொருமுறை மிதிவண்டியை பயன்படுத்துகிறீர்கள்?&lt;br /&gt;-மிதிவண்டிகள் செல்வதற்குப் போதுமான சிறப்பு வழித்தடங்கள் உள்ளனவா/போதுமா?&lt;br /&gt;-மிதிவண்டிகள் நிறுத்தப் போதுமான இடங்கள் உள்ளனவா?&lt;br /&gt;&lt;br /&gt;-தனியார் போக்குவரத்து (கார் முதலானவை) நிலை மற்றும் வசதிகள் குறித்தான மதிப்பீடு என்ன?&lt;br /&gt;-வாகன நிறுத்த வசதிகள் போதுமான அளவு உள்ளதா?&lt;br /&gt;-வாகன ஓட்டிகள் சாலை விதிமுறைகளைச் சரியாக மதிக்கிறார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;-குழந்தைகளுக்கான வசதிகளை எங்ஙனம் மதிப்பீடு செய்வீர்கள்?&lt;br /&gt;-பள்ளி, நர்சரி போன்றவைகளைக் குறித்தான மதிப்பீடு என்ன?&lt;br /&gt;-குழந்தைகள் விளையாட போதுமான இடங்கள், பூங்காக்கள் உள்ளனவா?&lt;br /&gt;-நகரின் விளையாட்டு வசதிகள், நீச்சல்குளங்கள் குறித்தான மதிப்பீடு என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;-நீங்கள் வசிக்கும் இடங்களில் பொதுமக்கள் கூடுவதற்கான வசதிகள் பற்றிய மதிப்பீடு?&lt;br /&gt;&lt;br /&gt;-நகரின் கலை, கலாச்சார நிகழ்வுகளைப் பற்றிய மதிப்பீடு?&lt;br /&gt;-நகரில் சுற்றிப் பார்க்கப் போதுமான இடங்கள் உள்ளனவா?&lt;br /&gt;&lt;br /&gt;-இரவில் தனியாக நடந்து செல்லக் கூடிய நிலையைப் பற்றிய மதிப்பீடு&lt;br /&gt;-இரவில் தனியாகச் செல்லும் போது நகரின் ஏதேனும் இடங்களைத் தவிர்க்கின்றீர்களா?&lt;br /&gt;-அவ்வாறாயின், எத்தகைய இடங்களைத் தவிர்க்கிறீர்கள்?&lt;br /&gt;-கடந்த சில வருடங்களில் நீங்கள் ஏதேனும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறீர்களா?&lt;br /&gt;-காவல்துறை குறித்தான கருத்தென்ன?&lt;br /&gt;&lt;br /&gt;-உங்கள் வாழிடம் வசதியாக உள்ளதா?&lt;br /&gt;-எவ்வளவு காலமாக அவ்விடத்திலேயே வசிக்கிறீர்கள்?&lt;br /&gt;-வாழிடத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் மனதிற்கு மகிழ்வழிக்கிறதா?&lt;br /&gt;-வாழிடத்தைச் சுற்றியுள்ள ஒலியின் அளவு உங்களைப் பாதிக்கிறதா?&lt;br /&gt;-வாடகை குறித்த மதிப்பீடு யாது?&lt;br /&gt;&lt;br /&gt;-சூழியல் சீர்கேட்டைக் குறைக்க பின்வருவன போன்ற நடவடிக்கைகளை வரவேற்பீர்களா இல்லை எதிர்ப்பீர்களா:&lt;br /&gt;-கூடுதல் பெட்ரோல் கட்டணம்&lt;br /&gt;-கூடுதல் வாகன நிறுத்தக் கட்டணம்&lt;br /&gt;-நிலத்தடிப் போக்குவரத்து விரிவு&lt;br /&gt;...&lt;br /&gt;...&lt;br /&gt;-இதுகுறித்து உங்களது பரிந்துரைகள் யாவை?&lt;br /&gt;&lt;br /&gt;-இதுபோன்ற அளவீடு செய்யும் நடவடிக்கைகள் பயனுள்ளதாக இருக்குமெனக் கருதுகிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இங்ஙனம் மக்களுக்காக இயங்கும் நிர்வாகங்கள் அவ்வப்போது தங்கள் செயல்பாடுகளைப் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளும் ஆரோக்கியப் போக்கு மிகவும் வரவேற்பிற்குரியவை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-6921768382055481667?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/6921768382055481667/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=6921768382055481667' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/6921768382055481667'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/6921768382055481667'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2009/03/blog-post.html' title='நகர பரிபாலனம்'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-116997744392130694</id><published>2007-01-28T10:42:00.000+01:00</published><updated>2007-01-28T10:44:03.943+01:00</updated><title type='text'>திருப்பூரிலிருந்து நாகைக்கு?</title><content type='html'>நொய்யலின் தடுப்பணையொன்றில் பல காலம் சாயப்பட்டறைக் கழிவுநீர் நிரம்பி சுற்றுவட்டாரத்தில் உள்ள நிலத்தடி நீர்வளம் பாழ்பட்டது நாடறிந்த அவலம். உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி சாயப்பட்டறைகள் கழிவுநீரைச் சுத்திகரித்து வெளியில் விடவேண்டும். அவ்வாறு செய்யமுடியாத பட்டறைகள் சில மூடப்பட்டுள்ளன.  இந்நிலையில் இப்பிரச்சனைக்கு வேறொரு 'தீர்வை'க் கண்டுபிடித்துள்ளார்கள். சாயக் கழிவு நீரை (சுத்திகரித்து?) கடலில் கலக்கப் போகிறார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊரை கெடுத்தாயிற்று; உலகத்தைக் கெடுக்கத் தலைப்பட்டுவிட்டார்கள். இத்திட்டத்திற்குத் தேவைப்படும் &lt;br /&gt;ரூ.700 கோடியில் நாற்பது விழுக்காட்டை அரசே (மத்திய, மாநில) ஏற்றுக் கொள்ளுமென்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வளவு பெரிய தொகையைக் கொண்டு அப்பகுதியிலேயே நீர்ச் சுத்திகரிப்பு ஆலைகளை அமைக்க முடியாதா என்பது ஆச்சரியமாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவேளை இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் ஒப்புக்குச் சப்பானியாக சில நாட்களுக்குச் சுத்திகரிப்பு என்று போக்குக் காட்டிவிட்டு நிச்சயமாகக் கழிவுநீரை அப்படியே அனுப்பிவிடுவார்கள். அவ்வாறு செலுத்தப்படும் நீரின் அளவும் பலமடங்கு அதிகரிக்கும். கழிவுநீர்க் கலப்பால் கடல் வளம் சீரழியத்துவங்கும் போது உள் மற்றும் பன்னாட்டு அளவில் எதிர்ப்புக்குரல்கள் வரும் (அதற்கு முன்னமேயே கூட வரலாம்) சமயத்தில் வேறொரு தீர்வை நோக்கி ஓடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய 'தொழில் நலனிற்காக' என்றும் இருக்க வேண்டிய இயற்கை வளங்கள் சீரழிக்கப்படுவது தொடர்ந்து கொண்டே உள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-116997744392130694?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/116997744392130694/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=116997744392130694' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/116997744392130694'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/116997744392130694'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2007/01/blog-post.html' title='திருப்பூரிலிருந்து நாகைக்கு?'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-116317217073394788</id><published>2006-11-10T16:17:00.000+01:00</published><updated>2006-11-10T16:59:22.836+01:00</updated><title type='text'>பாலை</title><content type='html'>குழந்தைகள் அட்சய பாத்திரம்; அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு ஏதாவது இருந்துகொண்டே இருக்கிறது. தாத்தா-பாட்டி வாங்கிக் கொடுத்த குட்டி பொம்மை விலங்குகளை ஒரு சிறிய பைக்குள் வைத்துக்கொண்டு அவ்வப்போது எடுத்து விளையாடுவாள் மகள். கூட ஆடுவதற்கு என்னையும் அழைப்பாள். நான் முதலில் கண்ணை மூடிக்கொள்ள வேண்டும், பிறகு ஒவ்வொரு விலங்காக பையிலிருந்து எடுத்து அவள் மறைத்துக் காட்டும் போது அதை என்னவென்று சொல்ல வேண்டும். சமயத்தில் கூடவே ஏதேனும் ஓர் உரையாடல்.&lt;br /&gt;&lt;br /&gt;"இது யானை?" (நான்)&lt;br /&gt;"ம் இல்லை இது பனிக்கரடி"&lt;br /&gt;"இது எங்கே இருக்கும்?" &lt;br /&gt;"பனியில் இருக்கும்"&lt;br /&gt;"சரி அடுத்தது..(கண்ணை மூடித்திறந்த பின்பு) வரிக்குதிரையா?"&lt;br /&gt;"ஆமாம்"&lt;br /&gt;"இது?"&lt;br /&gt;"காட்டில் வாழும்"&lt;br /&gt;"ஒட்டகச்சிவிங்கி?" (ஒட்டைச் சிவிங்கி, ஒட்டகச் சிவிங்கி இதில் எது சரி?)&lt;br /&gt;"இல்லை, இது ஒட்டகம்"&lt;br /&gt;"எங்கே வாழும்?"&lt;br /&gt;"பாலையில்" &lt;br /&gt;!!&lt;br /&gt;இப்படியாகத் தொடர்ந்த ஆட்டத்தில் பாலை என்ற சொல்லையே அவள் ஒன்றிரண்டு முறை கையாண்டது சிந்திக்க வைத்தது.  பாலைவனம் என்று நீட்டிச் சொல்வதைக் காட்டிலும் பாலை என்று சொல்லே அழகாய் இருக்கிறது. ஐவகை நிலங்களின் பெயர்களைப் பள்ளியில் படிக்கும்போதும் பாலை என்றுதானே வருகிறது. பாலையுடன் இந்த 'வனம்' எப்படிச் சேர்ந்தது என்பது வியப்பாயுள்ளது. வனம் என்றால் நமக்குத் தெரிந்தவரை அதற்குப் பொருள் காடு. காடென்றால் பொதுவாக நிறைய மரம், செடி, கொடிகள், விலங்குகள் என்றிருக்கும். பாலையில் எங்கு வந்தது வனம்? இது பொருளற்ற கேள்வியாகக்கூட இருக்கலாம். ஆனால் விளையாடிய நேரத்தில் அப்படியொரு சொல்லைக் கையாண்டு நம்மையும் சிந்திக்க வைத்தவளுக்கு நன்றி! இனிமேல் நானும் பாலையென்றே சொல்லிக்கொள்வேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-116317217073394788?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/116317217073394788/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=116317217073394788' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/116317217073394788'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/116317217073394788'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2006/11/blog-post.html' title='பாலை'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-116060210836136703</id><published>2006-10-11T23:25:00.000+02:00</published><updated>2006-10-12T00:10:01.263+02:00</updated><title type='text'>சாவுகள் குறைவுதான்!</title><content type='html'>குண்டு வெடிப்பாலோ, துப்பாக்கிச் சூட்டாலோ அல்லது வேறு ஏதாவது வன்முறையாலோ மக்கள் சாகாத நாளில்லை என்றாகிவிட்டது சபிக்கப்பட்டுவிட்ட நாடொன்றில். எத்தனை பேர்தான் உயிரிழந்திருப்பார்களோ என்ற கேள்வி அவ்வப்போது மனதில் எழுந்தாலும் வரையரையில்லாது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் வன்முறைகளில் அதற்கான பதிலைத் தேட ஒருவித விரக்தியே மிஞ்சுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு வந்திருக்கும் ஒரு செய்தியின்படி அமெரிக்கப் பல்கலைக்கழகமொன்று எடுத்த கணக்கின்படி ஈராக்கில் அமெரிக்கத் தாக்குதலுக்குப் பிறகு 655,000 மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். பேரழிவு ஆயுதங்களைக் கொண்டிருக்கிறார்கள் என்று ஏகத்திற்குப் புளுகி, தாக்குதலை உண்டாக்குவதற்கான வழிகளைத் தந்திரமாக வலிய ஏற்படுத்திக் கொண்டு, எதிர்பேதுமில்லாமலேயே தாக்கி அழித்து, அவ்வாறான ஓராயுத்தையும் கண்டறியாமல், பின்பு அல்கயிதாவுடன் தொடர்பு என்று ஆர்ப்பரித்துக் கொண்டு அதற்கும் சான்றில்லாமல், உலகிலேயே இந்த நாடுதான் மகா மோசமானது, தீயசக்தி அது இதுவென்று பிதற்றி ஒரு நாட்டையே ஒருவிதத்தில் குதறி அழித்துவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முந்தைய ஆட்சியாளர்கள் உத்தமர்கள் அல்லர்தான், இருப்பினும் ஒருவேளை அவர்களே அதிகாரத்தில் இருந்திருந்தாலுங்கூட இந்த அளவிற்குச் சாதாரண மக்கள் உயிரிழந்திருக்கமாட்டார்கள். புஷ் கூறுவதுபோல மேற்சொன்ற கணக்கெடுப்பு நம்பத்தகுந்ததாகவே இல்லாவிட்டாலும், சொல்லப்பட்ட எண்ணிக்கையில் 25 விழுக்காடுகூடவா சரியாக இருக்காது? தன் நாட்டில் பூனைக்குக் காய்ச்சல் வந்தாலே டமாரமடித்து உலகறியச் செய்துவிடும் 'மேலை' நாடுகளுக்கு பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களைப் பற்றிப் பெரிதாகக் கவலையொன்றுமிருப்பதாகத் தெரியவில்லை. வாழ்வே சாவாகிவிட்ட இம்மக்களுக்கு விடிவு அருகிலிருப்பதற்கான சாத்தியக்கூறுகள்கூட குறைவாகவே உள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-116060210836136703?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/116060210836136703/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=116060210836136703' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/116060210836136703'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/116060210836136703'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2006/10/blog-post.html' title='சாவுகள் குறைவுதான்!'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-115628245446715632</id><published>2006-08-22T23:23:00.000+02:00</published><updated>2006-08-22T23:34:14.490+02:00</updated><title type='text'>இசை ஆர்வலர்களுக்கு...</title><content type='html'>"இளையராஜாவின் திருவாசகம் சிம்பொனியை அளித்த சாந்தோம் தமிழ் மையம், Mozart Meets India என்னும் 60 நிமிட ஆல்பத்தை வெளியிட இருக்கிறார்கள். கர்னாடக சங்கீதத்தின் சங்கராபரணம், சிந்துபைரவி, காபி, பிலஹரி, பந்துவராளி, ஹம்ஸாநந்தி போன்ற ராகங்களை மேற்கத்திய இசையுடன் இழையூடவைத்து, பாம்பே ஜெயஸ்ரீ, ஓ.எஸ்.அருண், கத்ரி கோபால்நாத், எம்பார் கண்ணன், ஏ.கே.தேவி, எல்.கிஷோர்குமார் போன்றவர்களுடன், 75க்கும் மேற்பட்ட வாத்தியக் கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி ஒன்றை ஃபாதர் ஜகத் காஸ்பர்ராஜ் ஏற்பாடு செய்திருக்கிறார். இதற்கு இசையமைத்த நெல்லை ஜேசுராஜின் பெயரை இனி அடிக்கடி கேட்கப்போகிறோம். இது கர்னாடக சங்கீதத்தின் குவி மையமான மியூஸிக் அகாடமியில் ஒலிக்கவிருக்கிறது. ஒரு மியூஸிக் வீடியோவும், ஓப்பெராவும் அளிக்கவும் திட்டமிட்டுள்ளார்கள்." என்று எழுத்தாளர் சுஜாதா தனது 'கற்றதும்... பெற்றதும்...' பகுதியில் (ஆனந்த விகடன்-20.08.2006) எழுதியுள்ளார். இசை நிகழ்ச்சி நடக்கப்போகும் மற்றும் 'ஆல்பம்' கிடைக்கப்போகும் தேதிகள் குறித்து ஒன்றும் தெரியவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-115628245446715632?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/115628245446715632/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=115628245446715632' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/115628245446715632'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/115628245446715632'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2006/08/blog-post.html' title='இசை ஆர்வலர்களுக்கு...'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-115522492333189289</id><published>2006-08-10T17:38:00.000+02:00</published><updated>2006-09-30T15:22:46.006+02:00</updated><title type='text'>தமிழ் மண்ணே வணக்கம்! (21)</title><content type='html'>13.08.2006 ஆனந்த விகடனின் "தமிழ் மண்ணே வணக்கம்!" பகுதியில் வந்துள்ள  பத்திரிக்கையாளர் ஞாநியின் கட்டுரை பின்வருமாறு (ஏதேனும் எழுத்துப்பிழைகள் இருப்பின் அது நகலெடுத்து ஒட்டும்போது வந்ததாக இருக்கும்):&lt;br /&gt;&lt;br /&gt;பாரிமுனைப் பகுதி. பள்ளி முடிந்து, சிறுவர்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். சட்டக் கல்லூரி சந்திப்பின் அருகே ஒரு பஸ்ஸும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதுகின்றன. பைக் ஓட்டி வந்த இளைஞர், பைக்கிலிருந்து சில அடிகள் உயரே தூக்கி எறியப்பட்டு விழுகிறார். இதைக் கண்ணெதிரே காணும் பள்ளிச் சிறுவர் கூட்டத்தில் ஒரு சிறுவன் உற்சாகமாக எம்பிக் குதித்து “ஹை... சூப்பர் ஆக்ஸிடென்ட்!” என்று கூவுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜபாளையம் அருகே மம்சாபுரம் என்ற கிராமம். தீப்பெட்டி, பட்டாசுத் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் குழந்தைகள் (அவர்களைத் தொழிலாளர் என்று சொல்வதே தவறு.) அந்திமயங்கும் வேளையில் கிராமத்துக்கு பஸ்ஸில் திரும்புகிறார்கள். உடனே வீட்டுக்கு ஓடாமல், குழந்தைகள் நலச் சங்கம் நடத்தும் மாலைப் பள்ளிக்கு ஆர்வத்துடன் ஓடுகிறார்கள். வகுப்பறைச் சுவரில், ஓர் அட்டை நிறைய காலிப் பெட்டிகள் ஒட்டப்பட்டு இருக்கின்றன. எது... என்ன... எதற்காக என்று குழந்தைகள் பதில் சொல்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘இது டூத் பேஸ்ட்.. இது எதற்கு?’&lt;br /&gt;&lt;br /&gt;‘பல் தேய்க்க.’&lt;br /&gt;&lt;br /&gt;‘ஏன் பல் தேய்க்க வேண்டும்?’&lt;br /&gt;&lt;br /&gt;‘பல் ஆரோக்கியமாக இருந்தால்தான், உடல் ஆரோக்கியமாக இருக்க முடியும்.’&lt;br /&gt;&lt;br /&gt;‘இது என்ன பெட்டி?’&lt;br /&gt;&lt;br /&gt;‘சிவப்பழகு கிரீம்!’&lt;br /&gt;&lt;br /&gt;திடுக்கிட்டு அந்தக் கறுப்பு நிலாக்களிடம் கேட்கிறேன். ‘இது எதற்கு?’ சிவப்பாவதற்குத்தானாம். ‘விலை என்ன தெரியுமா?’ பைசா சுத்தமாக சரியாகச் சொல்கிறார்கள். ‘யாரெல்லாம் வாங்குகிறீர்கள்?’ உயரும் கைகளெல்லாம் வளையல்கள் அணிந்த கறுப்புக் கரங்கள். நாளெல்லாம் தீக்குச்சி அடுக்கிய கைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘பையன்கள் உபயோகிப்பதில்லையா?’&lt;br /&gt;&lt;br /&gt;‘பொண்ணுங்கதான் சார் செவப்பா இருக்கணும்’ என்று பத்து வயசுப் பையன்கள் சொல்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தஞ்சாவூரில் ஒரு உயர் நடுத்தர வகுப்பு வீட்டுக்கூடம். உயிர்ப்புள்ள டெலிவிஷன் முன்னால் சிலைகள் போல அம்மா, மகள், அண்ணன், பாட்டி. காம இச்சையின் உச்சத்தில் ‘தீப் பிடிக்க தீப் பிடிக்க...’ நிகழும் உடலிணைவின் அடையாள அசைவுகளுடன் ஆண், பெண் பிம்பங்கள் ஆடுவதை, உயிருள்ள சிலைகள் கண்கொட்டாமல் பார்க்கின்றன. திடீரென உடல் உபாதையில் தங்கை குரலெழுப்புகிறாள். ‘அண்ணா, நேப்கின் வாங்கிட்டு வந்து தர்றீங்களா?’அம்மாவும் பாட்டியும் அண்ணனும் இப்போது திடுக்கிடுகிறார்கள். அண்ணன் முகத்தில் தர்மசங்கடம். அம்மா முகத்தில் அருவருப்பு. பாட்டி, பேத்தியைக் கண்டிக்கிறாள். ‘யார்கிட்ட எதைக் கேட்கறதுன்னு இல்ல? பக்கத்துலதானே கடை. நீயே போ!’ மறு நொடி, டி.வி&amp;யில் மூழ்குகின்றன மூன்று தலைகள். அங்கே தீ கொழுந்துவிட்டு எரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் இன்றைய தமிழ்ச் சமூகம். ரத்தமும் வலியும் புரியாத பள்ளிச் சிறுவன்; படிக்க வேண்டிய வயதில் கூலி வேலை பார்த்துக் கிடைத்த கூலியில் வீட்டுக்குக் கொடுத்தது போக மிஞ்சிய சில்லறையைச் சேமித்து அழகு கிரீம் வாங்கச் செலவழித்து, எப்படியும் சிவப்பாகிவிட விரும்பும் ஏழைச் சிறுமிகள்; ஆபாச நடனத்துக்கு நடு வீட்டில் இடம் தருவோம், ஆனால், ஆரோக்கியம் பற்றிய பேச்சை ஒழுக்கக் கேடாகத்தான் நினைப்போம் என்று குழம்பிய மனதுடன் முழுக் குடும்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி நேர்ந்தது இது? யார் இதற்குப் பொறுப்பு? குடும்பம் முதல் அரசியல் வரை அதிகாரத்தில் உள்ள எல்லாரும் பொறுப்புதான் என்றாலும், அத்தனை பேருடைய சிந்தனையையும் சிந்திக்கும் முறையையும் வடிவமைக்கும் சக்தி எது?&lt;br /&gt;&lt;br /&gt;மீடியா!&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாகப் பத்திரிகைகளும் தொலைக்காட்சியும்தான். இன்று இந்தியாவிலேயே மிக அதிக எண்ணிக்கையில் பத்திரிகைகள் விற்கும் மிகச் சில மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. தொலைக்காட்சிப் பெட்டிகள், கேபிள் இணைப்புகள் மிக அதிகமாகப் பரவியிருக்கும் ஒரு சில மாநிலங்களில் தமிழகம் முதன்மையானது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், தமிழர்களுக்குப் படிக்கக் கிடைப்பது என்ன? பார்க்கக் கிடைப்பது என்ன? ஒரு சில விதிவிலக்குகளை விட்டுவிட்டுப் பார்த்தால், பெரும்பாலும் குப்பைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;டெலிவிஷனின் வருகையும், வீச்சும் தமிழ்ப் பத்திரிகை உலகத்தை நிலைகுலையச் செய்தன. டெலிவிஷனுடன் போட்டி போடுவது எப்படி என்ற மலைப்பில், பொழுதுபோக்கு அம்சங்களை அதிகமாக, பிரமாண்டமாக நாமும் தர வேண்டும் என்று திசை மாறிப்போயின. பத்திரிகைகளின் பலமே அகல உழுவதைவிட, ஆழமாக உழுவதற்கான சாதனம் அது என்பதுதான். இந்த பலத்தைத் தியாகம் செய்துவிட்டுத் தடுமாறத் தொடங்கின பத்திரிகைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;டெலிவிஷனோ, தான் தனியே ஒரு சக்தி வாய்ந்த சாதனம் என்பதை மறந்து, சினிமாவின் குளோனிங் ஆட்டுக் குட்டியாகத் தன்னை வடிவமைத்துக்கொண்டது. உலகத்தில் வேறு எந்த நாட்டிலும், தமிழ்த் தொலைக்காட்சிகளில் இடம் பெறும் அளவுக்கு சினிமா ஆக்கிரமிப்பதில்லை. சினிமாவுக்கு என்று தனி சேனல்கள் உண்டே தவிர, எல்லா சேனலும் சினிமா கொட்டகையாக மாறும் அவலம் இங்கு மட்டும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;டெலிவிஷன் சொந்தமாகத் தயாரிப்பது தொடர்கள். பத்திரிகை சாதனத்திலிருந்து இரவல் வாங்கிய தொடர்கதை வடிவத்தில் டெலிவிஷன் அளிப்பது என்ன? சமூகத்தில் இருக்கும் அத்தனை கசடுகளையும் ரசிக்கத்தகுந்த விஷயங்களாகப் பார்வையாளர்களுக்கு முன்வைக்கின்றன. துரோகம், பொறாமை, கள்ளக் காதல், பெண்ணடிமைத்தனம் என்று சமூக மனித பலவீனங்கள் அத்தனையும் மீண்டும் மீண்டும் நமது மூளைக்குள் பதிவு செய்யப்படுகின்றன. கலையும் பொழுதுபோக்கும் மனிதரை இன்னும் உற்சாகப்படுத்தி, மனதை லேசாக்கி, கசடுகள் நீக்கி இன்னும் மேன்மையானவராக மாற்றுவதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊடகங்களின் திசை தவறிய தடுமாற்றங்கள் எல்லாமே ஒரே ஒரு காரணம் காட்டி மட்டுமே நியாயப்படுத்தப்படுகின்றன. தொழில் நடத்த வேறு வழியில்லை. இப்படிச் செய்யாவிட்டால் விளம்பரம் கிடைக்காது. எது செய்தால் லாபமோ அதில் ஈடுபடலாம் என்பது சுயநலம். எது சரியோ அதைச் செய்வோம்; அதை லாபகரமாக எப்படிச் செய்வது என்று வழிகள் கண்டுபிடிப்போம் என்ற முனைப்பே பொதுநலம், சுயநலம் இரண்டையும் ஒன்றுக்கொன்று முரண் இல்லாமல் சாதிக்கும் வழியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், பத்திரிகைகளிடம் சில தர்மங்களை எதிர்பார்க்கிறார்கள் வாசகர்கள். சமூகத்தில் எதெதுவோ கெட்டுப்போய்விட்டது; அவை எப்படியோ போகட்டும்... ஆனால், பத்திரிகைகள் கெட்டுப்போய்விடக் கூடாது என்ற எதிர்பார்ப்பு இன்னமும்கூட வாசகர் மனங்களில் பொதிந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வேறு எந்தத் தொழிலையும்விட, பத்திரிகைத் தொழில்தான் மக்கள் நலன்களுக்குக் கேடயமாக விளங்கும் தொழில் என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்தான் பத்திரிகைகளின் கருத்துச் சுதந்திர உரிமைக்கே அடித்தளமாக இருக்கிறது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் முதல் செய்தித்தாளைத் தொடங்கிய ஹிக்கி, அதை ஆங்கிலேய அதிகாரிகளின் ஊழலை அம்பலப்படுத்தத்தான் தொடங்கினார் என்ற சரித்திர உண்மையே இந்த நம்பிக்கைக்கும் ஆரம்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், நடைமுறையில் இன்று பத்திரிகைகளும், தொலைக்காட்சி நிலையங்களும் முற்றிலும் நுகர்வோருக்கான பண்டங்களைத் தயாரிக்கும் தொழில்களாக ஆக்கப்பட்டுவிட்டன. சோப், ஷாம்பு, சமையல் எண்ணெய் போல பத்திரிகையும், டெலிவிஷனும் ஒரு சரக்கு என்றாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சமூகத்தின் தர்மங்கள், அறநெறிகளுக்கெல்லாம் மனசாட்சியாக இருந்த, இருக்க வேண்டிய பத்திரிகைத் தொழிலும், டெலிவிஷனும் சரக்காகும்போது, வாசகரும் பார்வையாளரும் நுகர்வோராக மாற்றப்பட்ட பின்னர், அந்த நுகர்வோர் எப்படிப்பட்ட நுகர்வோராகச் செயல்படுகிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;தெருமுனை மளிகைக் கடையில் ஒரு கிலோ சர்க்கரை வாங்கினால், அதில் 200 கிராம் ரவை கலந்திருந்தால், நுகர்வோராக என்ன செய்வோம்? கொதித்தெழுந்து கடைக்காரரிடம் போர் நடத்தி, நீதி கேட்போம். ஆனால், நமது பத்திரிகைகளும், டெலிவிஷன்களும் இதே போன்ற கலப்படச் சரக்குகளை அளிக்கும்போது என்ன செய்கிறோம்? கண்டுகொள்வதே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவும் முழு உண்மையல்ல. கண்டுகொள்வதும் தப்புத் தப்பாகக் கண்டுகொள்கிறோம். ஒரு பத்திரிகையில், ஒரு பிரபல நடிகரின் அடுத்த காதலி கேரளத்தி-லிருந்து இறக்குமதியாகும் புது நடிகை என்று ‘துப்பறிந்து’ செய்தி வெளியிட்டால் பத்திரிகை அலுவலகத்துக்கு 200 வாசகர் கடிதங்கள் வந்து குவிகின்றன. அதே இதழில் இன்னொரு பக்கத்தில், தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் நிலத்தடி நீர் வற்றிவிட்டதால், இன்னும் மூன்று ஆண்டுகளில் இங்கொரு தார் பாலைவனம் உருவாகப்போகிறது என்பதை ஆதாரங்களுடன் வெளியிட்ட கட்டுரைக்கு, வாசகரிடமிருந்து வரும் கடிதங்கள் இருபதுகூட இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சராசரி நடுத்தர தமிழ்க் குடும்பத்தின் இன்றைய நிலை என்ன? கடன் வாங்கிக் கஷ்டப்பட்டுக் கட்டும் வீட்டில் ஃப்ரிஜ் வைக்க ஒரு அறை, வாஷிங் மெஷினுக்கு இன்னொரு அறை, டி.வி. வைக்க மர கேபினெட். ஆனால், வீட்டில் படித்தவர்கள் நான்கு பேர் இருந்தாலும், எல்லாருக்குமாகச் சேர்த்து புத்தகங்கள் வைக்க முன்று அல்லது நான்கு தட்டு உள்ள அலமாரி தான். அதிலும் ஒரு தட்டை, கலைப் பொருட்கள் என்ற பெயரில் தூசி படிந்த கிளிஞ்சல் குவியல்கள் ஆக்கிரமித்திருக்கும். மாதம் நூறு ரூபாய்க்குப் பத்திரிகைகள் வாங்குவதும், இன்னொரு நூறு ரூபாய்க்குப் புத்தகங்கள் வாங்குவதும் குடும்ப வருமானம் 20 முதல் 25 ஆயிரம் வரை உள்ள நடுத்தரக் குடும்பங்களுக்கு நிச்சயம் சுமையல்ல. ஆனால், வீட்டில் பொருளாதாரத் தட்டுப்பாடு வருவது போல் தோன்றினதுமே, முதலில் வெட்டு பத்திரிகைக்குத்தான். காபிக்கோ, டீக்கோ அல்ல! நூறு ருபாய்க்கு பத்திரிகை வாங்குவதற்கு பதில் கேபிள் இணைப்பு கொடுத்துவிட்டால் போதும் ஐம்பது சேனல் கிடைக்கும் என்று சமாதானம் சொல்லிக்கொள்வார்கள். ஆனால், அந்த ஐம்பது சேனலில் அறிவியல், சரித்திரம், சுற்றுச்சூழல் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கென்றே இருக்கும் சேனல்களைப் பார்ப்பது பாவச் செயல் என்று கருதுகிறது தமிழ்ச் சமூகம். சினிமா, தொடர் இரண்டைத் தவிர, தமிழ்ச் சமூகம் விரும்பும் ஒரே டி.வி. நிகழ்ச்சி, ஓயாமல் யாராவது பேசிக்கொண்டே இருக்கக்கூடிய அரட்டை, பட்டிமன்ற பாணி நிகழ்ச்சிகள்தான். தமிழர்களைப் போல ஓயாத பேச்சின் ஒலியிலேயே தன்னை அழித்துக்கொண்டு அறிவுத் தற்கொலை செய்யும் சமூகம் உலகில் வேறெங்கும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த தலைமுறைகளில், தமிழ் மீடியாவுக்கு ஆழம் இருந்தது. சமூக அக்கறை இருந்தது. ஆனால், அதனிடம் நவீனத் தொழில்நுட்பமும், தேர்ச்சியும் இருக்கவில்லை. அடுத்த தலைமுறையிடம் தொழில்நுட்பமும் தேர்ச்சியும் வந்த வேளையில், அது சமூக அக்கறையையும், ஆழமான தேடலையும் தொலைத்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று தமிழில் பிழையில்லாமல் எளிய வாக்கியங்களை எழுதும் ஆற்றல் உடைய இளைஞர்களைத் தேடிக் கண்டுபிடிக்கப் பெரும்பாடு பட வேண்டியிருக்கிறது. கற்பனையும் படைப்புத் திறனும் உடைய இளைஞர்கள் பலரும், மசாலா சினிமா தயாரிக்கும் மெஷினுக்கு நரபலியாக நிவேதனம்செய்யப்படுகிறார்கள். மசாலா சினிமாவில் ‘ஜெயிக்கும்’ ஒவ்வொரு இளைஞரின் காலடிக்குக் கீழேயும் நூறு அறிவாளி இளைஞர்களின் பிணங்கள் மிதிபடுகின்றன. இதை மாற்றாவிட்டால், தமிழ்ச் சமூகம் தாய்ப் பாலே குடிக்காமல் பவுடர் பாலிலேயே வளர்ந்த சவலைக் குழந்தையாக இன்னும் இளைத்துப்போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;எட்டாம் வகுப்பிலிருந்தே ஒவ்வொரு சிறுவனும் சிறுமியும் தினசரி பத்திரிகைகள் படிக்கவும், டெலிவிஷன் நிகழ்ச்சிகளைத் தேர்வு செய்து பார்க்கவும் பயிற்றுவிக்கப்பட வேண்டும். இதற்கான மதிப்பெண் தேர்வு முறையில் சேர்க்கப்பட வேண்டும். மீடியாவைப் புரிந்து கொள்ளவும், நுகரவும், ரசிக்கவும், அலசவும், கண்டிக்கவும், போற்றவும் தமிழ்க் குழந்தைகள் கற்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் பெரியவர்களாகும்போது, பத்திரிகை படிப்பதற்கும் டி.வி. பார்ப்பதற்கும் மாற்றாக தினம் மூன்று வேளை ஒரு கேப்ஸ்யூல் விழுங்கினால் உலக அறிவும், பொது அறிவும் கிட்டிவிடுமா என்று கேட்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்தக் கேள்வியும் இல்லாமல், எந்த விமர்சனமும் இல்லாமல், கிடைப்பதை நுகர்ந்து வாழும் சமூகம் பிணங்களின் சமூகமாகிவிடும். மோசமான மீடியா ஆக்கிரமிக்கும் சமூகத்தில் அரசியலும், அறிவியலும், கலைகளும், மனித உறவுகளும் சகலமும் மோசமானதாகவே இருக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;உயிர்ப்பும் மனிதமும் நிறைந்த தமிழ்ச் சமூகம் உருவாக வேண்டுமெனில், மீடியா பற்றிய நமது தேடல் இன்றே, இந்த நிமிடமே, இந்த நொடியே தொடங்க வேண்டும். ஆழ்கடலில் மூழ்கித் தேடினால் மட்டுமே முத்துக்கள் கிடைக்கும். சிரமப்படாமல் கரையில் நடந்தால் கிட்டுவது கிளிஞ்சல்கள் மட்டும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழா, தமிழா, உனக்கு எது வேண்டும்... முத்தா, கிளிஞ்சலா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-115522492333189289?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/115522492333189289/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=115522492333189289' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/115522492333189289'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/115522492333189289'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2006/08/21.html' title='தமிழ் மண்ணே வணக்கம்! (21)'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-115144742649424499</id><published>2006-06-27T23:29:00.000+02:00</published><updated>2006-06-28T00:30:26.943+02:00</updated><title type='text'>சிதறல்கள்</title><content type='html'>பாஷா இந்தியா நடத்திய இந்திய வலைப்பதிவுகளுக்கான போட்டியில் தமிழுக்கு நிறைய &lt;a href="http://www.bhashaindia.com/contests/iba/Winners.aspx"&gt;பரிசுகள்&lt;/a&gt; கிடைத்துள்ளன. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்! இதுபோன்று தமிழ் வலைப்பதிவுகளுக்கு மட்டும் என்று சொல்லி சென்ற வருடம் &lt;a href="http://thisaigal.com/"&gt;திசைகள்&lt;/a&gt; மின்னிதழ் போட்டி ஒன்றை நடத்தியதாக நினைவு. முடிவு என்னவாயிற்று என்று பார்க்கவில்லை. ஒருவேளை அப்போட்டி கைவிடப்பட்டதோ என்னவோ?&lt;br /&gt;&lt;br /&gt;தேன்கூடு நடந்த &lt;a href="http://www.thenkoodu.com/blog/2006/06/26/june-06-contest-results/"&gt;போட்டியில் வென்ற&lt;/a&gt; தமிழ் வலைப்பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்! இப்பதிவுகளில் ஒருசிலவற்றை மட்டுமே வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படித்தவற்றில் பெரும்பாலும் விடலைப் பருவத்தில் உண்டாகும் காதலைப் (அல்லது இனக்கவர்ச்சி) பற்றியே இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இப்பருவத்தில் உண்டாகும் மற்றொரு முக்கியமான அனுபவம் தேர்வு காலத்தில் உண்டாகும் பயம். அதைப் பயம் என்று சொல்வதா என்றே தெரியவில்லை. அப்பயம் கல்லூரி காலத்தில் அவ்வளவாக இல்லாமல் போய்விட்டிருந்தாலும் பள்ளிக் காலத்தில் வாட்டி எடுத்தது உண்மை. அப்பொழுதெல்லாம் படிப்பை முடித்து வேலைக்குப் போவோர்களைக் கண்டால், ஆகா இவர்களுக்கெல்லாம் தேர்விற்குப் படித்து எழுத வேண்டிய வேலையில்லை, கொடுத்துவைத்தவர்கள் என்று தோன்றும். இப்பொழுதுகூட எப்போதாவது அந்தப் பாடத்தை இன்னும் படிக்கவில்லையே, நாளைக்கு எப்படிப்போய் எழுதுவது என்ற மாதிரி கனவு வரும். அந்த அளவிற்கு உள்ளது அதன் தாக்கம். இது அப்பருவத்தினருக்கு உள்ள பொதுவான உளவியல் பிரச்சனையாகக்கூட இருக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;நம் பிரச்சனைகள் இப்படியுள்ளதென்றால் பெரும் அழுத்தத்திற்குள் &lt;a href="http://news.bbc.co.uk/2/hi/africa/5117318.stm"&gt;வாழும் பதின்மர்கள் சிலரின் வாழ்க்கை&lt;/a&gt; அதிர்ச்சிகரமாகத்தான் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ரிலையன்ஸ் நிறுவனம் பெரும் முதலீட்டில் (25000 கோடி ரூபாய்கள் என்கிறார்கள்) நாடு முழுவதும் சில்லறை வணிகத்தில் இறங்கத் திட்டமிட்டிருப்பதாகச் செய்தி. பத்து இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள். கேட்க நன்றாக இருப்பினும் இது களத்தில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தலாம்(சிறு வணிகர்கள், சிறு உற்பத்தியாளர்கள், இத்யாதி என). பார்ப்போம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-115144742649424499?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/115144742649424499/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=115144742649424499' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/115144742649424499'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/115144742649424499'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2006/06/blog-post_27.html' title='சிதறல்கள்'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-115066662563373812</id><published>2006-06-18T23:34:00.000+02:00</published><updated>2006-06-19T03:59:10.153+02:00</updated><title type='text'>மொட்டு விடுதல்</title><content type='html'>பழைய ப்ரில் மசிக்குப்பி அல்லது அதுபோன்று இருக்கும் ஒரு குப்பி என்று ஏதாவது ஒன்று கிடைத்துவிடாமல் போகாது. துவைக்கும் கல்லின் ஓரத்திலோ, சுவற்றின் மேலிருக்கும் டப்பாவிலோ நீலநிற சலவைக் கட்டியின் துண்டு கொஞ்சம் நிச்சயம் இருக்கும். குப்பியில் தண்ணீரை ஊற்றி, அத்துண்டை அதற்குள் போட்டு மூடியால் மூடிக் குலுக்கினால் நுரை ஏகத்திற்கு வந்துவிட்டிருக்கும். அதை அப்படியே வைத்துவிட்டு வீட்டின் பின்புறமோ, பக்கத்தில் எங்காவதோ இருக்கும் பப்பாளி மரத்தின் கிளையொன்றிப் பிடுங்கி வந்து சிறிய தூம்பாக நறுக்கிக் கொண்டு குப்பியில் விட்டுக் கலக்கி எடுத்து உஃப் என்று ஊதினால் சில சமயங்களில் அருமையாக மொட்டுக்கள் வரும், பல சமயங்களில் தூம்பிலிருந்து நீர் மட்டுமே சொட்டும். அது சலவைக் கட்டியின் தன்மையையும், ஊற்றும் நீரின் அளவையும், ஊதும் இலாவகத்தையும் பொருத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தற்காலங்களில் குப்பிகளில் (அதன் மூடியின் உட்புறத்திலேயே குச்சிபோன்று நீட்டப்பட்டு முனையில் இரண்டு மூன்று வளையங்கள் வெவ்வேறு விட்டங்களில் செய்துவைக்கப்பட்டிருக்கும்) மொட்டு விடும் திரவத்தை விற்பதைப் போல் முன்பு கடைகளில் விற்றார்களா எனத் தெரியாது. ஆனால், ஊர்களில் நடக்கும் திருவிழாக்களின் போது ஏதேனும் சிலசமயங்களில் அவற்றை விற்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கடையில் வாங்கிய குப்பியிலிருந்து மொட்டுக்களை விட எத்தனித்துக் கொண்டிருக்கும் மகளுக்குப் பப்பாளிக் குச்சியில்கூட சலவைத்துண்டைக் கலக்கி மொட்டு விடலாம் என்று தெரிந்துவிட்டிருக்காது. பப்பாளி மரத்தையே பார்த்திராத அவளுக்கு, என்றேனும் ஒரு முறையேனும் அவ்வுள்ளூர்த் தயாரிப்பைக் காண்பித்துக் கொடுத்தே ஆகவேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-115066662563373812?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/115066662563373812/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=115066662563373812' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/115066662563373812'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/115066662563373812'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2006/06/blog-post_18.html' title='மொட்டு விடுதல்'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-114997946057684679</id><published>2006-06-11T00:25:00.000+02:00</published><updated>2006-06-12T21:04:10.783+02:00</updated><title type='text'>தமிழகத்தில் ஈழத்தமிழ் அகதிகள்</title><content type='html'>ஆனந்த விகடன் 18.06.06 இதழின் "தமிழ் மண்ணே வணக்கம்!" பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள்) தமிழகத்தில் இருக்கும் இலங்கை அகதி முகாம்களைப் பற்றிய ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். முதலில் இக்கட்டுரையைப் பதிப்பித்த விகடனுக்கு நன்றி! தமிழகத்திலுள்ள (மற்றும் வரும்) ஈழத்தமிழ் அகதிகளின் நிலை மோசமாக வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதை உரத்துச் சொன்ன கட்டுரையாளரும் பாராட்டுக்குரியவர். அக்கட்டுரையிலிருந்து சில மேற்கோள்கள் பின்வருமாறு:&lt;br /&gt;&lt;br /&gt;"இரக்கம், கருணை, மனிதநேயம் போன்றவையெல்லாம் கவிதை எழுதுவதற்கும், அடுக்குமொழியில் பேசுவதற்கும் மட்டுமே என ஒதுக்கிவைத்துவிட்டோம். நடிகைகளின் தற்கொலை களுக்கு என்ன காரணம் என்று ஆராய நேரம் ஒதுக்க முடிகிறது. ஆனால், ‘நடுக் கடலில் படகு கவிழ்ந்து இலங்கை அகதிகள் சாவு’ என்கிற துயரம் பற்றி நினைக்க யாருக்கும் நேரம் இல்லையா? "&lt;br /&gt;&lt;br /&gt;"’அகதிகளின் மறுவாழ்வுக்கான சட்டபூர் வமான நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும்’ என்கிற ஐ.நா&amp;வின் 1967&amp;ம் ஆண்டின் ஒப்பந்தத்திலும் இந்தியா ஏனோ கையெழுத்திடவில்லை. அந்த ஒப்பந் தத்தை ஒப்புக்கொண்டால் உடன்படிக்கை களைச் சட்டபூர்வமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிற அச்சத்தால் இன்று வரை அகதிகளின் மறுவாழ்வில் மௌனம் சாதிக் கிறோம். அந்தச் சட்டபூர்வ நிர்ப்பந்தம் இல்லா மல் போனதால், ‘எங்கிருந்தோ வருபவர்கள் எக்கேடு கெட்டால் நமக்கென்ன?’ என்று சுயநலத்தோடு நடந்துகொள்ள வசதியாக இருக்கிறது."&lt;br /&gt;&lt;br /&gt;"இந்தியா முழுவதும் நடக்கிற அதிகார, அரசியல் கொள்ளைகளில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட அகதிகளின் நல்வாழ்வுக்கு செலவு ஆகாது. ஒரு குடும்பத் தலைவருக்கு மாதம் 200 ரூபாய் உதவித் தொகையாக வழங்குகிறது அரசு. ஒரு மாதம் முழுக்க அந்த ரூபாயில் எப்படி வாழ முடியும் என்று சிந்திக்க யாருக்கும் அவகாசம் இல்லை. குழந்தைகளாக இருந்தால் 45 ரூபாய், 12 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தால் 90 ரூபாய், பருவமடைந்தவர்களுக்கு 144 ரூபாய் என வயது அடிப்படையில் மாதந்திர உதவித் தொகை அளிக்கப்படுகிறது. சுத்திகரிக் கப்பட்ட ஒரு லிட்டர் தண்ணீருக்கே பத்து ரூபாய் செலவழிக்க வேண்டிய காலகட்டத்தில், 45 ரூபாயை வைத்துக் கொண்டு எப்படிக் குழந்தைகளுக்குப் பால் புகட்ட முடியும்? "&lt;br /&gt;&lt;br /&gt;"டயானா இறந்த துயரத்துக்கு அஞ்சலிக் கவிதைகள் எழுதும் நம் தமிழினப் படைப்பாளிகள், அடைக்கலம் தேடி வந்த தமிழர்களை நினைக்காமல் இருப்பதுதான் இன்னும் வேதனை. தங்களின் இரக்கத்துக்குச் சின்னதாக எதிர்ப்பு வந்தாலும், இரக்கப் படுவதைக்கூட நிறுத்திக்கொள்கிறார்கள் நம் கலைஞர்கள். ‘எதுக்கு வம்பு?’ என்று கூச்சப்படாமல் பதில் சொல்கிறார்கள். இன்னும் சிலர், அந்தப் பதில் தருவ தற்குக்கூட அச்சப்பட்டு மௌனமாக இருந்துவிடுகிறார்கள். ஆயுதங்களைவிட ஆபத்தானது அந்த மௌனம்!"&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-114997946057684679?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/114997946057684679/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=114997946057684679' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/114997946057684679'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/114997946057684679'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2006/06/blog-post.html' title='தமிழகத்தில் ஈழத்தமிழ் அகதிகள்'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-114790379387728940</id><published>2006-05-17T23:54:00.000+02:00</published><updated>2006-05-18T16:02:11.533+02:00</updated><title type='text'>படம் - நிலப்படம் - வரைபடம்</title><content type='html'>Map என்ற சொல்லிற்கு மேற்கூறிய சில சொற்கள் ஒத்ததாகச் சொல்லிப் புழங்கப்பட்டு வந்தாலும் இவை ஏனோ திருப்தியளிக்கக் கூடியதாக இல்லை. நல்ல சொல் அகப்படுமா? சொல்ல நினைத்தது அதுவல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;செல்வராஜின் &lt;a href="http://selvaraj.weblogs.us/archives/197"&gt;மிதிவண்டிப் பயணங்கள்-2&lt;/a&gt;ல் இருந்த map-ஐக் கண்டதும் உள்ள ஆதங்கங்களுள் ஒன்று நினைவிற்கு வந்தது. இப்படங்கள் விரிவாகவும், தெளிவாகவும், சரியாகவும் இல்லாததன் காரணங்கள் என்னவென்று தெரியவில்லை. கொள்வோரில்லாததால் கொடுப்போரில்லையா இல்லை இவற்றின் தேவைகள் பெரிதாக இல்லையா? &lt;br /&gt;&lt;br /&gt;வளர்ந்த நாடுகளில் உள்ள இம்முறைமைகள் வியப்பூட்டும் வகையில் உள்ளன. காகிதத்திலாகட்டும், கணியிலாகட்டும் அல்லது வேறு எந்த மிடையத்திலாகட்டும் அவற்றின் வீச்சும் பயன்பாடும் பாராட்டத்தக்கவை. நாம் மட்டும் ஏன் இன்னும் ஐதர் அலி காலத்திலேயே இருக்கிறோம்?&lt;br /&gt;&lt;br /&gt;கீழே: தஞ்சாவூர் பயண வழிகாட்டி!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/2770/294/1600/Thanjavur_Map.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/2770/294/320/Thanjavur_Map.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-114790379387728940?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/114790379387728940/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=114790379387728940' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/114790379387728940'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/114790379387728940'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2006/05/blog-post.html' title='படம் - நிலப்படம் - வரைபடம்'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-114410248784680650</id><published>2006-04-03T23:36:00.000+02:00</published><updated>2006-04-04T00:14:47.923+02:00</updated><title type='text'>கொசுறுகள்</title><content type='html'>ஜெனிவா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், போதை மருந்து முதலான பழக்கப்பற்று (addiction)களுக்குச் சிகிச்சையளிக்கும் வழிமுறையொன்றைக் கண்டுபிடித்துள்ளதாக நம்புகின்றனர். இது மிகவும் ஆரம்ப கட்டத்தில் இருந்தாலும், வருங்காலத்தில் மருந்து நிறுவனங்கள் மனது வைத்தால் பலர் இப்பழக்கங்களிலிருந்து விடுதலை பெற வாய்ப்புள்ளது. &lt;br /&gt;&lt;a href="http://www.swissinfo.org/sen/swissinfo.html?siteSect=106&amp;sid=6600718&amp;cKey=1144083623000"&gt;செய்திக்கான சுட்டி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் இரண்டு 'அரசாங்கங்கள்' நடைபெற்று வருவது அறிந்த ஒன்று. கால நேரமும் அவ்வாறே இரண்டாக உள்ளதை இன்றுதான் கேள்விப்படுகிறேன். புலிகளின் பகுதியில் இந்திய நேரத்தைப் போலவே ஜிஎம்டி+5.30ம், தெற்கில் ஜிஎம்டி+6 மணி நேரமாகவும் உள்ளது. இலங்கை அரசாங்கமும் அரை மணி நேரத்தைக் குறைத்துக் கொண்டு நாடு முழுவதும் ஒரே நேரத்தைக் கொண்டுவரும் போலுள்ளது. இதேபோல எல்லாவற்றிலும் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி.&lt;br /&gt;&lt;a href="http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/4865972.stm"&gt;செய்திக்கான சுட்டி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலாவியைத் திறந்ததும் கூகுள் கொண்டுவந்து கொட்டிய செய்திகளில் கவனத்தை ஈர்த்தது: உடற்பருமன் காரணமாக அமெரிக்காவில் பல்லாயிரக் கணக்கான குழந்தைகள் 'காரில்' அமர இயலாமல் சிரமமுறுகின்றனர். இப்போது கடைகளில் கிடைக்கும் இருக்கைகள் அக்குழந்தைகளுக்குப் பொருந்தாமல் போவதால் பயணத்தின் போது ஏதாவது விபத்து ஏற்பட்டால் அவர்களுக்கு இக்கு(risk) அதிகம் என்றும் தெரிவிக்கிறது. ஏழ்மையில் இருப்போர்கள் விலை மலிவான கொழுப்புத் தன்மையுடைய தீனிகளைத் தொடர்ந்து நொறுக்குவதால் வந்த விளைவும் இந்நோய்க்கு ஒரு காரணம் என்று படித்த நினைவு. பெரியவர்களுக்கு ஏற்படுவதைப் புரிந்து கொள்ளலாம், ஆனால் குழந்தைகளுக்கு? மரபுவழியாகத் தொடர்கிறதோ?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-114410248784680650?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/114410248784680650/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=114410248784680650' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/114410248784680650'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/114410248784680650'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2006/04/blog-post.html' title='கொசுறுகள்'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-114194326321270546</id><published>2006-03-09T23:09:00.000+01:00</published><updated>2006-03-09T23:27:43.276+01:00</updated><title type='text'>அணு ஆயுத வல்லரசு</title><content type='html'>"எது அணு ஆயுத வல்லரசு என்பதை 1968-ம் ஆண்டு அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தம் (என்பிடி) தெளிவாக வரையறுத்துள்ளது. 1967 ஜனவரி முதல் தேதிக்கு முன்பாக அணு குண்டையோ, இதர அணு வெடிபொருள்களையோ தயாரித்து, வெடித்து பரிசோதித்த நாடுதான் அணு ஆயுத வல்லரசு என்று அது கூறுகிறது." (தினமணி-10.03.2006, அமெரிக்க நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றை மேற்கோள் காட்டி)&lt;br /&gt;&lt;br /&gt;என்னே ஒரு வரையரை!! ஒருவேளை இது முன்னமே தெரிந்திருந்தால் இன்றைக்குப் பல 'வல்லரசுகள்' இருந்திருக்குமோ?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-114194326321270546?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/114194326321270546/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=114194326321270546' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/114194326321270546'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/114194326321270546'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2006/03/blog-post_09.html' title='அணு ஆயுத வல்லரசு'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-114159400926617228</id><published>2006-03-05T22:18:00.000+01:00</published><updated>2006-06-04T10:35:37.286+02:00</updated><title type='text'>பனிப்பொழிவு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/2770/294/1600/PaniMaram2.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/2770/294/320/PaniMaram2.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/2770/294/1600/PaniMaram1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/2770/294/320/PaniMaram1.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நேற்றைக்கு சுவிஸ் முழுவதிலும் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. பல இடங்களில் சாதனை அளவாக இருந்துள்ளது. இயல்பு வாழ்க்கை, முக்கியமாக சாலைகளில், பெரிதும் பாதிப்படைந்திருந்தது. மரங்களில் பனி இலைகள்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-114159400926617228?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/114159400926617228/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=114159400926617228' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/114159400926617228'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/114159400926617228'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2006/03/blog-post_05.html' title='பனிப்பொழிவு'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-114142758913072545</id><published>2006-03-03T23:55:00.000+01:00</published><updated>2006-03-05T06:10:14.546+01:00</updated><title type='text'>ஸ்விஸ் தமிழர்கள், கீழ்வெண்மணி</title><content type='html'>பெர்ன் பல்கலைக்கழகத்தின் இனவியலாளர் டமாரிஸ் லூதி சமீபத்தில் ஸ்விட்சர்லாந்தில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்களைக் குறித்த ஆய்வொன்றினை வெளியிட்டுள்ளார். அச்செய்திக்கான சுட்டி &lt;a href="http://www.swissinfo.org/sen/swissinfo.html?siteSect=105&amp;sid=6186723&amp;cKey=1140784868000"&gt;இங்கே&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;கீழ்வெண்மணிச் சம்பவம் என்று எப்போதோ கேட்டதுண்டு. அதைப் பற்றி இன்றுதான் சரியாகத் தெரிந்து கொள்ளமுடிந்தது. (கட்டுரையைக் காண &lt;a href="http://www.keetru.com/vizhippunarvu/jan06/nallakannu.html"&gt;இங்கே&lt;/a&gt; சொடுக்கவும்.) குற்றமிழைத்தோர் யாரெனத் தெரிந்தும் அவர்கள் விடுவிக்கப்பட்டது கொடுமையிலும் கொடுமையாக உள்ளது!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-114142758913072545?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/114142758913072545/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=114142758913072545' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/114142758913072545'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/114142758913072545'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2006/03/blog-post_03.html' title='ஸ்விஸ் தமிழர்கள், கீழ்வெண்மணி'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-114133740938010796</id><published>2006-03-02T21:55:00.000+01:00</published><updated>2006-03-03T15:54:32.783+01:00</updated><title type='text'>கண்காட்சிகள், வாசகர்கள், புத்தகங்கள்</title><content type='html'>சென்ற ஜனவரியில் கோவை நஞ்சப்பா சாலையில் இருக்கும் சிறைச்சாலை மைதானத்தில் 'நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்' (நிசெபுஹ) புத்தகக் கண்காட்சியொன்றைப் போட்டிருந்தார்கள். 10% விலைக்கழிவு என்று பெரிதாக வெளியில் எழுதிப் போட்டிருந்தார்கள். உள்ளேதான் கூட்டத்தைக் காணோம்! பணியாளர்கள் இருவரைத் தவிர வாசகர்கள் ஒன்றிரண்டுபேர்தான் தென்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நிசெபுஹ என்றாலே முன்பெல்லாம் பெரும்பாலும் கம்யூனிச புத்தகங்கள், அக்கால ரஷ்ய மொழியாக்கங்கள், அவர்களது பதிப்பகப் புத்தகங்கள், 'நேஷனல் புக் டிரஸ்ட்' புத்தகங்கள் என்றிருக்கும். ஒரு காலத்தில் பேருந்து ஒன்றை நடமாடும் புத்தகக் கடையாக மாற்றி ஊர் ஊராகச் சென்று புத்தகங்களை விற்றனர்; இன்றும் உள்ளதா என்று தெரியவில்லை. பொள்ளாச்சிக்கு அப்படியொருமுறை வந்தபோது சில புத்தகங்களை வாங்கிய நினைவுள்ளது. அப்பேருந்துப் புத்தகக் கடை மிகவும் பிடித்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தற்சமயம் வழக்கமான புத்தகங்களோடு, பிற பதிப்பக வெளியீடுகளும் நிறைய காணப்பட்டது.   கண்காட்சியில் வாங்கியதைவிட நேரு விளையாட்டரங்கத்திலிருக்கும் அவர்களது கடையில்தான் அதிகப் புத்தகங்களை வாங்கினேன். அனைத்தும் ஊரிலேயே உறங்கிக் கொண்டுள்ளது :(&lt;br /&gt;&lt;br /&gt;அக்கடைக்கு இரண்டுமுறை சென்றபோதும் மருந்துக்கும் புத்தகம் வாங்குவாரில்லை. இப்படி விற்பனை செய்து எப்படி வியாபாரத்தை நடத்துகிறார்களோ! வாங்க நினைத்த இரண்டு புத்தகங்கள் அங்கிருந்தும் அவற்றின் நிலையைக் கண்டு வாங்க மனம் ஒப்பவில்லை. ஒன்று-'வளம் தரும் மரங்கள்' என்னும் தொகுதி (இராம.கி. அவர்கள் பதிவின் மூலமாக அறிந்து கொண்டது). இத்தொகுதியைப் பல்லாண்டுகளுக்கு முன்பு நிசெபுஹ பதிப்பகம்தான் வெளியிட்டுள்ளது. புதிய பதிப்புகள் வருவதே இல்லை என்று கடையை நிர்வகிப்பவர் சொன்னார். அங்கிருந்த அப்புத்தகங்கள் செல்லரிக்கப்பட்டு, கிழிந்து, பழுப்பேறிக் கிடந்தன. பழையவற்றிற்குத்தான் அக்கதியென்றால் 'நரிக்குறவர்களின் இனவரைவியல்'-க்கு (வெங்கட் பதிவின் மூலம் அறிந்தது) என்ன? இருந்த ஒரே ஒரு புதிய புத்தகமும் அங்கங்கு அழுக்காகிக் கிடந்தது. எப்படி வாங்குவது? கடைசி வரை அப்புத்தகம் கிடைக்கவேயில்லை :(&lt;br /&gt;&lt;br /&gt;புதிய புத்தகங்கள் எவ்வாறு அழுக்காகின்றன? &lt;br /&gt;ஒன்று பதிப்பாளர்களிடமிருந்து வரும் கட்டுகளிலேயே கதை ஆரம்பித்திருக்கலாம்.&lt;br /&gt;அப்புறம் வந்த புத்தகங்களைக் கடைக்காரர்கள் பிரித்து வைக்கும்போது.&lt;br /&gt;வைக்கப்படும் இடத்தின் 'அழகால்'.&lt;br /&gt;அங்கு வைக்கப்படும், கையாளப்படும் முறையால்.&lt;br /&gt;வாசகர்கள் தொடும்போதும், புரட்டும்போதும் அவர்களது கைகளிலிருந்து படிவதால்(இரண்டு சக்கர வாகனங்களில் கடைக்கு வருபவர்கள் - அதன் கைப்பிடியில் எவ்வளவு அழுக்கிருக்கும் என்பது கழுவும்போதுதான் தெரியும்! - அப்படியே புத்தங்களைத் தொடும்போது உயவு நெய் கூட புத்தகத்தில் படுகிறது).&lt;br /&gt;....&lt;br /&gt;இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். கடைக்காரரிடம் கேட்டேன், "ஏங்க இதுக்கெல்லாம் ஒரு பாலித்தீன் உறை மாதிரி ஏதாவது போட்டு வைக்கலாமல்ல? இல்லை, பதிப்பகத்துக் காரங்ககிட்டையாவது சொல்லலாமே?". "எங்களுக்கு வரும் போதே அப்படித்தாங்க வருது" என்று சொல்லிக் கொண்டே அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகங்களையெல்லாம் நன்றாக உறையிட்டு அழுக்குப்படாமல் வைக்கலாம் என்ற அக்கறை பெரும்பாலானோருக்கு இல்லை. கடைக்காரர்களைவிட பதிப்பாளர்கள் கட்டாயம் செய்ய வேண்டிய காரியம் இது. இப்போதெல்லாம் உலகத்தரத்தில் அச்சிட்டு புத்தகங்களை வெளியிடுவதாகச் சொல்லிக் கொள்கிறார்கள். அவற்றை ஒரு பாலித்தீன் உறையில் இறுகக் கட்டி கடைகளுக்குக் கொடுத்தால் புத்தகங்கள் நன்றாக இருக்குமே. ஒவ்வாரு புத்தகக் கடைக்கும் 'புரட்டும் பிரதி' என்று ஒன்றை இலவசமாகக் கொடுக்கலாம். கட்டப்பட்ட புத்தகங்களுடன் இப்பிரதியும் இருந்தால், மற்ற புத்தகங்கள் நொந்து நூலாகும் நிலை தவிர்க்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம், விஜயா பதிப்பகத்திற்குச் சொந்தமான கடைக்கு ஒரு முறை சென்றிருந்தேன். இங்கும் கூட்டம் சொற்பமே! (சற்று தொலைவிலிருக்கும் துணிக்கடைகளுக்குள் எப்போதும் மூச்சு விடமுடியாத கூட்டம்!!) வாசகர்களின் வசதிக்காக தள வசதிகள் செய்து கொண்டிருந்ததை உரிமையாளர் கூட்டிச் சென்று காண்பித்தார். இவ்வேலைகள் முடிந்துவிட்டால் நிறைய செலவு செய்து வெளியில் கண்காட்சி நடத்த வேண்டியிருக்காது என்று அவர் சொல்லக் கேட்டதாக நினைவு!! கணினி மயமாக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும், பட்டைக் கோடு, வருடி (scanner) போன்ற வசதிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். இந்தப் பக்கம் வந்து பணிசெய்யும் பெண்களிடம் ஒரு புத்தகத்தைக் கேட்க பல நிமிடங்கள் தேடி எடுத்துக் கொண்டுவந்துதான் கொடுத்தார்கள். அடுத்தமுறை இந்நிலை மாறியிருக்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-114133740938010796?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/114133740938010796/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=114133740938010796' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/114133740938010796'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/114133740938010796'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2006/03/blog-post_02.html' title='கண்காட்சிகள், வாசகர்கள், புத்தகங்கள்'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-114125111585838404</id><published>2006-03-01T22:35:00.000+01:00</published><updated>2006-03-02T04:28:22.286+01:00</updated><title type='text'>வரப் போகிறது அகல ரயில் பாதை!</title><content type='html'>சென்ற வெள்ளிக்கிழமையன்று (24.02.2006) நாடாளுமன்றத்தில் வாசிக்கப்பட்ட 'ரயில்வே பட்ஜெட்'டில் உள்ள நல்ல செய்திகளுள் ஒன்று கோவை-பொள்ளாச்சி, பாலக்காடு-பொள்ளாச்சி-திண்டுக்கல் பாதைகள் அகலப்பாதைகளாக மாற்றப்படுவதற்காகப் பணம் ஒதுக்கப்பட்டிருப்பது. முழுமையாகப் பணம் ஒதுக்கப்பட்டு, திட்டம் நிறைவேற்றப்பட்டால் கொஞ்சம் மகிழ்ச்சியடைவேன். நிறைய மகிழ்ச்சியடைய, இன்னும் ரயில்வே எவ்வளவோ செய்ய வேண்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்ட (அப்படித்தான் சிறுவயதில் சொல்லக் கேட்டுள்ளேன்) இப்பாதையில் ஒரு நாளைக்கு சில வண்டிகளே சென்று கொண்டிருக்கும். ஊர்களெல்லாம் பேருந்தை மையமாகக் கொண்டு ஆக்கப்பட்டுவிட்டதால் (எனக்குத் தெரிந்த கோவை வட்டாரத்தில்), மக்களுக்கு ரயில் நிலையம் 'தொலைவில்' என்றாகிவிட்டது. மக்களும் ரயில்களை அவ்வளவாகப் பொருட்படுத்தாமல் விட்டுவிட்டார்கள். விளைவு, கிராமங்களில் இருந்த அற்புதமான சிறிய ரயில்நிலையங்கள் கைவிடப்பட்டன. ரயில் நிலைய ஊழியரும், வண்டி ஓட்டியும் பிரம்பு வளையம் ஒன்றைப் பரிமாறிக் கொண்டு நிறுத்திச் சென்ற வண்டிகளும், நிற்காமலேயே போகின்றன. அவ்வளவுதான், சென்றதினி மீளுமா தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நிற்க. என்னைக் கேட்டால் ரயில்வே நிர்வாகமெல்லாம் இன்னும் பிழைக்கத்தெரியாத அல்லது வருமானத்தில் மேலும் அக்கறை செலுத்தாததாக இருக்கும் நிர்வாகம் என்றுதான் சொல்வேன். உதாரணத்திற்கு, கோவை-பொள்ளாச்சிக்கு இடையே ஒரு நாளைக்கு சென்று வரும் பேருந்துகளின் எண்ணிக்கையும், அவற்றில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கையும் கணிசமானது. பல நேரங்களில் யோசிப்பேன், இவ்வூர்களுக்கிடையில் மின்மயமாக்கப்பட்ட இருவழி அகலப்பாதை இருந்து, குறைந்தது அரைமணி நேரத்திற்கொருமுறையாவது வண்டிகள் இயக்கப்பட்டால் எப்படியிருக்குமென்று! ரயில்வேக்கும் நல்ல வருமானம், மக்களுக்கும் செளகரியம், பேருந்துப் புகைகளால்  ஏற்படும் சூழமைச் சீர்கேடு கொஞ்சமாவது குறையும், இத்யாதி.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றிருக்கும் பொருளாதார நிலையில் பணமெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. நல்ல முனைப்போடு தொலைநோக்குள்ள நிர்வாகமும், சிறந்த திட்டமிடலும், அதனைச் செயற்படுத்துதலும்தான். இப்போதைக்குக் கனவு காண்போம்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-114125111585838404?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/114125111585838404/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=114125111585838404' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/114125111585838404'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/114125111585838404'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2006/03/blog-post.html' title='வரப் போகிறது அகல ரயில் பாதை!'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-114107772659532209</id><published>2006-02-27T22:08:00.000+01:00</published><updated>2006-03-01T00:30:43.093+01:00</updated><title type='text'>பறவையின் மரணம்</title><content type='html'>தேசாந்திரி என்னும் தொடரை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஆனந்த விகடனில் எழுதி வருகிறார். சென்ற இரண்டு வாரங்கள் வாசித்தேன். இவர் நிறையப் பயணம் செய்துள்ளார் போலுள்ளது. அதன்மூலம் கிடைத்த பல்வேறு அனுபங்களை எழுத்தில் பகிர்ந்து கொள்கிறார். இவர் எழுதும் விதமோ என்னவோ, வாசிக்க நன்றாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;முன்பொருமுறை எப்போதோ வாசித்த கட்டுரையில் மதுரை அருகே ஒரு மலைக்குகைகளில் கண்ட சமணப் படுக்கைகள் பற்றி எழுதியிருந்தார். ஒரு வேரின் சாறு, கல்லைப் பொடியாக்கச் செய்யும் விந்தையைப் பற்றி சென்ற வாரக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாரம் பறவைகளைப் பற்றிய தனது அனுபங்கள் சிலவற்றைச் சொல்கிறார். அதில் குக்குறுவான் ஒன்று. "குக்குறுவான் மிக அழகான பறவை. குருவி போன்று இருக்கும். மேல் பாகம் பச்சையாகவும், அடியில் இளமஞ்சளும், கால்கள் லேசான சிவப்பு நிறத்திலும் இருக்கும். இடைவிடாமல் கூவும் இப்பறவை தலையை உதறி அசைப்பதைப் பார்க்க மிக ரம்மியமாக இருக்கும்"-என்கிறார்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.kolkatabirds.com/coppersmith8.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 240px;" src="http://www.kolkatabirds.com/coppersmith8.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;குக்குறுவானில் உள்ள மூன்று வகைகளைப் (இன்னும் கூட இருக்கலாம்) பற்றி 'தமிழ்நாட்டுப் பறவைகள்' என்ற புத்தகத்தில் காணலாம். காட்டுப் பச்சைக் குக்குறுவான் (Brown-headed Barbet, &lt;span style="font-style:italic;"&gt;Megalaima zeylanica&lt;/span&gt;), சின்னக் குக்குறுவான் (White-Checked Barbet, &lt;span style="font-style:italic;"&gt;Megalaima viridis&lt;/span&gt;) மற்றும் செம்மார்புக் குக்குறுவான் (Coppersmith Barbet, &lt;span style="font-style:italic;"&gt;Megalaima haemacephala&lt;/span&gt;). மேற்குறிப்பிட்டதில் கடைசியில் வரும் குக்குறுவானைப் பற்றித்தான் எழுதியுள்ளார் என்று நினைக்கிறேன். இப்பறவையை நேரில் கண்டதாக நினைவில்லை. நாம் காணும் பறவைகள், தாவரங்களின் பெயர்கள் எல்லாவற்றையும் அறிந்தா வைத்திருக்கிறோம்! ஏதோ ஒரு பறவை, செடி என்று பொதுமைப்படுத்திவிட்டுச் சென்றுவிடுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் பணிபுரியும் அலுவலகம் பெரிய கோபுரத்தையுடைய(tower) கட்டிடத்தில் உள்ளது. அதன் பக்கச் சுவர்களின் பெரும்பாலான பகுதியைக் கண்ணாடிகளே ஆக்கிரமித்திருக்கும். சென்ற வருட இறுதியில் ஒருநாள் காலையில் தொப்பென்று ஏதோ கீழே விழுந்ததைப் போலிருந்தது. கண்ணாடி வழியாக வெளியே பார்க்கையில் அது ஒரு சிறு பறவை (பெயர் தெரியவேண்டுமே!). வேகமாகப் பறந்து வந்து கண்ணாடியில் மோதிக் கீழே விழுந்திருக்க வேண்டும். கண்ணாடி ஜன்னலைத் திறக்கமுடியாத அமைப்பு வேறு. பரிதாபமாகக் கிடந்த அப்பறவையைப் பார்க்கக் கஷ்டமாக இருந்தது. உயிர் இருந்தது; உயரத்தில் இருந்து விழுந்த அதிர்ச்சி இருந்திருக்க வேண்டும். காலோ வேறொரு திசையில் மடங்கியிருந்தது. கொஞ்ச நேரம் அப்படியே இருந்தது. பிறகு சிறிது நகர்ந்த மாதிரி தெரிந்தது. சற்று நேரம் கழித்துப் பார்க்கையில் அது இருந்த சுவடு மட்டும் தான் தெரிந்தது. ஒருவேளை நிலைதிரும்பி எழுந்து பறந்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பறவையின் இயற்கையான மரணத்தை எத்தனை பேர் பார்த்திருக்கிறோம்! எங்கேயோ போய் எப்படியோ சாகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-114107772659532209?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/114107772659532209/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=114107772659532209' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/114107772659532209'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/114107772659532209'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2006/02/blog-post_27.html' title='பறவையின் மரணம்'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-114099250263750363</id><published>2006-02-26T22:58:00.000+01:00</published><updated>2006-02-26T23:21:42.650+01:00</updated><title type='text'>நன்றி!</title><content type='html'>சன்னாசி, தாணு, தங்கமணி, தேன் துளி ஆகியோருக்கு முதலில் நன்றிகள் - இந்தியா செல்வதற்கு முன் (சென்ற டிசம்பர் கடைசி வாரத்தில்) எழுதியிருந்த பதிவில் (அழிக்கப்பட்டுள்ளது, பிறகு சொல்கிறேன்) வாழ்த்துச் சொன்னமைக்கு. அதை இவ்வளவு தாமதமாகச் சொல்வதற்கு வருத்தமும் தெரிவித்துக் கொள்கிறேன். ஊரில் இருந்தபோது மின்னஞ்சல்களைப் பார்க்க மட்டுமே இணையப்பக்கம் ஓரிரு முறை வரமுடிந்தது. திரும்பி வந்து சில வாரங்களாயினும் வேறு வேலைகள், ஆர்வமின்மையே அதிகமான இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;சென்ற வார இறுதியில் தமிழ்மணத்தைப் பார்த்தபோது முற்றிலும் மாறியிருந்தது. மேலோட்டமாகப் பார்த்துவிட்டு, அப்படியே விட்டுவிட்டு வேறு வேலைகளைப் பார்க்கப் போய்விட்டேன். அவ்வப்போது ஒருசில பதிவுகளை மேலோட்டமாகப் பார்ப்பதோடு சரி. இன்று எப்படியோ மனது வந்து ப்ளாக்கர் அடைப்பலகையில் மாற்றங்களைச் செய்து தமிழ்மணத்தில் இணைந்து கொண்டாயிற்று. தொடர்ந்து எழுத முயல்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அழிக்கப்பட்ட அப்பதிவைப் பற்றி: என்னுடைய பதிவை இன்றுதான் ஒழுங்காகத் திறந்து, பின்னூட்டங்களைப் பார்த்தேன். அதிர்ச்சிதான் காத்திருந்தது. காரணம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. 'போலி'யின் கைவரிசைதான். பிப்ரவரி 14ந் தேதியன்று படிக்க முடியாத ஒரு பின்னூட்டத்தை இட்டுச் சென்றுள்ளது. காரணம், நான் டோண்டு அவர்களின் பதிவில் பின்னூட்டம் இட்டுவிட்டேனாம்!! எப்பொழுது என்று எனக்கே தெரியாது! அப்படியே இட்டிருந்தாலும், அதற்காக இப்படியா?! மனநிலை பாதிப்பின் வெளிப்பாடுகள், பாவம்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-114099250263750363?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/114099250263750363/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=114099250263750363' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/114099250263750363'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/114099250263750363'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2006/02/blog-post.html' title='நன்றி!'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-113269933119125834</id><published>2005-11-22T23:40:00.000+01:00</published><updated>2005-11-22T23:47:59.763+01:00</updated><title type='text'>எம்.எம்.எஸ்-ஸில் பயணச் சீட்டு!</title><content type='html'>வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் பயணச் சீட்டுகளை எம்.எம்.எஸ் மூலமாகப் பெறும் வசதியினை ஸ்விஸ் ரயில்வே அறிமுகப்படுத்துகிறது. இச்சேவையைப் பயன்படுத்த விரும்புவோர் முதலில் ஒருமுறை தங்களது எம்.எம்.எஸ் கொண்ட செல்பேசி, செல்லுபடியாகும் கடனட்டை போன்ற விவரங்களை ரயில் நிறுவனத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். அதற்குப் பிறகு எந்நேரமும் இயங்கும் தொலைபேசி எண்ணிற்கு (இதற்குத் தனிக் கட்டணம் என்பது வேறு) அழைத்துச் சொன்னால் வேண்டிய பயணச் சீட்டு செல்பேசிக்கு எம்.எம்.எஸ் செய்தியாக அனுப்பப்பட்டுவிடும். அதில் வரும் இருபரிமாண பட்டைக் கோட்டை(2D-barcode), பயணச்சீட்டுப் பரிசோதகர்கள் தங்களிடமுள்ள விசேட உணரி மூலம் சரிபார்த்துக் கொள்வர். பயணச் சீட்டிற்கான தொகை கடனட்டை மூலம் வசூலித்துக் கொள்ளப்படும். ஆரம்ப கட்டமாக 780 ரயில் இணைப்புகளுக்கு இவ்வசதி வழங்கப்படும் என்கிறார்கள். நவீனத் தொலை நுட்பியலைக் கொண்டு மற்றுமொரு சேவை!&lt;br /&gt;&lt;br /&gt;[எம்.எம்.எஸ் - செல்பேசிகளின் வழியாகப் பல்லூடச் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு நுட்பியல். இதன் மூலமாக உரைச் செய்தி, படங்கள், ஒலி, ஒளி முதலானவைகளை அதனை ஆதரிக்கும் செல்பேசிகளில் அனுப்பவும் பெறவும் முடியும்.]&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-113269933119125834?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/113269933119125834/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=113269933119125834' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/113269933119125834'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/113269933119125834'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/11/blog-post_113269933119125834.html' title='எம்.எம்.எஸ்-ஸில் பயணச் சீட்டு!'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-113264033410338261</id><published>2005-11-22T07:12:00.000+01:00</published><updated>2005-11-22T07:20:52.073+01:00</updated><title type='text'>ரிப்பன் கட்டிடம்</title><content type='html'>கட்டிடம் மட்டும்தான் பார்க்க நன்றாக உள்ளது. மற்றவை பரிதாபம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://gallery.cs.uchicago.edu/albums/Chennai/Rippon_Building.sized.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px;" src="http://gallery.cs.uchicago.edu/albums/Chennai/Rippon_Building.sized.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-113264033410338261?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/113264033410338261/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=113264033410338261' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/113264033410338261'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/113264033410338261'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/11/blog-post_22.html' title='ரிப்பன் கட்டிடம்'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-113247565017701913</id><published>2005-11-20T09:24:00.000+01:00</published><updated>2005-11-20T09:34:10.193+01:00</updated><title type='text'>ஊழலை மறைக்கப்போகும் சட்டமா?</title><content type='html'>பின்வரும் செய்திக்கட்டுரை இந்த வார ஜூனியர் விகடனில் வந்துள்ளது:&lt;br /&gt;&lt;br /&gt;பல பொதுத்துறை நிறுவனங்களின் பித்தலாட்டங்களை புட்டுபுட்டு வைத்து, பல அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் ஊழல் முகங்களை வெளி உலகத்துக்கு அடையாளம் காட்டிய, தணிக்கைத் துறை அதிகாரிகள் இப்போது பதறிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அதிகாரிகளின் வேலைக்கே வேட்டு வைக்கும் வகையில் ஒரு புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர இருக்கிறது என்பதுதான் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;‘இனிமேல் பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் தணிக்கையை தனியார்கள் மூலமே முடித்துக் கொள்ளலாம் என்பதுதான் வரவிருக்கும் சட்டம். &lt;br /&gt;&lt;br /&gt;‘‘ஊழலுக்குத் துணைபோகும் இந்த புதிய சட்டத்தை நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் மத்திய அரசு அறிவிக்க இருக்கிறது. இது நிறைவேறினால் மத்திய &amp; மாநில அரசுகளில் நடைபெறும் ஊழல்கள் இனி வெளியே தெரியாமலே போய் விடும். இப்படியரு புதிய சட்டத்தைக் கொண்டுவந்து ஊழலுக்குத் துணைபோகத் துடிக்கும் இந்த ஆட்சியை பதவியிலிருந்து இறக்கு வோம்...’’ என்று அதிரடி முழக்கமிட்டுக் கொண்டிருக்கிறார் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த எம்.பி.யும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான ரூப்சந்த் பால். இவர்தான் மத்திய &amp; மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களுக்கான நாடாளுமன்ற கமிட்டியின் தலைவராகவும் இருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;ரூப்சந்த் பால் தலைமையில் அணிதிரண்டிருக்கும் தணிக்கைத் துறை அதிகாரிகள், வரவிருக்கும் புதிய சட்டத்தினால் ஏற்படும் கேடுகளை பொது மக்களுக்கு விளக்கும் வேலையில் தற்போது பிஸியாக இருக்கிறார்கள். அந்த சட்டத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள, ‘அகில இந்திய வணிக தணிக்கை அதிகாரிகள் சங்க’த்தின் நிர்வாகிகளைச் சந்தித்தோம். நம்மிடம் இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் கண்ணன், பொருளாளர் பாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் மோகன் ஆகியோர் ஆக்ரோஷமாக பகிர்ந்து கொண்ட விஷயங்கள் இங்கே... &lt;br /&gt;&lt;br /&gt;‘‘இந்தியாவில் மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் சிறிதும் பெரிதுமாக 1,230 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. இவை எல்லாவற்றுக்கும் தணிக்கை செய்ய வேண்டியது எங்களுடைய பொறுப்பு. நாடு முழுவதும் 900 தணிக்கை அதிகாரிகள் இருக்கிறார்கள். பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த பொதுத்துறை நிறுவனங்களை இந்தியப் பொருளாதாரத்தின் ஆணிவேர் என்றே சொல்லலாம். இவ்வளவு அதிகமாகப் பணம் புழங்கும் இடத்தில் அரசின் தணிக்கைத்துறை அதிகாரிகள்தான் தணிக்கை செய்ய வேண்டும். ‘இந்த அதிகாரிகளை மத்திய அரசோ, மாநில அரசோ கட்டுப்படுத்தக் கூடாது. அது சுதந்திரமான ஒரு அமைப்பாக இருக்க வேண்டும். அப்படியிருந்தால்தான் அவர்கள் தணிக்கை முறை, வரி செலுத்தும் ஒவ்வொரு இந்தியனின் நம்பிக்கைக்கும் பாத்திரமானதாக இருக்கும்’ என அம்பேத்கர் அரசியல் சட்டத்தில் கம்பெனி சட்டத்தின் 619 பிரிவை ஏற்படுத்தினார். &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது இந்த சட்டத்தை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதற்குப் பதிலாக புதிய கம்பெனி சட்டத்தை அறிவிக்கப்போகிறது. இந்த புதிய சட்டப்படி பார்த்தால் ஒவ்வொரு பொதுத்துறை நிறுவனமும் எந்த ஒரு தனியார் தணிக்கை நிறுவனத்தையும் தங்கள் கணக்குகளை சரிபார்க்க அமர்த்திக் கொள்ளலாம். இதன்மூலம் இதுவரை இந்திய மக்களின் பிரதிநிதிகளாக பொருளாதாரத்தின் கண்காணிப்பாளர்களாக வலம்வந்த நாங்கள், வீட்டுக்குச் செல்ல வேண்டிய நிலையை மத்திய அரசு ஏற்படுத்தியிருக்கிறது. இனி பொதுத் துறை நிறுவனங்களில் நடக்கும் ஊழல்கள், முறைகேடுகள் வெளியில் தெரியாமலே போய்விடும். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவை உலுக்கிய மிகப் பெரிய ஊழல்களையெல்லாம் கண்டுபிடித்தது எங்கள் கண்கள்தான். சுர்ஹித் லாட்டரி ஊழல், பீகாரைக் கலக்கிக் கொண்டிருக்கும் மாட்டுத் தீவன ஊழல், போஃபர்ஸ் ஊழல், யூரியா ஊழல், பழைய வீராணம் ஊழல், டான்ஸி நில விற்பனை முறைகேடு, கலர் டி.வி. ஊழல் என எல்லாவற்றையும் கண்டுபிடித்தது நாங்கள்தான். &lt;br /&gt;&lt;br /&gt;புதிய சட்டம் அமலுக்கு வந்தால் இந்திய பொருளாதாரம் மிகப் பெரிய சரிவைச் சந்திக்கும். சரியாகச் சொல்லப்போனால் இன்னும் சில வருடங்களில் பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் தனியார் முதலாளிகளின் கைகளில் சிக்கிக் கொள்ளும். &lt;br /&gt;&lt;br /&gt;தனியார் தணிக்கை முறையில் என்னென்ன முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது என்பதையும் பார்க்க வேண்டும். இதற்கு ஒரு உதாரணம் சொல்கிறோம். அண்மையில் மூடப்பட்ட ‘குளோபல் டிரஸ்ட் வங்கி’ தான் அதற்கு சரியான உதாரணம். இந்த வங்கியின் 2003-04ம் ஆண்டுக்கான தணிக்கையை ஒரு தனியார் நிறுவனம் நடத்தி அதன் முடிவை வெளியிட்டது. அதில், நாட்டிலேயே சிறந்த வங்கியாக, பொருளாதாரத்தின் உச்சத்தில் இருக்கும் வங்கியாக குளோபல் டிரஸ்ட் வங்கியை வர்ணித்திருந்தது. ஆனால், அடுத்த வருடத்திலேயே வங்கியின் நிதி நிலைமை படுபாதாளத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கி கண்டுபிடித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இதை ஏன் சொல்கிறோம் என்றால் அரசியல்வாதிகளின் துணையோடு ஒரு பொதுத்துறை நிறுவனத்தை தனியார் முதலாளிகள் இனி சுலபமாக வாங்கி விட முடியும். எப்படியென்றால் தனியார் முதலாளிகள் கண் வைக்கும் பொதுத்துறை நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாக தணிக்கை செய்து அதையே காரணமாகக் காட்டி நாடாளுமன்ற விவாதத்துக்குப் பிறகு தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு தயாராக இருக்கும். இடதுசாரிகள் எவ்வளவுதான் கத்தினாலும் விற்கத் துணிபவர்கள் தணிக்கை அறிக்கையை காரணம் காட்டிப் பேசுவார்கள் என்று சொல்லி கொஞ்சம் இடைவெளி கொடுத்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;பிறகு, எல்லாம் போகட்டும், எங்களை வீட்டுக்கு அனுப்ப மத்திய அரசு சொல்லும் காரணம் என்ன தெரியுமா? இந்தியாவில் பெருகிவரும் பன்னாட்டு நிறுவனங்களுடன் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் போட்டிபோட முடியவில்லை என்பதுதான். இதன் அர்த்தம் என்னவென்றால் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தைப் பெருக்க நேர்மையற்ற முறையில் குறுக்கு வழிகளை மட்டுமே கடைப்பிடித்து தங்கள் வியாபாரத்தை நிலை நிறுத்திக் கொள்ளும். இதற்காக முறை கேடாக செலவிடப்படும் தொகைக்கு கணக்கு வழக்கு இருக்காது. காரணம் அவையெல்லாம் தனியார் பணம். ஆனால், இந்திய பிரஜைகளின் வரிப்பணம் சம்பந்தப்பட்டுள்ள பொதுத்துறை நிறுவனங்கள் அப்படியொரு குறுக்கு வழிகளில் பயணம் செய்ய எங்கள் தணிக்கைத்துறை அனுமதிக்காது. காரணம் இந்தியாவின் பொருளாதாரமும், நாட்டின் இமேஜும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு விஷயத்தையும் சொல்கிறோம்... ஈரானி என்பவர் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு கமிட்டி கொடுத்த பரிந்துரையின்படிதான் மத்திய அரசு இப்படியரு முடிவு எடுப்பதாக அறிவிக்கிறார்கள். ஈரானி என்பவர் யார் என்றால் மத்திய அரசுக்குச் சொந்தமான வி.எஸ்.என்.எல். நிறுவனத்தை முறைகேடாக வாங்கி, அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியவர் என்று எங்களால் விமரிசிக்கப்பட்டவர். &lt;br /&gt;&lt;br /&gt;உப்புச் சப்பில்லாத விஷயங்களுக்கெல்லாம் நாடாளுமன்றத்தையே ஸ்தம்பிக்கச் செய்யும் அரசியல் கட்சிகள், இந்த விவகாரத்தில் ஏன் மௌனம் சாதிக்கின்றன என்பதை பொதுமக்கள்தான் யோசிக்க வேண்டும்’’ என்று கொதித்து முடித்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த விவகாரத்தை மக்கள் மன்றத்துக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பை ஏற்றிருப்பவர் மூத்த அரசியல்வாதியும், சிறந்த நாடாளுமன்றவாதியுமான இரா.செழியன். இவர் ‘பொதுத்துறை நிறுவனங்களின் நாடாளுமன்ற கமிட்டி’ யின் தலைவராகவும் இருந்தவர். ‘‘ஒட்டு மொத்த இந்தியர்களும் வரவிருக்கும் மோசமான ஒரு சட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டிய புனிதப் பணியை செய்ய வேண்டிய வேளை இது’’ என்று தனது பிரசாரத்தைத் துவக்கி இருக்கிறார் செழியன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-113247565017701913?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/113247565017701913/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=113247565017701913' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/113247565017701913'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/113247565017701913'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/11/blog-post_20.html' title='ஊழலை மறைக்கப்போகும் சட்டமா?'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-113218043805028543</id><published>2005-11-16T23:28:00.000+01:00</published><updated>2005-11-16T23:33:58.063+01:00</updated><title type='text'>2006 உலகக் கோப்பை கால்பந்தில் ஸ்விஸ்</title><content type='html'>போன வார சனிக்கிழமை ராத்திரி சுமார் 8.30 மணி வாக்குல சும்மா ஒரே ஒரு விநாடிக்கு ஓர் அதிர்வு. முந்தின வருஷமும் ஒரு தடவ ராத்திரியில லேசா வீடே ஆடுச்சு, இந்தத் தடவை அவ்வளவுக்காத் தெரியல. இப்பெல்லாம் அடிக்கடி பூமிக்கடியில ஏதோ நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. இந்த ஆட்டம் முடிஞ்ச பின்னால அன்னைக்கு பெர்ன்-ல நடந்த ஸ்விஸ்-துருக்கி கால்பந்தாட்டத்தை தொ.காவுல பார்த்து முடிச்சப்போ, முதல் ஆட்டத்தைப் பத்தின பயம் கொஞ்சம் மறந்து போயிருந்தது. ஸ்விஸ் ஆளுக நல்லாவே ஆடி ஜெயிச்சிருந்தாங்க. அரங்கத்துல ஒரே கொண்டாட்டமா இருந்தது. அங்கயும் நிலம் ஆடுச்சான்னு தெரியல, இவங்க ஆட்டத்துல ஒரு வேள நிலம் அடங்கியிருந்துச்சோ என்னவோ! :)&lt;br /&gt;&lt;br /&gt;அன்னைக்கு ஆடுனது முக்கியமானதுன்னாலும், இன்னைக்கு நடந்த போட்டிதான் இந்த ரெண்டு பேர்ல யாருக்கு அடுத்த வருஷம் ஜெர்மனியில போய் ஆடுற வாய்ப்பு இருக்குங்கறதத் தீர்மானிக்கறது. வழக்கமா போட்டி ஆரம்பிக்கற நேரத்துல தொ.காவப் போட்டுக்கலான்னு விட்டுட்டு அப்புறம் வந்து போட்டா, ஒரு மணி நேரம் ஆட்டமே முடிஞ்சிருந்தது :( இஸ்தான்புல்லுல கொஞ்சம் நேரத்துக்கு முன்னாலயே ஆரம்பிச்சுட்டாங்கங்கறது அப்பத்தான் பட்டது. திரையில முதல்ல பாத்தது ஸ்கோர் பட்டிதான், பகீர்னுதான் இருந்தது (ஏற்கனவே இன்னைக்கு இந்தியா தோத்துப்போனதக் கேட்ட சோகம் வேற, அதுகூட இதுவும் சேந்துக்கிச்சு). துருக்கி 3, ஸ்விஸ் 1 - ன்னு இருந்தது. இன்னும் இருக்கற முப்பது நிமிஷத்துல ஏதாவது அதிசயம் நடக்கப் போகுதான்னு பாத்துக்கிட்டு இருக்கறப்போ, முடியறதுக்கு கொஞ்ச நேரத்திற்கு முன்னால ஸ்விஸ் அணிக்காரங்க இன்னொரு கோலைப் போட்டுட்டாங்க, அரங்கத்துல ஈ ஆடல. அப்புறம் கடைசி நிமிஷத்துல துருக்கியும் ஒன்னைப் போட்டு 4-2க்கு கொண்டு வந்துடாங்க. இருந்தாலும் அவங்களுக்கு பழைய பந்தயங்களோட கணக்குப்படி இந்தப் போட்டில 3-0 ன்னு ஜெயிச்சாத்தான் மேல போகமுடியும். ஆனா தோத்தாலும் (ஆனா இவ்வளவு நாளா தொடர் முழுசும் நல்லாவே கஷ்டப்பட்டுத்தான்) ஸ்விஸ் பசங்க உலகக் கோப்பைல ஆடறதுக்கு முன்னேறிருக்காங்க. இந்த வாட்டி உலகக்கோப்பைல ஆடப் போறது அவங்களுக்கு எட்டாவது தடவையாம். ஜெயிக்கறாங்களோ இல்லையோ அதுக்குள்ள நுழையறதே பெரிய விஷயம்தான். வாழ்த்தறோம்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-113218043805028543?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/113218043805028543/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=113218043805028543' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/113218043805028543'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/113218043805028543'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/11/2006.html' title='2006 உலகக் கோப்பை கால்பந்தில் ஸ்விஸ்'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-113207402296018191</id><published>2005-11-15T17:58:00.000+01:00</published><updated>2005-11-15T23:17:34.536+01:00</updated><title type='text'>கண்ணால் காண்பதும் பொய்</title><content type='html'>&lt;a href="http://www.patmedia.net/marklevinson/cool/cool_illusion.html"&gt;எல்லாம் மாயை! &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-113207402296018191?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/113207402296018191/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=113207402296018191' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/113207402296018191'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/113207402296018191'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/11/blog-post_15.html' title='கண்ணால் காண்பதும் பொய்'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-113200950879398310</id><published>2005-11-14T23:28:00.000+01:00</published><updated>2005-11-15T00:05:08.846+01:00</updated><title type='text'>சிறை-விவசாயி</title><content type='html'>என்னய்யா நடக்கிறது நாட்டில்?! ஆயிரம் பேர் சிறைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி தங்களுக்கு வேண்டியவர்களை 'விடுவித்துச்' செல்வதென்பதை என்னவென்று சொல்வது? தாக்குதல் திட்டங்களைப் பற்றிய செய்திகளைப் படிக்கும்போது அதுபோன்றவைகளைக் காட்டும் சினிமாக்கள் தோற்றுவிடவேண்டும் போலுள்ளது. உளவு அமைப்புகள் என்பதே அங்கு இல்லையா? இல்லை, எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் இருக்கிறார்களா? பிகார் போன்ற சில மாநிலங்களில் மக்களை வளரவிடாமல் தடுக்கும் சமூக நோய் ஆழப் பரவியுள்ளது. அவைகளுக்குத் தீர்வு காணும் வரையில் இது போன்ற அவலங்கள் நடந்து கொண்டேதானிருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;திறந்து கிடந்த சிறைக்குள்ளிருந்து தப்பிச் செல்ல விரும்பாமல் அங்கேயே சிலரும், தாக்குதலின் போது உயிர் பிழைக்கத் தப்பி விட்டு மீண்டும் சிறைக்கே வந்தோரும் இருக்கிறார்களாம். இதை எந்த வகையில் சேர்ப்பதென்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;-----------&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு விவசாயிதான் விவசாய நிலத்தை வாங்க வேண்டுமென்று மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டமுள்ளதாம், இன்றுதான் கேள்விப்படுகிறேன். "அமிதாப்பச்சன், நீங்கள் நடிகரா, விவசாயியா? முதலில் தெளிவுபடுத்துங்கள்". பாவம் அமிதாப், இப்படியெல்லாம் கஷ்டமான கேள்வியைக் கேட்கலாமா? ஒருவர் தான் செய்யும் தொழிலை நிரூபிக்கச் சான்றிதழைக் கூடப் பெறலாமோ! ஒன்னும் தெரியமாட்டேங்குது போங்க :(&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-113200950879398310?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/113200950879398310/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=113200950879398310' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/113200950879398310'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/113200950879398310'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/11/blog-post_14.html' title='சிறை-விவசாயி'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-113148903088610937</id><published>2005-11-08T23:28:00.000+01:00</published><updated>2005-11-08T23:31:25.520+01:00</updated><title type='text'>வெண் பாஸ்பரஸ்</title><content type='html'>தானாக எரியக்கூடிய வேதிப் பொருள் - போர்களங்களில் ஒளியை ஏற்படுத்துவதற்கு உபயோகப்படுத்தப்படும்.&lt;br /&gt;உடம்பில் பட்டால் தோலும் சதையும் எரிந்து விடும்.&lt;br /&gt;இப்படிப்பட்ட வேதிப் பொருட்களைக் கொண்ட ஆயுதப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் ஓர் ஒப்பந்தம் உள்ளது.&lt;br /&gt;அந்த ஒப்பந்தத்தில் பெரியண்ணன் கையெழுத்திடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, அதை உபயோகப்படுத்தாமல் விடுவானேன். யார் எரிந்தாலென்ன, செத்தாலென்ன, யார் கேட்பது? முடிந்த வரை அழித்து விட்டு, அழித்ததற்கான தடயங்களையும் அழித்துவிட்டால் அப்புறம் அழிவைப் பற்றி யாருக்குத் தெரியப் போகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/4417024.stm"&gt;http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/4417024.stm&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-113148903088610937?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/113148903088610937/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=113148903088610937' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/113148903088610937'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/113148903088610937'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/11/blog-post.html' title='வெண் பாஸ்பரஸ்'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-112889476142735627</id><published>2005-10-09T22:51:00.000+02:00</published><updated>2005-10-09T23:52:41.476+02:00</updated><title type='text'>துயரங்களும் அவலங்களும்</title><content type='html'>இமாலயப் பகுதியில் நடந்த நிலநடுக்கம் மக்களை அளவிட முடியாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. ஒரு சில நிமிடங்களில் எல்லாவற்றையும் இழந்து நிற்கும் ஜீவன்களைக் காணும்போது மனம் பதைக்கிறது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே உள்ளது. தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மீட்புதவி சென்றடைவதற்குள் இழப்புகள் இன்னும் அதிகமாகக் கூடும். வெறும் கையால் எவ்வளவு செய்துவிட முடியும் அவர்களால்? அமுங்கிய பள்ளிக்கூடம் ஒன்றில் இருந்து ஓலக்குரல் கேட்பதாகச் சொன்னார்கள், மிகவும் வருத்தமாயிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;க்வடமாலா, எல்சல்வடார் முதலான மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றிரண்டு நாட்களாகப் பெய்துவரும் பேய்மழையில் ஒரு கிராமமே நிலச்சரிவில் புதைந்து விட்டதாகச் சொல்கிறார்கள். ஆற்று வெள்ளத்தின் சீற்றத்தைப் பார்க்கவே அச்சமாக உள்ளது. இப்பகுதியிலும் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். கொடுமையாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சமீப காலங்களில் நடக்கும் இயற்கையின் சீற்றங்களைப் பார்க்கும்போது உலக நாடுகள் அனைத்தும் மீட்புதவி மற்றும் அவசரகாலத் தேவைக்கான பொருட்களை முன்னெப்போதும் இல்லாத அளவில் தயாராக வைத்திருக்க வேண்டும் போலுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பறவைக் காய்ச்சல் மீண்டும் பரவத் தொடங்கிவிட்டது போலுள்ளது. இம்முறை ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில். சகட்டு மேனிக்கு கோழிகள், வாத்துகள், வான்கோழிகள் போன்றவற்றைப் பெரிய குழிகள் தோண்டி உயிருடனோ, பாதிகொன்றோ அதற்குள் போட்டுத் தீமூட்டிச் சாகடித்துக் கொண்டுள்ளனர். சைபீரியாவிலிருந்து மேற்கு நோக்கிப் பறக்கும் பறவைகளால் அமெரிக்கக் கண்டத்தில்கூடப் பரவ வாய்ப்புள்ளதாக அச்சம் தெரிவிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மொராக்கோ வழியாக ஸ்பெயின் நாட்டுச் சார்ந்த பகுதிக்குள் நுழைய முற்பட்டு இயலாமற்போனவர்களை, மொராக்கியக் காவலர்கள் பேருந்துகளில் அள்ளிச் சென்று பாலைவனத்தில் அம்போவென்று விட்டுவிட்டுப் போய்விட்டுக் கொண்டுள்ளார்களாம். ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து, எங்காவது ஏதாவது வேலை பெற்றுவிடும் நோக்கோடு, கடல் வழியாக உயிரைப் பணயமாக வைத்துப் பல்வேறு இடர்ப்பாடுகளுக்கு இடையே ஐரோப்பிய நாடுகளுக்கு வர சதா முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள். பெரும்பாலானோருக்கு அது எட்டாக் கனியாகவே போய்விடுகிறது. எல்லாவற்றையும் தாண்டி வந்து ஐரோப்பிய நாட்டுக் காவலர்களால் பிடிக்கப்பட்டு மீண்டும் வந்த நாட்டிற்கே ஏற்றிவிடப்படுபவர்கள் ஏராளம். &lt;br /&gt;&lt;br /&gt;ஓரிரு நாட்களாகச் செய்திகளில் அதிகம் தென்படுபவை இவைதான். ம்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-112889476142735627?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/112889476142735627/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=112889476142735627' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/112889476142735627'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/112889476142735627'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/10/blog-post.html' title='துயரங்களும் அவலங்களும்'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-112800993892721022</id><published>2005-09-29T18:00:00.000+02:00</published><updated>2005-09-29T18:05:38.936+02:00</updated><title type='text'>தோற்ற மயக்கங்களோ?</title><content type='html'>&lt;img src="http://img.photobucket.com/albums/v101/nradhak/Naavai.jpg" alt="Image hosted by Photobucket.com"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v101/nradhak/Faces1.jpg" alt="Image hosted by Photobucket.com"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v101/nradhak/Puzzles.jpg" alt="Image hosted by Photobucket.com"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v101/nradhak/Pillers.jpg" alt="Image hosted by Photobucket.com"&gt;&lt;br /&gt;நடுவுல இருக்கற தூணப் பாருங்க!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v101/nradhak/Faces2.jpg" alt="Image hosted by Photobucket.com"&gt;&lt;br /&gt;இந்தப் படத்துல நெறைய முகங்கள் இருக்குங்க. 4-5 முகங்களப் பாக்கறவங்க சாதாரணவங்களாம். அப்படியே 8, 9-ன்னு ஒவ்வொன்னுக்கும் ஒன்னைச் சொல்றாங்க. அத்தனையையும் பாத்திருக்கறவங்க அதிஉன்னிப்பா கவனிப்பவராம். எத்தனைன்னு கேக்கறீங்களா? இன்னொரு தடவை எண்ணிப்பாத்துக்குங்க. எண்ணிட்டீங்களா? ஒரு டசனுக்கு ஒன்னு கம்மியா இருந்ததுங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;தலைப்பு உபயம்: முண்டாசுக்கவி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-112800993892721022?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/112800993892721022/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=112800993892721022' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/112800993892721022'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/112800993892721022'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/09/blog-post_29.html' title='தோற்ற மயக்கங்களோ?'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-112785806401736133</id><published>2005-09-27T23:37:00.000+02:00</published><updated>2005-09-27T23:54:24.023+02:00</updated><title type='text'>பட்டாம்பூச்சி</title><content type='html'>பட் பட் பட் பட்டாம்பூச்சி&lt;br /&gt;பட் பட் பட் பட்டாம்பூச்சி&lt;br /&gt;பட்டுச் சிறகை விரித்துப் பறக்கும்&lt;br /&gt;பட் பட் பட் பட்டாம்பூச்சி&lt;br /&gt;நல்ல நல்ல கதைகள் சொல்லும்&lt;br /&gt;பட் பட் பட் பட்டாம்பூச்சி&lt;br /&gt;வண்ண வண்ண படங்கள் பேசும்&lt;br /&gt;பட் பட் பட் பட்டாம்பூச்சி&lt;br /&gt;அறிவை வளர்க்க அன்பாய் உதவும்&lt;br /&gt;பட் பட் பட் பட்டாம்பூச்சி&lt;br /&gt;பாட்டு சொல்லி பாடச் சொல்லும்&lt;br /&gt;பட் பட் பட் பட்டாம்பூச்சி&lt;br /&gt;புதுமை உலகம் இனிமை உலகம்&lt;br /&gt;பட் பட் பட் பட்டாம்பூச்சி&lt;br /&gt;பட் பட் பட் பட்டாம்பூச்சி&lt;br /&gt;பட் பட் பட் பட்டாம்பூச்சி....&lt;br /&gt;&lt;br /&gt;என்ற இனிமையான பாடலுடன் கோயம்புத்தூரிலிருந்து 'தமிழில் முதன்முறையாக' பட்டாம்பூச்சி என்ற பெயரில் 'சிறுவர்களுக்கான சி.டி.மாத இதழ்' ஒன்று சென்ற ஆண்டில் (அல்லது அதற்கு முந்தைய ஆண்டில்) ஆரம்பிக்கப்பட்டது. வெளிவந்த சில மாதங்களிலேயே  நின்று விட்டதாகக் கேள்விப்பட்டேன். வாங்குவோரின்மையாலா இல்லை வேறேதும் காரணமா என்று தெரியவில்லை. தமிழுலகில் இதுபோன்று ஆரம்பிக்கப்பட்டு அந்தரத்தில் விடப்படும் முயற்சிகள் ஒன்றிரண்டல்ல. இருந்தாலும் நல்ல முயற்சி ஒன்று தொடர்ந்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பட்டாம்பூச்சி இதழ் 2-ல், கிராமத்துப் பாட்டி குழந்தைகளுக்கு குட்டிக் கதை ஒன்றைச் சொல்கிறார். அக்கதையில் மீனிடம் அகப்பட்ட 'நெலப்புழு' (மண்புழு அ நிலப்புழு), மீன்களைப் பார்த்து இவ்வாறு சொல்கிறதாம்:&lt;br /&gt;&lt;br /&gt;வாரீர் வாரீர் என்னாலே&lt;br /&gt;வந்து நிற்கிறீர் முன்னாலே&lt;br /&gt;சாகப் போகிறே என்னாலே&lt;br /&gt;செத்துக் கிடக்கிறேன் உன்னாலே&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-112785806401736133?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/112785806401736133/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=112785806401736133' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/112785806401736133'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/112785806401736133'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/09/blog-post_27.html' title='பட்டாம்பூச்சி'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-112768525435223333</id><published>2005-09-25T23:38:00.000+02:00</published><updated>2005-09-25T23:55:26.916+02:00</updated><title type='text'>நின்னைச் சரணடைந்தேன்!</title><content type='html'>எங்கோ தூரத்தில் மெதுவாக ஒலிப்பது போன்று அடுத்த அறையில் ஒலிக்கவிடப்பட்டிருந்த பாடல் காற்றில் தவழ்ந்து வந்து மனதைக் கொஞ்ச நேரம் ஆக்கிரமித்துக் கொண்டது. தாக்கியது கவியா? பாடலா? இசையா? இல்லை அனைத்தும் சேர்ந்தா?  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.musicindiaonline.com/l/26/s/movie_name.4294/"&gt;பாடலைக் கேட்க...&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நின்னைச் சரணடைந்தேன்! - கண்ணம்மா!&lt;br /&gt;நின்னைச் சரணடைந்தேன்!&lt;br /&gt;&lt;br /&gt;1.&lt;br /&gt;பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்&lt;br /&gt;என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று ... (நின்னை)&lt;br /&gt;&lt;br /&gt;2.&lt;br /&gt;மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்&lt;br /&gt;குடிமை புகுந்தன, கொன்றவைபோக் கென்று . ... (நின்னை)&lt;br /&gt;&lt;br /&gt;3.&lt;br /&gt;தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு&lt;br /&gt;நின்செயல் செய்து நிறைவு பெறும்வளம் ... (நின்னை)&lt;br /&gt;&lt;br /&gt;4.&lt;br /&gt;துன்ப மினியில்லை, சோர்வில்லை, தோற்பில்லை,&lt;br /&gt;அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட ... .(நின்னை)&lt;br /&gt;&lt;br /&gt;5.&lt;br /&gt;நல்லது தீயது நாமறியோம்! அன்னை!&lt;br /&gt;நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக! ... (நின்னை) &lt;br /&gt;&lt;br /&gt;[நன்றி: &lt;a href="http://www.infitt.org/pmadurai/mp049.html"&gt;மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்&lt;/a&gt;]&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-112768525435223333?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/112768525435223333/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=112768525435223333' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/112768525435223333'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/112768525435223333'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/09/blog-post_25.html' title='நின்னைச் சரணடைந்தேன்!'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-112716797934893197</id><published>2005-09-19T23:46:00.000+02:00</published><updated>2005-09-20T00:12:59.356+02:00</updated><title type='text'>செம்மறியாட்டு உரோமம்</title><content type='html'>ஜூரிக்கிலிருந்து சுமார் ஒன்றரை மணி நேரப் பயணத் தூரத்திலே (ரயிலில்) இருக்கும் ஜெர்மனிக்குச் செல்ல கொஞ்சம் மெனக்கெடவேண்டியுள்ளது. இந்தியர்களுக்கு இந்தியாவைத் தவிர வேறெந்த நாட்டிற்காவது விசா இல்லாமல் போக முடியுமா என்று தெரியவில்லை. விசா வாங்குவதற்கு ஒரு நாள் வேலையைக் கெடுத்துக் கொண்டு பெர்ன் நகருக்கு நேரில் செல்ல வேண்டும். அதுவும் சும்மா நினைத்த போதெல்லாம் சென்றுவிட முடியாது. பிரத்யேகத் தொலைபேசி எண் ஒன்றிக்கு அழைத்து நேரம் வாங்க வேண்டும். இத்தொலைபேசியின் மறுமுனையில் பேசுபவருக்கு அவரை அழைப்பவரிடமிருந்துதான் சம்பளம் பெற்றுத் தருவார்களோ என்னவோ (சும்மா ஒரு பேச்சுக்கு), அவ்வெண்ணை அழைக்க ஒரு நிமிடத்திற்கு கிட்டத்தட்ட CHF 3.15 (~$2.5) ஆகுமென்றால் என்னவென்பது! அழைத்தவுடன் விரைவில் நேரம் கிடைத்து விட்டால் நன்றாக இருக்குமா? அதனால் அழைத்த நாளிலிருந்து குறைந்தபட்சம் இரண்டு மூன்று மாதங்கள் கழித்துத்தான் நேரத்தைக் கொடுப்பார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற ஜூன் மாதம் ஒருநாள் அதே தூதரகத்திற்குச் சென்றிருந்தபோது உப்புப் பெறாத காரணத்திற்காக விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்கள். என்னுடைய கவனக் குறைவால் அவர்கள் கேட்ட ஒரு கடிதம் விண்ணப்பத்துடன் இணைக்காமல் விடுபட்டு விட்டது. அடுத்த அரை மணி நேரத்திற்குள் தொலைநகல் மூலம் அக்கடிதத்தை உரியவர்களிடமிருந்து பெற்றுத் தர உறுதியளித்ததைக் காதில்கூட வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டார் சாலையோரம் நின்று விண்ணப்பங்களைச் சரிபார்த்து மக்களை உள்ளே அனுப்பும் கணவான் ஒருவர். விளைவு, அடுத்த நேரம் கிடைக்கும் வரை, அதாவது மேலும் மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. அன்றே விசா வாங்கிக் கொண்டு மறுநாளே ஜெர்மனி போகுமளவிற்கு தலை போகும் வேலையொன்றும் இல்லைதான்; என்றாலும் விசா வாங்குவதற்கான நடைமுறைகள் சில சமயங்களில் தேவையற்ற மன உளைச்சலை ஏற்படுத்திவிடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அனில் அம்பானிக்கும், ஆனந்த மகிந்திராவிற்கும் ரஷ்யா விசா கொடுக்க மறுத்துவிட்டது என்ற செய்தியை நேற்றைய தினமணியில் படித்த போது, முன்பு ஏற்பட்டிருந்த தேவையற்ற உளைச்சலெல்லாம் கேலிக்குரியதாகிவிட்டது. அப்பேர்ப்பட்டவர்களுக்கே விசா மறுக்கப்படும் போது நம் போன்ற சாதாரண ஆசாமிகளெல்லாம் எம்மாத்திரம்! &lt;br /&gt;&lt;br /&gt;சென்ற ஜூலை ஒன்றாம் தேதி கூப்பிட்டிருந்ததற்கு இன்றைக்கு நேரம் கொடுத்திருந்தார்கள். இம்முறை அவர்கள் கேட்டதெல்லாம் சரியாக இருக்க விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பெர்ன் நகரில் (இங்கு எல்லா இடத்திலுமே) குளிராகவே இருந்தது, மேகமூட்டம் வேறு. தூதரகத்திலிருந்து திரும்பி வரும்போது சுவிஸ் நாடாளுமன்றக் கட்டிடத்தின் முன் சுமாரான அளவில் இருக்கும் திறந்த வெளியில் கூட்டம் கொஞ்சம் இருப்பதைப் பார்த்து பேருந்திலிருந்து அங்கேயே இறங்கிக் கொண்டேன். வழக்கமாகக் நடக்கும் வாரச் சந்தைகளுக்குக் கொஞ்சம் மாறாகவே இருந்தது. பெரியவர்கள் அமர்ந்து சூடாகப் பருகிக் கொண்டிருந்த கூடாரம், பால் பொருட்களை வைத்துக் கொண்டு ஒரு வண்டி, வகை வகையான Cheese-களை வைத்துக் கொண்டு ஒரு வண்டி, வேலி போட்டு நிற்க வைக்கப்பட்டிருந்த செம்மறியாடுகளும் பன்றிகளும், உருளைக் கிழங்கை மண்பெட்டியொன்றில் போட்டு அதைத் தோண்டி எடுக்கும் சிறு போட்டி ஒன்றை நடத்திக் கொண்டிருந்த விவசாயிகள் சிலர், அந்தக் குளிரில் உட்கார்ந்து கொண்டு கம்பளியிலிருந்து நூல் நூற்றுக் கொண்டிருந்த பெண் என்று பல காட்சிகள். பெர்ன் வட்டார விவசாயம், கால்நடை முதலானவை சார்ந்த தொழில்களை முன்னிருத்தும் கண்காட்சி போலிருந்தது. கேமராவையும் எடுத்துக் கொண்டு போயிருக்கலாமே என்று தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;கண்கவரும் நாட்டுப் புற உடையணிந்த இரு விவசாயிகள், செம்மறியாடு ஒன்றின் கால்களைக் கட்டி மேசையின் மீது படுக்க வைத்து முடிவழிக்கும் இயந்திரமொன்றில் சர்சர்ரென வழித்துக் கொண்டிருந்தார்கள். ஆர்வத்துடன் காண மக்களுக்கு ஒரு காட்சியானது அது. கொஞ்ச நேரத்தில் முடி அனைத்தையும் இழந்து வெறும் தோலுடன் மற்ற ஆடுகளுக்கு மத்தியில் போய் நின்று கொண்டிருந்தது. இவ்வளவு குளிரில் அதற்குக் குளிராதா என்ற கேள்வி மனதை ஆக்கிரமித்தது. அங்கிருந்தவரிடம் மெல்ல விசாரிக்க, ஒவ்வொரு வருடமும் வசந்த மற்றும் இலையுதிர் காலத்தில் செம்மறியாடுகளின் உரோமம் வழிக்கப்படவேண்டும்; இல்லையென்றால் அவை நோய்த்தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்று விளக்கமளித்தார். அப்படியும்கூட இருக்கிறாதா என்று ஆச்சரியத்துடன் இடத்தைக் காலிசெய்து கொண்டு வந்தேன். செம்மறியாட்டு உரோமத்தைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்ள வழிசெய்த தூதரகத்தாருக்கு நன்றி!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-112716797934893197?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/112716797934893197/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=112716797934893197' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/112716797934893197'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/112716797934893197'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/09/blog-post_19.html' title='செம்மறியாட்டு உரோமம்'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-112656252538256871</id><published>2005-09-12T23:36:00.000+02:00</published><updated>2005-09-13T00:02:05.386+02:00</updated><title type='text'>தீவிரவாதிகளும் அணுஆயுதங்களைப் பயன்படுத்துவார்களா?</title><content type='html'>அசோசியேட்டட் பிரஸ்ஸை ஆதாரம் காட்டி உள்ளூர்ப் பத்திரிக்கையொன்று இன்று போட்டிருந்த தலைப்புச் செய்தி சற்று திக்கென்றுதான் இருந்தது. அதன்படி (அதை நான் புரிந்துகொண்டவரையில்), அமெரிக்கா, அதன் நட்பு நாடுகள் அல்லது குடிமக்கள் மீது எந்த ஒரு நாடோ, பயங்கரவாதக் குழுக்களோ பேரழிவு ஆயுதங்களைக் (WMD) கொண்டு தாக்கத் திட்டமிட்டால், அவற்றை 'வருமுன் காக்கும்' பொருட்டு எதிர்காலத்தில் அந்நாடு/குழுக்களின் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது எனப் பென்டகன் திட்டமிடுவதாகச் சொல்கிறது. கூடவே, பதுங்கு குழிகளை அழித்தெறியவும் ஓர் அணுஆயுதத்தைத் தயாரிக்கப் போகிறார்களாம். ஏற்கனவே பன்னாட்டுப் படையினரின் சில தாக்குதல்களில் கதிரியக்கத்தை உண்டுபண்ணும் வஸ்துகள் ஒளிந்திருப்பதாகச் சொல்லிக் கொள்கிறார்கள். இப்போது சொல்லப்படும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் உண்டாகும் விளைவுகள், எதிர்விளைவுகள் எங்கு போய் முடியுமோ! கவலையாக உள்ளது. ஆயுதங்களால் உண்டாக்கப்படுவதா அமைதி? ம்...&lt;br /&gt;&lt;br /&gt;[வேறு]&lt;br /&gt;&lt;a href="http://thatstamil.indiainfo.com/news/2005/09/12/jayakumar.html"&gt;மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் பேச்சு ஒன்றிற்கு மாநில அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.&lt;/a&gt; அச்செய்தியின்படி பார்த்தால் மத்திய அமைச்சர் சென்னை உஷாராக இருப்பது நல்லது என்ற தொணியில் சொல்லியிருப்பதாகத் தோன்றுகிறது. அதற்கு ஒரு மறுப்பை (அல்லது விளக்கத்தை) மாநில அமைச்சர் அறிவிக்க விரும்பினால் "தங்கள் அக்கறைக்கு நன்றி, ஏற்கனவே தமிழக அரசு அதற்கான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்திக் கொண்டிருக்கிறது, விவரங்களை இங்கே காணவும்" என்று சொல்லி ஒரு சுட்டியைக் கொடுத்தால் கண்ணியமாகப் போயிற்று. &lt;br /&gt;&lt;br /&gt;அதைவிடுத்து, அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக வரும் 'அரைவேக்காடு', 'ஆதாரமில்லாத புத்தி', 'உளறுதல்', 'கேலிக்கூத்து' போன்ற வார்த்தைகளைக் கூறுவது அமைச்சர் பதவிக்கு நயம் சேர்ப்பதாகத் தோன்றவில்லை. அக்கருத்தை அமைச்சராகத் தெரிவித்தாரா அல்லது அவரது கட்சி உறுப்பினராகத் தெரிவித்தாரா என்று தெரியவில்லை. எப்படியிருப்பின் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;மக்களும் இதுபோன்ற சொற்களைக் கேட்டு வெட்கும் நிலையை இழந்து விடத்தானே பொதுவில், அதுவும் உயர் பதவியிலுள்ளவர்களால் கூட அவை உபயோகிக்கப்படுகின்றன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-112656252538256871?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/112656252538256871/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=112656252538256871' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/112656252538256871'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/112656252538256871'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/09/blog-post.html' title='தீவிரவாதிகளும் அணுஆயுதங்களைப் பயன்படுத்துவார்களா?'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-112413791211986132</id><published>2005-08-15T22:30:00.000+02:00</published><updated>2005-08-15T22:31:52.126+02:00</updated><title type='text'>சம்பளம் எவ்வளவு?</title><content type='html'>"ஏம்பா எவ்வளவு சம்பளம் வாங்கற?" இக் கேள்விவியைக் கேட்பவர்கள் அப்பாவித்தனமாகக் கேட்கலாம்; தன் (அல்லது வேண்டப்பட்டவர்களின்) சம்பளத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து மனதுக்குள் நகைத்துக் கொள்ளக் கேட்கலாம் அல்லது காதில் புகை விட்டுக் கொள்வதற்குக் கேட்கலாம்; இன்னும் எத்தனையோ. ஆனால், கேட்கப்படுபவர்களுக்கு கொஞ்சம் தர்ம சங்கடத்தைக் கொடுக்கும் கேள்விதான்; அதுவும் இடம், காலமறியாமல் கேட்கப்படும் சமயத்தில். இந்தக் கேள்விக்கு எந்த மாதிரியான பதில் சொல்லப்பட்டிருக்கும் என்பதும் அவரவர்களுக்கே தெரியும். &lt;br /&gt;&lt;br /&gt;தினக் கூலி வேலைக்குப் போகிறவர்களுக்கு இக்கேள்விகள் பற்றிக் கவலையில்லை - உலகத்திற்கே தெரியுமே களையெடுக்குப் போகும் மாரியம்மாவுக்கு எவ்வளவு வாங்குகிறாள் என்று! அம்பானிகளுக்கும் கவலையில்லை, அவர்களின் 'சம்பள'த்தைக் கட்டம்போட்டுப் &lt;a href="http://economictimes.indiatimes.com/articleshow/msid-1201147,curpg-1.cms"&gt;பத்திரிக்கைகளில் காட்டிவிடுகின்றனர்&lt;/a&gt;. மலைக்கும் மடுவுக்கும் இடையில் ஒரு பெருங்கூட்டம் இக்கவலையில் என்றும் அல்லாடிக் கொண்டே இருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-112413791211986132?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/112413791211986132/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=112413791211986132' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/112413791211986132'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/112413791211986132'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/08/blog-post_15.html' title='சம்பளம் எவ்வளவு?'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-112353624435497451</id><published>2005-08-08T23:17:00.000+02:00</published><updated>2005-08-08T23:24:04.360+02:00</updated><title type='text'>ஓடப்பிறந்தவர்கள்</title><content type='html'>நேற்று தொலைக்காட்சியில் கொஞ்ச நேரம் ஹெல்சிங்கியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2005ம் ஆண்டிற்கான உலக தடகளப் போட்டிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அது பெண்களுக்கான பத்தாயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயம் (பந்தயத்திற்கும், போட்டிக்கும் என்ன வித்தியாசம்?). இருபது பேர்கள் இருப்பார்கள் என நினைக்கிறேன். ஓட ஆரம்பித்தார்கள், ஓடினார்கள் ஓடினார்கள் ஓடிக்கொண்டே இருந்தார்கள். ஆரம்பித்ததும் ஒருவருக்குக் கால் தடுக்கிவிடவேண்டுமா என்ன? இருந்தாலும் சுதாகரித்துக் கொண்டு எழுந்து ஓடினார், அதுதான் இன்னும் பல சுற்றுகள் உள்ளனவே. &lt;br /&gt;&lt;br /&gt;இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் வெகுநேரம் கஷ்டப்பட்டு முன்னால் ஓடிக் கொண்டிருந்தார் (இவரையும் சேர்த்து கேமராவின் கண்களுக்கு பெரும்பாலும் ஏனோ குறிப்பிட்ட பெண்களே அகப்பட்டார்கள், தோலின் நிறத்தாலோ?!). அவரை ஒட்டியே பத்துப் பன்னிரண்டு பேரடங்கிய ஒரு கூட்டம் சீராக ஓடிக் கொண்டிருந்தது. சராசரியாக ஒரு கி.மீட்டரை மூன்று சொச்சம் நிமிடங்களில் முடித்து விட்டிருந்தனர்! நேரம் ஆக ஆக அவரை மற்றவர்கள் தாண்டிச் செல்ல ஆரம்பித்தனர். குறிப்பாக ஒரே சீருடையணிந்த மூன்று பெண்கள். 9600 மீட்டர்கள் ஓடிக் களைத்த பின்பும் கடைசிச் சுற்றுக்கு எங்கிருந்துதான் பலம் வந்ததோ, ஓட்ட வேகத்தை முடுக்கினார்கள் பாருங்கள் அம்மூன்று பெண்களும்! கடைசியில் போட்டி அவர்களுக்கிடையில்தான், ஒரே நாட்டிற்கு மூன்று பதக்கங்களையும் அள்ளிச் சென்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயமாக எத்தியோப்பியர்கள் ஓடப் பிறந்தவர்கள்! சமீப காலங்களில் நான் கவனித்தவரை நெடுந்தொலைவு ஓட்டப் பந்தயங்களில் ஆண், பெண் இரண்டு பிரிவுகளிலும் பதக்கங்களை அள்ளிக் குவிக்கிறார்கள். (&lt;a href="http://www.olympic.org/uk/athletes/heroes/bio_uk.asp?PAR_I_ID=90856 "&gt;Haile Gebrselassie&lt;/a&gt; தன் சிரிப்பு நிறைந்த முகத்தாலும், கடினமாக ஓடித் தொடர்ந்து பெற்ற பல வெற்றிகளாலும் நிறைய பேருக்குப் பரிச்சயமானவர்.)&lt;br /&gt;2005 தடகளப் போட்டிகளின் &lt;a href="http://www.iaaf.org/WCH05/results/medals.html#"&gt;இன்றைய பதக்கப்பட்டியலில்&lt;/a&gt; இரண்டாவது இடத்திலுள்ளார்கள் (சுட்டியிலுள்ள பக்கம் அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் என்பதை நினைவிற் கொள்க). பஞ்சம், பசி, பட்டினி என்றே அறியப்பட்ட ஒரு நாட்டின் முகத்தை உலகிற்கு வேறுவகையில் உயர்த்திக் காட்டும் இவர்கள் நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக, தற்போது எந்த நாட்டைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், நிறைய விளையாட்டுப் போட்டிகளில், குறிப்பாகத் தடகளம், ஆப்பிரிக்க வம்சாவளியினர் தனிப்பெரும் இடத்தை வகிக்கின்றனர் என்றே நினைக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-112353624435497451?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/112353624435497451/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=112353624435497451' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/112353624435497451'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/112353624435497451'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/08/blog-post.html' title='ஓடப்பிறந்தவர்கள்'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-112280824330010942</id><published>2005-07-31T13:08:00.000+02:00</published><updated>2005-07-31T13:10:43.306+02:00</updated><title type='text'>சில்லரை விற்பனையில் நேரடி அந்நிய முதலீடு</title><content type='html'>இந்தியாவில் சில்லரை விற்பனையில் (retail business) பன்னாட்டு நிறுவனங்களை ஈடுபட அனுமதிக்கும் யோசனை அரசின் பரிசீலனையில் உள்ளதை செய்திகளில் அடிக்கடி காண்கிறோம். ஆரம்ப கட்டத்தில் பல கட்டுப்பாடுகளுடன் (10,000 சதுர அடித் தளம், ஒரு மில்லியன் மக்களுக்கு ஒரு கடை போன்றவை) மாறுகடையை (market) இவர்களுக்குத் திறந்து விடப்பட்டாலும், காலப்போக்கில் இவ்விதிமுறைகள் தளர்த்தப்படும் அல்லது காற்றில் விடப்படும்.  இப்படியொரு மசோதா நாடாளுமன்றத்திற்கு வந்தால் வழக்கம்போல நமது 'மாண்புமிகு' உறுப்பினர்கள் கூட்டத்தோடு கோவிந்தா போட்டு நிறைவேற்றி விடுவார்கள். அப்புறம் நடைமுறைக்கு வந்தபின்தான் அதிலுள்ள சிக்கல்கள் தெரிந்து 'போராட' ஆரம்பிப்பார்கள் ('போட்டா' சட்டம் ஓர் உதாரணம்). &lt;br /&gt;&lt;br /&gt;சில்லரைப் பெரு வியாபாரத்தில் ஈடுபடுள்ள &lt;a href="&lt;br /&gt;http://economictimes.indiatimes.com/articleshow/1171050.cms"&gt;உள்நாட்டு ஜாம்பவான்களும்&lt;/a&gt;, &lt;a href="http://www.hindu.com/thehindu/holnus/000200507311401.htm"&gt;இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் &lt;/a&gt;இந்த யோசனையை எதிர்க்கிறார்கள். அரசு என்ன முடிவெடுக்கப் போகிறதென்பதைப் பார்க்கவேண்டும். மாறுகடையைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் திறந்துவிடப்படும் பட்சத்தில் ஏதோ சில நன்மைகள் இருந்தாலும், பலதரப்பு மக்கள், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பது எனது பொத்தாம்பொதுவான எண்ணம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-112280824330010942?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/112280824330010942/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=112280824330010942' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/112280824330010942'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/112280824330010942'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/07/blog-post_31.html' title='சில்லரை விற்பனையில் நேரடி அந்நிய முதலீடு'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-112193744547687082</id><published>2005-07-21T11:15:00.000+02:00</published><updated>2005-07-21T11:17:25.483+02:00</updated><title type='text'>BMW-ம் வந்துவிட்டது!</title><content type='html'>செங்கற்பட்டில் BMW கார் தொழிற்சாலையை நிறுவவுள்ளதாகச் &lt;a href="http://autofeed.msn.co.in/pandorav3/output/Business/c0b19a13-d0ed-40c2-a41b-e5f31ef134fd.aspx"&gt;செய்தி&lt;/a&gt;. புதிய மாறுகடைகளைத் தேடிப்போக வேண்டிய கட்டாயத்திலிருக்கும் பெருநிறுவனங்கள் ஒவ்வொன்றாக இந்தியாவிற்குள் அடியெடுத்து வைக்கின்றன. கேட்க நன்றாக இருந்தாலும், சாலை வசதி மேம்பாட்டிலும், சாலை விதிகளை மதித்துப் பின்பற்றுவதிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படாத வரை எந்த புதுக் கார் வந்து என்னவாகிவிடப் போகிறது என்ற ஆதங்கமும் எழுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வரும் நாட்களில் "BMW இங்கு வர நான்/நாங்கள் தான் காரணம்" என்று சில குரல்களைக் கேட்கலாம்! எங்கோ அடுத்த சாலையில் வரும் மளிகைக் கடைக்கும் நான் தான் காரணம் என்று சொல்லாத வரைக்கும் சரி!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-112193744547687082?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/112193744547687082/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=112193744547687082' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/112193744547687082'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/112193744547687082'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/07/bmw.html' title='BMW-ம் வந்துவிட்டது!'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-112189712567310722</id><published>2005-07-20T23:51:00.000+02:00</published><updated>2005-07-21T00:07:03.810+02:00</updated><title type='text'>குடமுழா</title><content type='html'>இந்த வாரத்தில் சிலமுறை தவில் இசைத் துண்டுகளை இணையத்தில் ஆங்காங்கும், இருக்கின்ற ஒலிப்பேழையொன்றிலிருந்தும் காரணமில்லாமல் கேட்டுக் கொண்டிருக்கிறேன். தவில் ஓர் அருமையான இசைக்கருவி. சிறு வயதில், ஊர்விழாக்களின் போது ஒரு நபர் இதைத் தோளில் தொங்கவிட்டுக் கொண்டு அடி பின்னியெடுப்பதைக் கண்டு ஆட்டமும் போட்டுள்ளோம். திருமணம் போன்ற வீட்டு விழாக்களிலும் முக்கிய இடத்தைப் பெற்றிருந்த தவிலுக்கு இப்பொழுதெல்லாம் சரியான மரியாதை கிடைக்கிறதா என்று சந்தேகமாக உள்ளது. படப்பாடல் நிகழ்ச்சிகளையும், 'பேண்டு' வாத்தியங்களையும் புகுத்தி உள்ளதைக் கெடுத்துக் கொண்டிருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம், குடமுழா என்றொரு இசைக்கருவி. இதைப் பஞ்சமுக வாத்தியம் என்றும் சொல்வார்களாம். குடமுழாவைப் பற்றிய அரிய புத்தகம் ஒன்று வெளியாகியுள்ளது. நூல் அறிமுகக் கட்டுரைக்கான சுட்டி:&lt;a href="http://varalaaru.com/Default.asp?articleid=162"&gt; http://varalaaru.com/Default.asp?articleid=162&lt;/a&gt;. அக்கட்டுரையில் இருக்கும் ஆடவல்லாரின் சிற்பப் படம் ஏதோ பரவசத்தை ஏற்படுத்தியது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-112189712567310722?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/112189712567310722/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=112189712567310722' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/112189712567310722'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/112189712567310722'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/07/blog-post_20.html' title='குடமுழா'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-112162805681950321</id><published>2005-07-17T21:17:00.000+02:00</published><updated>2005-07-17T21:20:56.826+02:00</updated><title type='text'>உயிரெழுத்துக்கள் ஐந்து!! - 2</title><content type='html'>&lt;a href="http://nradhak.blogspot.com/2005/07/blog-post_16.html"&gt;சென்ற பதிவின்&lt;/a&gt; தொடர்ச்சி...&lt;br /&gt;&lt;br /&gt;"இனி கூட்டிக் கழித்துப் பார்த்தால், இப்பொழுது உயிர் எழுத்துக்கள் அ,இ,உ,எ,ஒ என்று ஐந்தாகிவிட்டதல்லவா? ஆங்கிலத்தில் aeiou எனும் ஐந்து உயிரெழுத்துக்கள் ஆனதைப்போல. இவ்வாறான மாற்றங்களால் நம்மொழி அடைந்த நன்மை என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;1. மொழியின் வரிவடிவம் அமைப்பின் சுருக்கம்.&lt;br /&gt;2. மொழியின் வரிவடிவில் தெளிவு.&lt;br /&gt;3. கற்போருக்கு (சிறுவர், பிறமொழியாளர்) இலகு.&lt;br /&gt;4. நவீனத்துக்கு ஈடு.&lt;br /&gt;5. பிறமொழிகளுடன் ஒப்பிட ஏது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறே மெய்யெழுத்துக்களில், ண்,ந்,ன் ஆகியனவற்றையும் ல்,ழ்,ள் ஆகியனவற்றையும் ஒரே வரிவடிவில் குறிக்க முடிவது பற்றி உத்தேசித்தால் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;இவைகுறித்தெல்லாம் நான் சொல்வதிலும் பார்க்க பேரா.எம்.ஏ.நுஃமான் என்ன சொல்கின்றார் என்று அறியவைப்பது கருத்தை உங்களுக்குள் செலுத்த இலகு அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;இன்று தமிழ் கூறும் நல்லுலகம் முழு உலகையும் தழுவி விரிந்து நிற்கின்றது. மறு வகையில் முழு உலகமும் சுருங்கி தமிழ் கூறும் நல் உலகக்குடிமகன் ஒருவனின் தனி அறைக்குள் இன்று internet ஊடாக நுழைந்துவிட்டது. அதற்கேற்ப தமிழ்மொழியும் தன்னை விசாலப்படுத்தி தன் ஆற்றலை அகலித்துக் கொள்ள முனைகின்றது. இன்று தமிழ் பல்தேசிய மோழி என்பதனையும் பல்லினப்பண்பாட்டு மொழி என்பதனையும் நாம் முதலில் ஒப்புக் கொள்ள வேண்டும். மொழி மாற்றம் தவிர்க்க முடியாதது. தமிழின் ஒலி மரபும் மொழிமரபும் நெகிழ்ச்சியடைந்து புதிய தேவைகளுக்கு ஏற்ப புதிய மரபுகள் தோன்றிவிட்டன.... (பேரா எம்.ஏ. நுஃமான் காலச்சுவடு 19)&lt;br /&gt;&lt;br /&gt;காலத்திற்கேற்ற கோலம் நம் தமிழ்மொழி கொள்ளாவிடில், அழிவதைத்தவிர வேறு வழிஇல்லை. ஆகும் வழியையே நாம் பார்க்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலத்தில் அத்தகைய மாற்றத்தை அது பெறுவதனை நாம் காண்கின்றோம். ph என்னும் வரிவடிவங்கள் f என்னும் ஒலிவடிவத்தை தந்து நிற்பதால் இப்போதெல்லாம் ph இதற்குப் பதிலாக f பயன்படுத்துகிறார்கள். இரண்டு வரிவடிவங்களுக்குப் பதிலாக ஒரு வடிவம். &lt;br /&gt;&lt;br /&gt;Photo - Foto&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வாறே ஒலிவடிவங்கள் ஒன்றாயிருக்கக் கண்டபோது தேவையற்ற வரிவடிவங்கைள நீக்குகின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;Night - Nite&lt;br /&gt;Colour - Color&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் ஒலி வடிவம் கருதி வரிவடிவம் சுருங்கிக் கொண்டு போவதும் ஆங்கிலத்தில் நிகழ்கின்றது. 1982 வாக்கில் தெல்லிப்பழைச் சந்தி வெள்ளவாய்க்கால் மதகில் ஒரு சுவரொட்டியைக் கண்டேன். மதில் ஆங்கிலத்தில் இவ்வாறு வாசகம் இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;JR, UR a facist&lt;br /&gt;VR not foolish&lt;br /&gt;go back.&lt;br /&gt;(ஜே.ஆர். என்னும் சிறீலங்கா ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்துக்காக யாழ்ப்பாணம் வந்தபோது இச்சுவரொட்டி காணப்பட்டது).&lt;br /&gt;&lt;br /&gt;UR (you are), VR (we are) என்று வந்தவிதம் தமிழிலும் சாத்தியப்படுமெனில், நன்று, மிகநன்று.&lt;br /&gt;&lt;br /&gt;உலக மொழிகள் யாவும் இவ்வாறு மாற்றத்தை அவாவி நிற்கின்றது. அதுவே வளர்ச்சிக்கு அறிகுறி. புதியன புகுத்தி தமிழை நாம் வாழவைப்போம், வளர வைப்போம். செய்வோமா?"&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-112162805681950321?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/112162805681950321/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=112162805681950321' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/112162805681950321'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/112162805681950321'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/07/2.html' title='உயிரெழுத்துக்கள் ஐந்து!! - 2'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-112152766268702487</id><published>2005-07-16T17:23:00.000+02:00</published><updated>2005-07-16T17:27:42.696+02:00</updated><title type='text'>உயிரெழுத்துக்கள் ஐந்து!!</title><content type='html'>ஈழமுரசு ஐரோப்பா என்ற வார இதழில் அ.இரவி என்பவர் எழுதிய 'புதியன புகுதல்' என்னும் கட்டுரை நான்கு பாகங்களாக வந்துவிட்டிருக்கிறது. அதன் கடைசி பாகம் மட்டும் இந்த வாரம் வாசிக்கக் கிடைத்தது. அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துக்களின் இன்றைய நடைமுறைச் சாத்தியம் பற்றிய கேள்வி இருந்தாலும் புதியவற்றை அறிதலும், எண்ணுதலும் நலமே. அக்கட்டுரையின் நான்காம் பாகம் பின்வருமாறு [பதிப்புரிமை பற்றி அவ்விதழில் எங்கும் காணோம்; அக்கட்டுரையை இங்கு பதிப்பதால் பதிப்புரிமைக்கு ஏதும் பங்கம் ஏற்படாதென்று நம்புகிறேன். அப்படியேதும் உண்டென அறிய வரும்பட்சத்தில் இக்கட்டுரை பதிவிலிருந்து நீக்கப்படும். இங்கு எழுத்துப்பிழைகள் ஏதேனும் இருந்தால் அது தட்டச்சின்போதும் நேர்திருக்கலாம்.] :&lt;br /&gt;&lt;br /&gt;"தமிழில் முதல் ஒலி வடிவங்கள் அல்லது மூலஒலிவடிவங்கள் முப்பது என்று சொன்னோமே! அவற்றுள் ஸ்,ஷ்,ஹ் ஆகியன வரவில்லை என்றெல்லாம் சொன்னோமே! என்ன சொன்னோமெனில் அவ்வாறான ஒலி வடிவங்களுக்கு தமிழில் வரிவடிவங்கள் கிடையாது என்று சொன்னோம்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னவென்றால் ஊரில் உலகில் இருக்கக்கூடிய எல்லா ஒலிவடிவங்களுக்கும் எல்லா மொழிகளிலும் வரிவடிவங்கள் இல்லை. அதற்கு சாத்தியமும் கிடையாது. தமிழில் ஞ், ழ் என்னும் ஒலிவடிவங்களுக்கு ஆங்கிலத்தில் வரிவடிவங்கள் இல்லை.  ஞானம்-Gnanam, அதாவது ஞ் என்பதற்கு Gn என்பதையே பயன்படுத்துகின்றனர். அது முற்றிலும் பொருத்தமானது அல்ல. தமிழ்-Thamizh, இங்கு ழ் என்பதற்கு zh என்னும் ஆங்கில வரிவடிவம் பயன்படுகிறது. இதன் பொருத்தப்பாடும் கேள்விக்குரியது.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வாறே ஆங்கில F,G,H,X,Z என்று இன்னும் பல ஒலிவடிவங்களுக்கு தமிழில் வரிவடிவம் இல்லை. எப்படியோ திக்குமுக்காடி Father என்பதனை ஃபாதர் என்று எழுதிவிடுகின்றோம். இப்போது ஒன்றுக்கும் உதவாமல் முழித்துக் கொண்டிருக்கும் ஆய்த எழுத்துக்கு (ஃ) ஒரு சொல்லில் இடம் பெறும் குதூகலம் வாய்ந்திருக்கிறது, அவ்வளவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இவை எவையும் மொழியின் போதாமை அல்ல. எல்லா மொழிகளும், பிறிதான மொழிகளிடமிருந்து இரவல் பெற்றும், கொடுத்தும், இயலுமானளவு தம்மை நிறைவு செய்து கொள்கின்றன. உலகுடன் ஒட்ட ஒழுகலும் உலகின் இன்றைய தேவையை நிறைவு செய்யும் பொருட்டும், நம் தமிழ்மொழியை எவ்வாறு வாலாயப்படுத்தப் போகின்றோம் என்பதே நம்முன் உள்ள கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் முதல் ஒலி வடிவங்கள் முப்பது என்றோமே! அதில் உயிர் எழுத்துகள் 12 உம் மெய்யெழுத்துக்கள் 18 உம் ஆகும் என்பதனை முதலில் குறித்துக் கொள்ளல் சாலும். ஒலிவடிவத்தின் உயிராக நிற்பது உயிர் எழுத்துக்கள் என்றும், உயிர் தங்குவதற்கு ஏதான உடலாக நிற்பது மெய்யெழுத்துக்கள் என்றும் சொல்லலாம். அந்த வகைப்பாடுகள் அற்புதம் என்பேன். ஆனால் வரிவடிவங்களை அளவுக்கதிகமாக இறைத்துவிட்டோமோ என்னும் ஐமிச்சம் தான் என்னிடையே தோன்றுகின்றது. உயிர் எழுத்துக்கள் எவை?&lt;br /&gt;&lt;br /&gt;அ-ஆ&lt;br /&gt;இ-ஈ&lt;br /&gt;உ-ஊ&lt;br /&gt;எ-ஏ&lt;br /&gt;ஐ&lt;br /&gt;ஒ-ஓ&lt;br /&gt;ஒள&lt;br /&gt;&lt;br /&gt;இவைதாமே! இப்படித் தொகுத்தலுக்கு ஒரு காரணம் உண்டு. உங்கள் பார்வையில் இடப்பக்கம் உள்ள ஐந்து உயிர் எழுத்துக்களும் (அ,இ,உ,எ,ஒ) போதும் என்பேன். ஏனைய ஏழு உயிர்களையும் கழித்து அழுத்துவிடலாம் என்றும் சொல்வேன். ஏன் சொல்கின்றேன்?&lt;br /&gt;&lt;br /&gt;அ,ஆ இரண்டையும் எடுங்கள். இரண்டும் ஒரே ஒலிவடிவங்களாலானவை. ஓம்தானே? உச்சரித்துப் பாருங்கள், உணர்வீர்கள். சிறு வித்தியாசம் என்னவெனில், அ என்பது குறுகியும் ஆ என்பது நீண்டும் ஒலிக்கின்றது. ஒலிவடிவங்கள் ஒன்றாயிருக்கின்ற போது இரண்டு வரிவடிவங்களை இதற்கு ஏன் இடவேண்டும்? நீட்சியான ஒலிவடிவம் வேண்டுமென்றால் எங்களிடம் ஏலவே உள்ள (ா) வரிவடிவத்தைப் பயன்படுத்தலாம்தானே? எப்படி? இதோ பாருங்கள் இப்படி!&lt;br /&gt;&lt;br /&gt;அ-அா&lt;br /&gt;இ-இா&lt;br /&gt;உ-உா&lt;br /&gt;எ-எா&lt;br /&gt;ஒ-ஒா&lt;br /&gt;&lt;br /&gt;சரி, ஐ உம் ஒள உம் அப்படியே இருக்கட்டும். பிறகு வருகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உயிர் எழுத்துக்களுக்கு மேற்கூறிய வரிவடிவங்களைக் கையாண்டோமானால், உயிர் எழுத்துக்களின் வரிவடிவங்களின் அளவைக் குறைத்துக் கொள்வோம் அல்லவா? இது தவறு, மரபை மீறுதல் தகாது என்று சொல்வோருக்கு, நான் என்ன சொல்ல? பவணந்தி முனிவர் கி.பி. 13ஆம் நூற்றாண்டளவில் சொன்னதைச் சொல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;பழையன கழிதலும் புதியன புகுதலும்&lt;br /&gt;வழுவா, கால வகையினானே&lt;br /&gt;&lt;br /&gt;மொழியின் வரிவடிவங்களைக் குறைத்துச் செல்லல் தொழில் நுட்ப வளர்ச்சிக்காலத்தில் கணனிப் பயன்பாடு அதிகரித்த நேரத்தில் மொழிக்கு மேலும் வலுவூட்டும். ஆகவே நாங்கள் இனி இப்படி எழுதுவோமா? அல்லது எல்லோரையும் எழுதச் சொல்லிக் கேட்போமா?&lt;br /&gt;&lt;br /&gt;அாடு (ஆடு), கிாரி (கீரி), உார் (ஊர்), ஒாடம் (ஓடம்)&lt;br /&gt;&lt;br /&gt;உயிர் எழுத்துக்களில் ஐ, ஒள என்னும் ஒலி, வரிவடிவங்கள் இரண்டு உள்ளன. இவற்றை எப்படி மாற்றமுறச் செய்யலாம்? ஐ என்பது அ உம் இ உம் சேர்ந்த ஒலிவடிவமே என்றும் ஒள என்பது அ உம் உ உம் சேர்ந்த ஒலிவடிவமே என்றும் தமிழ் இலக்கணம் சொல்கின்றது. அது சொல்லட்டும். தமிழில் ஏலவே ஐ ஒலிவடிவத்திற்கும் வரிவடிவங்கள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;ஐ - அய்&lt;br /&gt;ஒள - அவ்&lt;br /&gt;&lt;br /&gt;இவை மெத்தப் பொருந்திப் போகிறதல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;ஐயர் - அய்யர்&lt;br /&gt;ஒளவை - அவ்வை&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கூறிய உதாரணத்தில் ஒலிவடிவத்தைப் பார்த்தீர்களா? அவை அச்சொட்டாகப் பொருந்திப்போகிறது. சங்ககாலப்பாடல் ஒன்றினை மேலும் நான் உதாரணத்திற்குத் தருவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கையது வேலே காலன புனைகழன்&lt;br /&gt;மெய்யது வியரே மிடற்றது பசும்புண்&lt;br /&gt;&lt;br /&gt;(போரிலிருந்து வெற்றி பெற்று திரும்பிய தொண்டைமானைப் பார்த்து அவ்வை பாடியது. கையில் வேல், காலில் புனையப்பட்ட கழல் என்னும் ஆபரணம், உடல் முழுவதும் வியர்வை, தொண்டையில் புண்)&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு கையது, மெய்யது என்ற சொற்கள் வருகின்றபோது யாப்பிற்கும் அது மனைவதைக் காண்க. அதாவது முதலாவது வரியில் வரும் முதலெழுத்து கை என்பது நெடிலாகவும், இரண்டாவது வரியில் வரும், முதலெழுத்து மெ என்பது குறிலாகவும் அமைகிறது. இது யாப்புக்கு முரண். இரண்டும் நெடிலாக அமைய வேண்டும். ஆகவே இப்படி எழுதிப்  பார்ப்போமா?&lt;br /&gt;&lt;br /&gt;கய்யது வேலே காலன புனைகழன்&lt;br /&gt;மெய்யது வியரே மிடற்றது பசும்புண்&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது இரண்டு வரிகளினதும் முதலெழுத்துக்கள் (க, மெ) குறிலாக அமைந்து, யாப்பிலக்கணத்தை நிறைவு செய்கின்றதல்லவா?"&lt;br /&gt;&lt;br /&gt;(மீதி அடுத்த பதிவில்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-112152766268702487?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/112152766268702487/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=112152766268702487' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/112152766268702487'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/112152766268702487'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/07/blog-post_16.html' title='உயிரெழுத்துக்கள் ஐந்து!!'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-112137552868056589</id><published>2005-07-14T23:10:00.000+02:00</published><updated>2005-07-14T23:12:08.686+02:00</updated><title type='text'>பிரிவென்பது...</title><content type='html'>யாருக்கும் மன வருத்தமளிக்கும் நிகழ்வு. மகள் செல்லும் குழந்தைகள் காப்பகத்தில் (creche) பணிபுரிந்த இரண்டு பேருக்கும், கோடைவிடுமுறை முடிந்த பின்னால் பள்ளிக்குச் செல்லும் வயதெய்திய சில குழந்தைகளுக்கும் இன்று வழியனுப்பு விழா நடந்தது. வழக்கத்திற்கு மாறாக, மாலை 6 மணிக்கு மேல் அங்கு வந்து தங்களுடைய நண்பன்/நண்பிகளை அவர்களது பெற்றோருடன் இருக்கக்கண்டு,  அவர்களுடன் விளையாடி, செல்லுமுன் அன்பளிப்புகள் சிலவற்றைப் பெற்றுக் கொண்டு, உண்டு களித்துச் சென்றது அக்குழந்தைகளுக்கு நல்ல பொழுதாக அமைந்திருக்கும். பிரிவென்பது அவர்களுக்குப் புதிதா என்ன? இச்சிறு வயதில் பெற்றோரின் பிரிவைத்தான் தினமும் காலையில் சந்திப்பவர்களாயிற்றே!&lt;br /&gt;&lt;br /&gt;சில வருடங்கள் அங்கு பணியாற்றிவிட்டு விடைபெறும் நண்பர்கள் இருவருக்கும் இந்நாள் கடினமானதொன்று. வெயில் மின்னும் மாலையில், பெற்றோர், குழந்தைகள் அனைவரும் வட்டமாக நிற்க, சக பணியாளர் ஒருவர் நன்றி தெரிவித்து உரை வாசித்து முடித்த போது விடைபெற்றுச் செல்வோரின் கண்களில் நீர் கசிகிறது. சுற்றி நிற்போருக்கும் கனத்த பொழுது அது. நெகிழ்வுணர்வுக்கு இடமேது நாடேது! அவர்களுடனான எங்களுடைய பழக்கம் கிட்டத்தட்ட ஒரு வருடம்தான் என்றாலும், மனதிற்கு கொஞ்சம் கஷ்டமாகத்தானிருந்தது. மனதார வரும் துயரம், மகிழ்ச்சி முதலான உணர்வுகள் ஒருசில நிமிடங்கள்தான் இருக்கிறதென்றாலும் அவற்றின் அனுபவத்தை நினைத்தே மற்ற காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-112137552868056589?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/112137552868056589/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=112137552868056589' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/112137552868056589'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/112137552868056589'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/07/blog-post_14.html' title='பிரிவென்பது...'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-112109640154178925</id><published>2005-07-11T17:38:00.000+02:00</published><updated>2005-07-11T21:42:07.173+02:00</updated><title type='text'>இது எப்படி இருக்கு?</title><content type='html'>இன்று வந்த மின்னஞ்சல் ஒன்றில்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v101/nradhak/Vadodara.jpg" alt="Image hosted by Photobucket.com"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;" வடோதரா, குஜராத்தில் சமீபத்தைய மழை வெள்ளத்தின் போது நிகழ்ந்த காட்சி! இணை ஆணையர் (கே.குமாரசுவாமி?), தன் கால்களும், கால்சட்டையும் நனையாமல் இருக்க காவலர் ஒருவரின் தோளில் அமர்ந்து செல்கிறார்!!&lt;br /&gt;&lt;br /&gt;ஆதாரம்: இந்தியன் எக்ஸ்பிரஸ், ஜூலை 2"&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-112109640154178925?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/112109640154178925/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=112109640154178925' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/112109640154178925'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/112109640154178925'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/07/blog-post_11.html' title='இது எப்படி இருக்கு?'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-112017261871869413</id><published>2005-07-01T00:22:00.000+02:00</published><updated>2005-07-01T01:13:13.343+02:00</updated><title type='text'>தமிழ்ப்புத்தகத் தகவல் மையம்</title><content type='html'>இந்த வார வலைப்பதிவுகளில் தமிழ்ப் புத்தகத் தகவல் மையம் அமைப்பது பற்றிய எண்ணங்களையும், முயற்சிகளையும் பற்றி வாசித்திருப்பீர்கள். அதற்காக &lt;a href="http://www.domesticatedonion.net/blog/?blog=donion"&gt;வெங்கட்&lt;/a&gt;, விக்கி ஒன்றைத் துவக்கியதைப் பற்றியும் அறிவீர்கள் (அவ்விக்கியின் முகவரி:  &lt;a href="http://abbe.optics.utoronto.ca/tamilbooks/"&gt;http://abbe.optics.utoronto.ca/tamilbooks/&lt;/a&gt;).&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்வமிருப்போர் தேவையான தகவல்களை அதில் இடத் துவங்கினால் நன்றாக இருக்கும். என் சார்பில், முதல் கட்டமாக என்னிடமிருக்கும் தமிழகப் பதிப்பாளர்களின் முகவரிகளை இடலாமென்றுள்ளேன். தற்சமயம், பதிப்பாளர்களின் பெயர்களை மட்டும் மேற்குறிப்பிட்ட விக்கியின் இணையப்பக்கத்தில் "பதிப்பாளர்கள்" என்ற சுட்டியின்கீழ் காணமுடியும். &lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு பதிப்பாளரின் முகவரி விவரங்களை வேறொரு பக்கத்தில் இடவேண்டும். ஏற்கனவே இடப்பட்டிருந்த ஒரு முகவரிப் பக்கத்தின் தகவல்களைச் சற்று மேம்படுத்திப் பின்வரும் வடிவத்தை யோசித்து வைத்துள்ளேன்: &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;அன்பு பதிப்பகம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்பு கொள்ள&lt;br /&gt;&lt;br /&gt;பழைய எண் 63அ, புது எண் 4அ&lt;br /&gt;டாக்டர் அரங்காச்சாரி சாலை&lt;br /&gt;சென்னை-600018&lt;br /&gt;&lt;br /&gt;தொலைபேசி:&lt;br /&gt;தொலைநகல்:&lt;br /&gt;மின்னஞ்சல்:&lt;br /&gt;இணைய தளம்:&lt;br /&gt;&lt;a href="http://"&gt;&lt;br /&gt;வெளியீடுகள்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;மேலதிகத் தகவல்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதில் 'வெளியீடுகள்' சுட்டியைச் சொடுக்கினால் அப்பதிப்பகத்தின் புத்தகப் பட்டியலைக் காணும்பொருட்டு வேறொரு பக்கத்தில் அவற்றை உள்ளிடலாம் (தகவல், ஆர்வம் உள்ளோர் அனைவரும்). பிறகு அங்குள்ள ஒவ்வொரு புத்தகத் தலைப்பின் சுட்டிக்கும் வேறொரு பக்கத்திலுள்ள அப்புத்தகத்தின் விவரங்களுக்கான இணைப்பை ஏற்படுத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதைக்கு மேற்கண்ட உதாரண முகவரிப் பக்கத்தின் வடிவைக் குறித்த உங்களின் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கக் கோருகிறேன். (பதிப்பாளர்களின் தொலைபேசி, தொலைநகல், மின்னஞ்சல், இணையதளம் போன்ற விவரங்கள் என்னிடமில்லை; இருப்பினும் வருங்காலத்தில் தெரியவரும்போது சேர்த்துக் கொள்ளலாம்).&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ப் புத்தகத் தகவல் மையத்திற்கான விக்கி 'குடிசை'யைக் கட்ட ஒரு சிறு குச்சியை எடுத்துப் போடுகிறேன். நீங்களும் வாருங்கள், கட்டுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்புடைய சில சுட்டிகள்:&lt;br /&gt;&lt;a href="http://www.domesticatedonion.net/blog/?item=540"&gt;தமிழ்ப்புத்தகத் தகவல் மையம் - விக்கியும் மேலும்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.domesticatedonion.net/blog/?item=539"&gt;தமிழ்ப் புத்தகங்களுக்கான தகவல் மையம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://selvaraj.weblogs.us/archives/145"&gt;புத்தகப் பட்டியல் தரவுதளம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://thoughtsintamil.blogspot.com/2005/06/blog-post_28.html"&gt;இணையத்தில் புத்தகங்கள் பற்றிய தகவல்கள்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://ravisrinivas.blogspot.com/2005/06/blog-post_27.html"&gt;நேற்று, இன்று , நாளை&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-112017261871869413?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/112017261871869413/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=112017261871869413' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/112017261871869413'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/112017261871869413'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/07/blog-post.html' title='தமிழ்ப்புத்தகத் தகவல் மையம்'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-111956758856186318</id><published>2005-06-24T00:56:00.000+02:00</published><updated>2005-06-24T01:00:20.253+02:00</updated><title type='text'>தலைவர்களின் எழுத்தும் பேச்சும்</title><content type='html'>அனாமிகாவின் &lt;a href="http://meysun.blogspot.com/2005/06/blog-post_21.html"&gt;பசித்திரு! விழித்திரு!!&lt;/a&gt; பதிவைப்  படித்ததும் அண்மையில் பத்ரி எழுதியிருந்த &lt;a href="http://thoughtsintamil.blogspot.com/2005/05/blog-post_31.html"&gt;சத்யம் ஏவ ஜயதே&lt;/a&gt; பதிவு நினைவிற்கு வந்தது. அதில், இந்நாளைய அரசியல் தலைவர்கள் யாரும் அவ்வளவாக எழுதுவதில்லை என்று குறிப்பிட்டிருந்தார். அப்போது எழுத முடியாத பின்னூட்டத்தை இங்கு இட்டுவைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவுசார் விவாதங்கள், கருத்துகளை இக்கணவான்கள் யாரும் நினைக்கிறார்களா என்றே தெரியவில்லை; பிறகுதானே பேச்சும் எழுத்தும். முன்பெல்லாம் நாடாளுமன்றத்தில் தலைவர்களின் பேச்சுகள் கருத்து செறிவானவையாகவும், மக்களுக்குப் பயனுள்ளவையாகவும் இருப்பதாகக் கேட்டுள்ளேன். சுருக்கெழுத்து கற்றுக் கொள்ளச் சென்ற காலங்களில், அங்குள்ள ஆசிரியர் மூத்த மாணவர்களுக்கு நேரு முதலான தலைவர்களின் நாடாளுமன்றப் பேச்சைப் புத்தகங்களிலிருந்து பயிற்சிக்கு வழங்குவதைப் பார்த்திருக்கிறேன். அவ்வப்போது அப்பேச்சுகளைப் பற்றியும் சிலாகித்துச் சொல்வார். இப்போதுள்ள பல நாடாளுமன்ற, மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி யாவரும் அறிந்ததே! இவர்களிடமிருந்து எந்தப் பேச்சை, எழுத்தை எதிர்பார்ப்பது?&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல நம்நாட்டு நிறுவனத் தலைவர்களின் நிலைமை எப்படியோ?!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-111956758856186318?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/111956758856186318/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=111956758856186318' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111956758856186318'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111956758856186318'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/06/blog-post_24.html' title='தலைவர்களின் எழுத்தும் பேச்சும்'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-111947462719227768</id><published>2005-06-22T23:09:00.000+02:00</published><updated>2005-06-22T23:10:27.216+02:00</updated><title type='text'>ஸ்விஸ் ரயில் வலை ஸ்தம்பிப்பு</title><content type='html'>அலுவலகத்திலிருந்து இன்று மாலை வீடு வர கொஞ்சம் தாமதமானது. பேருந்திலிருந்து இறங்கியதும் பார்த்தால் அருகாமையிலிருந்த பேருந்து மற்றும் ட்ராம் நிறுத்தங்களில் கூட்டம் வழக்கத்திற்கு அதிகமாகவே இருந்தது. சில சமயங்களில், ட்ராமின் தடத்தில் ஏதாவது விபத்து ஏற்பட்டால் பிரச்சனை சரியாகும் வரை (ஒரு சில மணி நேரங்கள்) அதன் போக்குவரத்தை நிறுத்தி வைத்து, ட்ராமிற்கு பதிலாக பேருந்துகளை இயக்குவார்கள். ஒருவேளை அப்படி ஏதேனும் விபத்து நடந்திருக்குமோ (அப்படியொரு விபத்தும் அப்பாதையில் நடந்ததாக இதை எழுதுவதற்குச் சற்று முன்னர் நண்பரொருவர் தொலைபேசியில் தெரிவித்தார்) என்று நினைத்துக் கொண்டே சாலையைக் கடந்து கொண்டிருக்க இரயில் நிலையத்தின் ஒலிபெருக்கியில் ஏதோ சொல்லி முடித்திருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வீடு வந்த சேர்ந்த சில மணி நேரங்கள் கழித்து இணையத்தில் செய்திகளைப் பார்த்தபோதுதான் விதயமே தெரிந்தது. மாலை 6 மணிக்கு சற்று முன்னதாக நாட்டின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட மின்சாரக் கோளாறின் காரணமாக முழு ஸ்விஸ் ரயில் வலையும் ஸ்தம்பித்து விட்டது. இங்கு மின்தடை கேட்டறிந்திராத ஒன்றால், இச்செய்தி ஆச்சரியமளித்தது. மின்கோளாறிற்கான காரணங்களை வரும் நாட்களில் அலசிக் கண்டுபிடித்துச் சரிசெய்துவிடுவார்களென்றாலும், இன்றைய பிரச்சனையால் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒருங்கே பாதிக்கப்பட்டுவிட்டனர்-அதுவும் வேலை முடிந்து வீடு செல்லும் நேரத்தில்! 20:00 மணி வாக்கில் முதல் இரயில் ஓடத் தொடங்கிவிட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இப்பிரச்சனையின் பாதிப்பு நாளை (காலை) வரை இருக்கக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நாட்டுப் போக்குவரத்தில் இரயில் மிக முக்கியமான அங்கம் வகிக்கிறது. இங்குள்ள இரயில் அமைப்பானது நம்பகத்தன்மை, காலந்தவறாமை, நேர்த்தித்திறன் முதலானவைகளுக்குப் பெயர்பெற்றது. யானைக்கும் அடி சறுக்கும் என்பார்களே!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-111947462719227768?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/111947462719227768/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=111947462719227768' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111947462719227768'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111947462719227768'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/06/blog-post_22.html' title='ஸ்விஸ் ரயில் வலை ஸ்தம்பிப்பு'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-111930537015366692</id><published>2005-06-21T00:03:00.000+02:00</published><updated>2005-06-21T00:09:30.156+02:00</updated><title type='text'>பூங்காவில் நேற்று</title><content type='html'>ஜூரிக் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் பூங்காவில் நேற்று எற்பாடு (14:00-18:00 வரை உள்ள நேரம்) எடுத்த படங்களில் சில:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v101/nradhak/ZH_BotanicalGarden/ZH_BG_Pond.jpg" alt="Image hosted by Photobucket.com"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v101/nradhak/ZH_BotanicalGarden/ZH_BG_Savanna.jpg" alt="Image hosted by Photobucket.com"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v101/nradhak/ZH_BotanicalGarden/ZH_BG_SemiTropic1.jpg" alt="Image hosted by Photobucket.com"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v101/nradhak/ZH_BotanicalGarden/ZH_BG_SemiTropic2.jpg" alt="Image hosted by Photobucket.com"&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-111930537015366692?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/111930537015366692/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=111930537015366692' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111930537015366692'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111930537015366692'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/06/blog-post_21.html' title='பூங்காவில் நேற்று'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-111917376723763675</id><published>2005-06-19T11:33:00.000+02:00</published><updated>2005-06-19T11:36:07.246+02:00</updated><title type='text'>தமிழகத்தில் புலிகளின் இரண்டாவது சரணாலயம்</title><content type='html'>இன்று காலையில் மகிழ்ச்சியானதொரு செய்தி கண்ணில்பட்டது. பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலைப் பகுதியில் இருக்கும் இந்திராகாந்தி தேசிய வனவிலங்கு சரணாலயத்தைத் தமிழ்நாடு மாநில வனத்துறை புலிகளின் சரணாலயமாகவும (ஏற்கனவே இது யானைகளின் சரணலாயமாக உள்ளது) அறிவிக்கச் செய்த பரிந்துரையைப் புறத்திட்டு-புலி வழிநடத்துக் குழு (Project Tiger Steering Committee) ஏற்றுக்கொண்டு, அதை மையத் திட்டக்குழுவின் ஒப்புதலுக்கு முன்வரித்துள்ளது (forward). இந்த ஒப்புதல் கிடைத்துவிட்டால் இவ்விடம் தமிழகத்தில் அமையப்போகும் இரண்டாவது புலிகளின் சரணாலயமாக இருக்கும். தமிழகத்தில் இருக்கும் புலிகளின் எண்ணிக்கை 88 (2001 கணக்கெடுப்பின்படி) என்றும், அவற்றில் 29 திருநெல்வேலி மாவட்டத்திலிருக்கும் காலக்காடு-முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் உள்ளன என்பது புதிதாகத் தெரிந்துகொண்ட செய்தி; ஏதோ இத்தனை எண்ணிக்கையிலாவது அவை பிழைத்திருக்கிறதே என்று ஆறுதல் அடையவேண்டியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href=" http://www.hindu.com/2005/06/19/stories/2005061907530100.htm"&gt;செய்திக்கான சுட்டி&lt;/a&gt;.&lt;br /&gt;தனது அண்மைய டாப்சிலிப் அனுபவத்தை அழகாக வடித்திருக்கும் நாராயணனின் &lt;a href="http://urpudathathu.blogspot.com/2005/06/blog-post_07.html"&gt;வலைப்பதிவிற்கான சுட்டி&lt;/a&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-111917376723763675?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/111917376723763675/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=111917376723763675' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111917376723763675'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111917376723763675'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/06/blog-post_19.html' title='தமிழகத்தில் புலிகளின் இரண்டாவது சரணாலயம்'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-111904508721762509</id><published>2005-06-17T23:50:00.000+02:00</published><updated>2005-06-17T23:51:27.223+02:00</updated><title type='text'>கமலம் பாதக் கமலம்</title><content type='html'>இன்று மாலை திடீரென ஏனோ &lt;a href="http://www.raaga.com/channels/tamil/movie/t0000664/moha-mull.htm"&gt;இந்தப் பாடலைக்&lt;/a&gt; கேட்கத் தோன்றியது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-111904508721762509?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/111904508721762509/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=111904508721762509' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111904508721762509'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111904508721762509'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/06/blog-post_17.html' title='கமலம் பாதக் கமலம்'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-111866950386220077</id><published>2005-06-13T15:27:00.000+02:00</published><updated>2005-06-13T15:31:43.866+02:00</updated><title type='text'>படிக்காத புத்தகங்கள்</title><content type='html'>வலைப்பதிவில் எழுதி வாரங்கள் பலவாகிவிட்டன. அவ்வப்போது எட்டிப்பார்த்துவிட்டும், கொஞ்சம் கிடைக்கும் சந்தில் எப்போதாவது பின்னூட்டங்கள் இட்டுவந்தாலும் தொடர்ந்து எழுத முடியவில்லை. நேரத்தை நாம்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டுமென்று தெரிகிறது, இருந்தும்.... எப்படியோ இப்புத்தக விளையாட்டின் மூலம் உள்ளே வந்தாயிற்று. அதற்காக &lt;a href="http://selvaraj.weblogs.us/"&gt;செல்வராஜி&lt;/a&gt;ற்கு மிக்க நன்றி, தாமதத்திற்கு வருத்தம் சொல்லிக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய வாசிப்பனுபவம் இதுவரை சொல்லப்பட்டவைகளிலிருந்து எந்த விதத்திலும் பெரிதும் வேறுபடாததால் அதைக் கூறத் தவிர்க்கிறேன். வாசித்தவை சில காலம் நினைவில் இருந்துவிட்டு பின்னால் ஏதோ 'கனவு' போலாகிவிடுகிறது (ஞாபக மறதிக்கு இப்படியொரு பூச்சு, கண்டுக்காதீங்க ;-) ). அவற்றிலுள்ள பெயர்கள், இடங்கள், நிகழ்வுகள் ஏதேனுமொரு நொடிப்பொழுதில் மின்னல் போல வந்து செல்லக்கூடும். இருந்தாலும் வாசிப்பென்பதே அச்சமயத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஓர் அனுபவம், தெரிதல் என்று கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படிக் கனவாக நிற்கும் மற்றும் சமீபத்தில் வாசித்த சில படைப்புகள் (தற்போக்கான வரிசை):&lt;br /&gt;&lt;br /&gt;ஞானரதம் - சுப்ரமண்ய பாரதியார்&lt;br /&gt;காதுகள் - எம்.வீ.வெங்கட்ராம்&lt;br /&gt;சம்ஸ்காரா - யூ.ஆர்.அனந்தமூர்த்தி&lt;br /&gt;தமிழகத்தில் கல்வி - வே.வசந்தி தேவியுடன் சுந்தர ராமசாமியின் உரையாடல்&lt;br /&gt;குவாண்டம் கணினி - வெங்கடரமணன்&lt;br /&gt;கள்ளிக்காட்டு இதிகாசம் - வைரமுத்து&lt;br /&gt;பூரணி கவிதைகள் - பூரணி&lt;br /&gt;கொங்கு வட்டாரச் சொல்லகராதி - பெருமாள் முருகன் (உசாத்துணை நூலென்றாலும் வாங்கிய காலத்தில் அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தது)&lt;br /&gt;Education and significance of life - J.Krishnamurthy&lt;br /&gt;Resurrection - L.Tolstoy&lt;br /&gt;Life of birds - David Attenborough&lt;br /&gt;O Jerusalem - Larry Collins, Dominique Lappiere&lt;br /&gt;Five Past Midnight in Bhopal - Dominique Lappiere, Javier Moro&lt;br /&gt;Nineteen Eighty-Four - George Orwell&lt;br /&gt;New rulers of the world - John Pilger&lt;br /&gt;போதும்..போதும்..&lt;br /&gt;&lt;br /&gt;நிறைய நாட்களாக வாசித்துக் கொண்டிருப்பவை:&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டுப் பறவைகள் - முனைவர் க.ரத்னம்&lt;br /&gt;Savaging the civilized - Ramachandra Guha&lt;br /&gt;&lt;br /&gt;படிக்க, வாங்க வேண்டியவை என ஒரு பெருஞ்சரம் உள்ளது, எப்போது என்றுதான் தெரியாது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-111866950386220077?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/111866950386220077/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=111866950386220077' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111866950386220077'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111866950386220077'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/06/blog-post.html' title='படிக்காத புத்தகங்கள்'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-111602386520086511</id><published>2005-05-14T00:25:00.000+02:00</published><updated>2005-05-14T00:37:45.206+02:00</updated><title type='text'>கள்ளிக்காட்டு இதிகாசம்</title><content type='html'>சிறுகதை, புதினம் போன்றவற்றை ஏன் வாசிக்க வேண்டும் என்ற கேள்வியொன்று எப்போதாவது வருவதுண்டு - பொழுதுபோக்கிற்கா, நானும் இலக்கியம் படிக்கிறேன் என்று பறைசாற்றிக் கொள்வதற்கா, அதிலிருந்து ஏதேனும் 'கற்றுக்' கொள்வதற்கா, எதையாவது வாசிக்க வேண்டுமென்பதற்காகவே வாசிப்பதா, இல்லை வேறெதெற்காவதா? கேள்வி மட்டுந்தானுண்டு, இப்போதைக்கு பதிலில்லை, இருக்கட்டும். &lt;br /&gt;&lt;br /&gt;புத்தகக் கண்காட்சியொன்றின் முன்வரிசையில் புதிதாக அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களின் கவர்ச்சியா, வைரமுத்து என்ற பிரபலமான திரைப்பாடலாசிரியரின் புதினம் என்பதாலா, காசு சேர்த்து வைத்து புத்தகத்தை வாங்க வேண்டிய காலம் போயாச்சு என்பதாலா தெரியாது, வாங்கியாயிற்று. எல்லா அவசரமும் வாங்கும் வரைதான். இருக்கும் புத்தகங்களுக்கு துணையாக, வாங்கியதும் பக்கத்தில்போய் நின்றுகொள்ள வேண்டியதுதான். எப்படியா, வாங்கி வைத்து ரொம்ப நாட்களாக அலமாரியில் நின்று கொண்டிருந்த இந்த 'இதிகாச'த்திற்கு சென்ற வாரம் விமோசனம் கிடைத்தது. நீளமான வாரவிடுமுறை வந்ததால் இப்பொழுதேனும் படிக்க முயற்சிப்போம் என்றவோர் எத்தனிப்பைத் தொடர, சில நாட்களில் வாசிப்பு முடிந்தது. தொடர்ந்தும், வேகமாகவும் வாசிக்க முடிபவர்களுக்கு அரைநாள் கூட எடுக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;1950களிலும் (அதற்கு முன்னரும்?) "வெவ்வேறு குடும்பங்களுக்கு - வெவ்வேறு மனிதர்களுக்கு வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்து முடிந்த நிஜங்களை..ஒரு குடும்பத்திற்கு நேர்ந்ததாகச் செய்தது மட்டுமே" தனது "கற்பனை அல்லது உத்தி" என்கிறார் வைரமுத்து. அப்படிச் சொல்லப்பட்ட குடும்பம் பேயத்தேவர் என்பவருடையது. குடியானவர்களைப் பற்றிய கதை என்பதாலோ என்னவோ, கேட்கும்போதே ஒருவிதப் பரிவும் ஒட்டுதலும் உண்டாகிறது. துன்பத்தையே வாழ்க்கையாகக் கொண்டுவிட்ட பேயத்தேவருக்கு அடுத்தடுத்து நிகழும் இடர்ப்பாடுகள் அப்பாத்திரத்தின் மீது பரிவை ஏற்படுத்துகிறது. கிராம வாழ்வில் நிகழும் பல்வேறு நிகழ்வுகள் (தேவையோ இல்லையோ) சுவாரசியமாகவே விவரிக்கப்பட்டுள்ளன - மாட்டுப் பிரசவம், சவரத் தொழில், சாராயம் காச்சுதல், கிணறு வெட்டுவதல், மார்க்க கல்யாணம், இத்யாதி இத்யாதி. கிராம வாழ்வையே கேட்டறியாதோருக்கு புதிதாகத் தெரிந்துகொள்ள பல செய்திகள் கிடைக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;உள்ள துன்பம் தாங்காது வாழும் குடும்பங்கள், கிராமங்கள், அரசாங்கம் கொண்டுவந்த வைகை அணைக்கட்டுத் திட்டத்தால் சிலதலைமுறைகளாகப் பிழைத்து வந்த வீடு, நிலங்களை விட்டுத் துரத்தப்படும் நிலைக்கு ஆளாகின்றன. வழக்கம்போல அரசாங்கத்திற்கு இம்மக்கள் கிள்ளுக்கீரைகள்தான் (மக்களுக்கு ஒரு திட்டத்தைக் குறித்த சரியான தகவல்களைச் சரியான நேரத்தில் தெளிவாகச் சொல்லாத நடைமுறை இன்றைக்கும் தொடர்கிறது). அணைகட்டி முடிக்கப்பட்டு நீர்தேங்க, ஊர்கள் மூழ்க, கள்ளிப்பட்டியில் பேயத்தேவர் இறக்க, கதை முடிக்கப்படுகிறது. கடைசி அத்தியாயத்தை வாசித்தபோது பேயத்தேவர் தற்கொலைக்கு ஒப்பான காரியத்தால்தான் இறந்துபோனார் என்ற எண்ணம் வந்துவிடவே 'கனத்த மனது' ஏற்படவில்லை. ஊர்களெல்லாம் துரத்தப்பட்டு இவருக்கும் இந்நிலையாகிவிட்டதே என்ற வருத்தம் வேறு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில் உரைநடை பாணியில் கதை சொல்லத் தொடங்கும் ஆசிரியர், அத்தியாயங்கள் செல்லச் செல்ல வட்டார வாசனையுடன் கூடிய பேச்சு வழக்கிற்கு மாறிவிடுகிறார். உணர்ச்சிவயப்படல், மிகைப்படுத்திச் சொல்லப்படும் சிறுசிறு நிகழ்வுகள் வைரமுத்துவின் படைப்புகளில் இல்லாதிருந்தால்தான் ஆச்சரியம். இருந்தாலும், கதையும் சொல்லப்பட்ட விதமும் வாசிப்பின் விறுவிறுப்பைக் குறைக்கவில்லை. வாசிக்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-111602386520086511?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/111602386520086511/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=111602386520086511' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111602386520086511'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111602386520086511'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/05/blog-post_14.html' title='கள்ளிக்காட்டு இதிகாசம்'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-111589447516922621</id><published>2005-05-12T12:40:00.000+02:00</published><updated>2005-05-12T12:46:42.313+02:00</updated><title type='text'>அழிக்கப்படும் புலிகள்</title><content type='html'>நேற்று யாமத்தில் ப்ளாக்கர் வெகு நேரம் தொங்கிக் கொண்டிருக்கவே, இப்பதிவு மேலேறவேயில்லை (அதனால ஒரு நஷ்டமும் இல்லை!).&lt;br /&gt;&lt;br /&gt;புலியின் எலும்பு, தோல் முதலானவற்றைப் பயன்படுத்தினால் இன்னது கிடைக்கும் என்று எங்கிருந்து கண்டுபிடித்தார்கள் எனத் தெரியவில்லை (முட்டாள்தனமாகத்தான் இருக்கிறது). அப்படியே ஏதாவது கிடைத்தாலும், ஒன்றிரண்டு பேருக்கென்றால் பரவாயில்லை, எங்காவது இயற்கையாகச் செத்த புலி அதற்குதவும். புலி சாகும் வரை உட்கார்ந்திருக்க அவ்வளவு இளித்தவாயர்களா நம்மக்கள்? பணம் வரும் என்றால் உடனே போட்டுத் தள்ளிவிடமாட்டார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;சீனா மற்றும் கிழக்காசிய நாடுகளில் ஒரு சில மருந்துகளைத் தயாரிக்கப் புலியின் எலும்பைப் பயன்படுத்துகிறார்கள் என்றால் (எலும்பு மட்டுமில்லாமல் ஏறுமுகமாக அதன் பல்வேறு உறுப்புகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றனவாம்); நம்மூர் சாமியார்களோ ஏதோ காரணங்களைச் சொல்லிக் கொண்டு புலித் தோலைப் போட்டு அமர்ந்து கிடக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இப்படித்தான் வட இந்தியாவில் இருக்கும் பல தேசீயப் பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களில் புலிகள் அதிக அளவில் காணாமல் போவதாகத் தெரியவருகிறது. தேவை அதிகரிக்க வேட்டையாடலும் அதிகரிக்கிறது. எதை முதலில் நிறுத்த வேண்டும் என்பது கோழியிலிருந்து முட்டையா முட்டையிலிருந்து கோழியா கதைதான். வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டங்கள் எந்த அளவிற்கு நடைமுறைப்படுத்தப்படுகிறதென்று புலிகளுக்குத்தான் தெரியும். தற்போது மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானிலுள்ள ரத்தாம்பூர் தேசியப் பூங்காக்களில் புலிகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கும் படலம் ஆரம்பித்திருப்பதாகச் சொல்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;புலிகளைக் கொல்பவர்களுக்கு மரணதண்டனை அதிகமா? (பயன்படுத்துபவர்களுக்கு என்ன தண்டனை என்று கேட்டால் எனக்குச் சொல்லத்தெரியாது).&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்புடைய சில செய்திச் சுட்டிகள்:&lt;br /&gt;&lt;a href="http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/4497925.stm"&gt;The threat to India's main tiger centre&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://autofeed.msn.co.in/pandorav3/output/News/e207e9f2-4160-48f6-adbc-957905af2a55.aspx"&gt;Tiger census underway in Ranthambore&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-111589447516922621?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/111589447516922621/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=111589447516922621' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111589447516922621'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111589447516922621'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/05/blog-post_111589447516922621.html' title='அழிக்கப்படும் புலிகள்'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-111529621879057394</id><published>2005-05-05T14:27:00.000+02:00</published><updated>2005-05-05T14:30:18.893+02:00</updated><title type='text'>கிராமத்து இசைக்கருவிகளும் இசைஞர்களும்</title><content type='html'>பத்ரியின் &lt;a href="http://thoughtsintamil.blogspot.com/2005/05/blog-post_05.html"&gt;பதிவிலிடப்பட்டிருந்த&lt;/a&gt; பம்பை வாத்தியத்தைக் கண்டதும் நினைவு எங்கோ ஓடியது. கிராமங்களில் நடக்கும் திருவிழா, திருமணம், இழவு போன்ற வீட்டு நிகழ்ச்சிகளில் நடக்கும் இசைகளில் (கொஞ்ச காலத்திற்கு முன்பேனும்) ஏதோ ஒருவகையில் இடம்பிடிக்கும் இசைக் கருவிகள் தப்பட்டை, மத்தளம், நாதசுரம் (பீப்பீ-ன்னுதான் சொல்லுவோம்), பம்பை போன்றவை. தோல் கருவிகளை அவற்றை வாசிக்கும் மக்களே (அல்லது அவர்களைச் சார்ந்தவர்களே) செய்து கொள்ளவார்கள் எனச் சொல்லக் கேட்டுள்ளேன். தப்பட்டையை ஒருசில சுற்றுகள் அடித்து ஓய்ந்தபின் தீ மூட்டி அச்சூட்டில் காயவைத்து சரிசெய்வதைப் பார்க்க நன்றாக இருக்கும். தூண் அல்லது சுவற்றோரத்தில் சாய்த்துப் போர்த்தி வைக்கப்பட்டிருக்கும் மத்தளம், பம்பையை யாருக்கும் தெரியாமல் (?!)  ஒன்றிரண்டு முறை கொட்டிவிட்டு ஓடுவதில் அப்போது ஒருவகை மகிழ்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விசைஞர்கள் பெரும்பாலும் கேள்வி ஞானம் மற்றும் தன்முயற்சியால் தாங்களாகவே கற்றுக் கொண்ட வித்துவான்கள். ஊரின் ஒதுக்குப் புறத்திலிருந்து அழைத்துவரப்பட்ட இக்கலைஞர்கள் யாராக இருப்பார்கள் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. கிராமத்தார்கள் இவர்களை கவனித்துக் கொண்ட விதம் எப்போதுமே கவலையளிக்கச் செய்துள்ளது. "அவனுகளுக்கு ஒரு பட்டைய வாங்கிக் கொடுங்கடா போதும்" என்பதுதான் அவ்வரிய கலைஞர்களுக்குக் கொடுக்கப்பட்ட மரியாதை. அவர்களும் அதற்குப் பழகியே போனார்களோ என்னவோ? இழவு வீடென்றால் பம்பைக்காரர் அதை இசைத்துக் கொண்டே இறந்தவரைப் பற்றி ஏதோ பாட, விசாரிக்க வந்தவர்கள் போடும் ஒன்றிரண்டு உரூபாய்களும், அரிசி போன்றவைகளும்தான் அவர்களுக்குக் கிடைத்த சன்மானம்! என்ன உலகமிது! :-(&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-111529621879057394?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/111529621879057394/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=111529621879057394' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111529621879057394'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111529621879057394'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/05/blog-post.html' title='கிராமத்து இசைக்கருவிகளும் இசைஞர்களும்'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-111479511225379218</id><published>2005-04-29T19:17:00.000+02:00</published><updated>2005-04-29T19:18:32.253+02:00</updated><title type='text'>புதுதில்லியிலிருந்து வரப்போகும் தமிழ் இதழ்</title><content type='html'>ஜூலை அல்லது ஆகஸ்டு வாக்கில் புதுதில்லியிலிருந்து புதிய தமிழ் மாத இதழ் ஒன்றைக் கொண்டுவர ஒருவர் திட்டமிருப்பதாக மடற்குழுவில் வந்த மின்னஞ்சலொன்று தெரிவிக்கிறது. 'சுபமங்களாவைப் போல வர முயற்சிக்கும்' இவ்விதழுக்குப் படைப்பார்வம் உள்ளோர் தொடர்பு கொள்ளலாம் என்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் விவரங்கள் அறிய பின்வரும் சுட்டியைச் சொடுக்கவும்: &lt;a href="http://groups.yahoo.com/group/pmadurai/message/2631"&gt;http://groups.yahoo.com/group/pmadurai/message/2631&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-111479511225379218?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/111479511225379218/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=111479511225379218' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111479511225379218'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111479511225379218'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/04/blog-post_29.html' title='புதுதில்லியிலிருந்து வரப்போகும் தமிழ் இதழ்'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-111444143682309960</id><published>2005-04-25T17:00:00.000+02:00</published><updated>2005-04-25T17:03:56.826+02:00</updated><title type='text'>கோட்டைப் போடுங்கள்!</title><content type='html'>தமிழ்நாட்டில் தமிழ் மொழியைக் கற்காமலேயே பள்ளிக் கல்வியை முடிக்கும் நிலைமை உள்ளது என்பது பொதுவில் இருக்கும் ஓர் ஆதங்கம்/குற்றச்சாட்டு. இரண்டாம், மூன்றாம் மொழி எனத் தெரிவு செய்யும்போதுகூட அங்கு ஹிந்தி, ஜெர்மன், பிரெஞ்சு அல்லது வேறேனும் ஒரு மொழி வந்துவிடுகிறது. தமிழைப் படித்து என்ன இலாபம் என்றதொரு மனநிலையோடு, பிறமொழிகளை எடுத்துப் படித்தால் அவற்றில் நிறைய மதிப்பெண்கள் பெற முடியும் என்ற கருத்தும் நிலவுகிறது. படிப்பென்பதே உருப்போடுவதற்கும், மதிப்பெண்களுக்கும் என்றாகிவிட்ட நிலையில் சுளுவாக எதில் வேலை முடியுமோ அத்திசையில் மாணாக்கர்கள் செல்வதில் வியப்பேது!&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலானோர் தமிழ் மொழிப் பாடத்தை உதறிவிட்டுப் போவதற்கு அப்பாடத் திட்டத்திலுள்ள (கவனிக்க, மொழியிலன்று) கடினத்தன்மையும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். அதில் முக்கியமானது செய்யுள் பகுதி. &lt;br /&gt;&lt;br /&gt;வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம் வேழம் &lt;br /&gt;பட்டுருவும் கோல் பஞ்சில் பாயாதே - நெட்டிருப்புப்&lt;br /&gt;பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்&lt;br /&gt;வேருக்கு நெக்கு விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;[நினைவில் இருந்த செய்யுள் ஒன்றை உதாரணத்திற்காக அப்படியே போட்டுள்ளேன், பிழை இருந்தால் மன்னிக்கவும். எழுதியவர்-ஒளவையார். இப்பாடலின் கடைசி வரிகளை வைரமுத்து தனது படப்பாடல்கள் சிலவற்றில் கொஞ்சம் மாற்றி உபயோகித்திருப்பார்.] அருமையான செய்யுளாக இருந்தாலும் துவக்கப்பள்ளி (அப்படித்தான் நினைவு) அளவிற்கு இப்பாடல் அதிகம் என்றே நினைக்கிறேன். முதலில் கடினமான, வழக்கத்தில் குறைந்து  வழங்கும் பொருள் விளங்காச் சொற்கள், பிறகு பொழிப்புரை, விரிவுரை ஆகியவற்றின் தேவை; அவற்றைச் சொல்லி விளக்கும் நபர்/விளக்கவுரைகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை. வெறும் மனப்பாடம் செய்து ஒப்புவித்தல் என்றால்கூட ஒப்பேற்றிவிடுவார்கள், ஆனால் அதற்கு மேல்தான் கஷ்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;சங்க இலக்கியம் என்ற ஒன்று இல்லாதிருந்திருப்பின் தமிழ் பாடத் திட்டம் எவ்வாறு இருந்திருக்கும்? பிற நாடுகள்/மொழிகளில் உள்ள மொழிப் பாடத்தில் இப்படித்தான் கடினமான பழம் இலக்கியப் பாடல்களை ஆரம்பம் முதல், இறுதி வரை நீக்கமறப் புகுத்திக் கற்பிக்கிறார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;அதற்காக சங்க இலக்கியமே வேண்டாம் என்று சொல்லவில்லை; பாடல்களுக்கு பதிலாக எளிதில் விளங்கிக் கொள்ளத்தக்க அவற்றின் உரை, சுலபமான செய்யுள்களை மனனம் செய்யும் பயிற்சி, இத்யாதிகள் இருக்க வேண்டும். அவற்றைப் பற்றி அறிஞர்கள் சிந்திக்கட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மொழிப் பாடத்தை எளிமைப்படுத்தி தமிழிலும் அதிகம் மண்டையை உடைத்துக் கொள்ளாமல் நிறைய மதிப்பெண்கள் எடுக்கும் நிலை வந்தால் ஒருவேளை அது நிறையப் பேரை யோசிக்க வைக்கும். அச்சூழ்நிலையில் தமிழ் மொழிப் பாடத்தைக் கட்டாயப்படுத்து என்னும் சிந்தனையே மறுபரிசீலனைக்கு உரியதாகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இக்காலத்து மாணவர்கள் படுசுட்டியானவர்கள், கோடு போட்டுக் காண்பித்தால் 'ரோடே' போட்டுவிடுவார்கள். அவ்ளோதாங்கறேன்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-111444143682309960?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/111444143682309960/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=111444143682309960' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111444143682309960'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111444143682309960'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/04/blog-post_25.html' title='கோட்டைப் போடுங்கள்!'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-111386104360832384</id><published>2005-04-18T23:33:00.000+02:00</published><updated>2005-04-18T23:50:43.610+02:00</updated><title type='text'>ஸெஹ்ஸலொய்ட்டன்-2005</title><content type='html'>அதற்குள் ஒரு வருடம் ஓடிவிட்டிருக்கிறது! நேற்றுத்தான் இவ்விழாவினைக் கண்டதுபோல இருக்கிறது. இன்று எற்பாடு மூன்று மணிக்குத் தொடங்கி இவ்வாண்டிற்கான பனிமனிதனை எரிக்கும் விழா சில மணி நேரங்கள் ஜூரிக் நகரில் நடைபெற்றது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://nradhak.blogspot.com/2004/04/blog-post_20.html"&gt;சென்ற வருடத்தைய பதிவு.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குளிர்காலம் போய்விட்டாலும், தற்போது இருந்து கொண்டிருக்கும் மேகமூட்டமும் மழைத் தூறலும் முந்தைய ஓரிரு வாரங்களின் இளவெயிலின் போது பூத்து மலர்ந்த மலர்களின் பொலிவை (தற்காலிகமாக) இழக்கச் செய்துவிட்டதோடு, இலேசான குளிரையும் தந்துகொண்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;[எற்பாடு - "...பகல் என்பது 10 மணியில் இருந்து 14 மணிவரை, எற்பாடு என்பது 14ல் இருந்து 18 வரை, மாலை என்பது 18ல் இருந்து 22 வரை..." - &lt;a href="http://valavu.blogspot.com/2005/04/blog-post_111354261723461104.html"&gt;http://valavu.blogspot.com/2005/04/blog-post_111354261723461104.html&lt;/a&gt;]&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-111386104360832384?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/111386104360832384/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=111386104360832384' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111386104360832384'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111386104360832384'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/04/2005.html' title='ஸெஹ்ஸலொய்ட்டன்-2005'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-111377507091933954</id><published>2005-04-17T23:46:00.000+02:00</published><updated>2005-04-17T23:59:23.216+02:00</updated><title type='text'>Google Maps</title><content type='html'>பல அற்புதங்களைச் செய்துவரும் கூகிளின் மற்றொரு சேவையான '&lt;a href="http://maps.google.com"&gt;கூகிள் மேப்ஸ்&lt;/a&gt;' வடஅமெரிக்காவின் பல முக்கியமான இடங்களின் வரைபடங்கள், செயற்கைக் கோள் படங்கள் போன்றவற்றை வழங்குகிறது. வரும்நாட்களில் மற்ற உலக நாடுகளின் படங்களும் வரக்கூடுமென்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவின் முக்கியமான இடங்களைப் பின்வரும் தளத்தில் தொகுத்து வெளியிட்டுக்கொண்டுள்ளார்கள்:&lt;br /&gt;&lt;a href="http://www.shreddies.org/gmaps/index.php"&gt;http://www.shreddies.org/gmaps/index.php&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி மூலம்: &lt;a href="http://news.bbc.co.uk/2/hi/technology/4448807.stm"&gt;http://news.bbc.co.uk/2/hi/technology/4448807.stm&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-111377507091933954?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/111377507091933954/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=111377507091933954' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111377507091933954'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111377507091933954'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/04/google-maps.html' title='Google Maps'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-111367798480303239</id><published>2005-04-16T20:54:00.000+02:00</published><updated>2005-04-16T20:59:44.803+02:00</updated><title type='text'>இதிலுமா??</title><content type='html'>இதிலும் கூடவா இவர்களுடைய படங்களைப் போட வேண்டும்? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.ildc.in/images/bk1.jpg"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கஷ்டமடா சாமி!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-111367798480303239?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/111367798480303239/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=111367798480303239' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111367798480303239'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111367798480303239'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/04/blog-post_16.html' title='இதிலுமா??'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-111338072934728066</id><published>2005-04-13T10:24:00.000+02:00</published><updated>2005-04-13T10:25:29.346+02:00</updated><title type='text'>சென்னை வாழ் நண்பர்களுக்கு</title><content type='html'>வரும் ஏப்ரல் 15-ம் தேதியன்று மாலை 5 மணிக்கு சென்னை பார்க்-ஷெரட்டனில் CDAC நிறுவனம் தமிழ் கணிமை குறித்த நிகழ்ச்சியொன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளதாகத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது. இயன்றவர்கள் நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு அதைப்பற்றி எழுதுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தகவலுக்கான சுட்டி: &lt;a href="http://groups.yahoo.com/group/tamil-ulagam/message/31867"&gt;http://groups.yahoo.com/group/tamil-ulagam/message/31867&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-111338072934728066?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/111338072934728066/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=111338072934728066' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111338072934728066'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111338072934728066'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/04/blog-post_13.html' title='சென்னை வாழ் நண்பர்களுக்கு'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-111330775290533388</id><published>2005-04-12T14:07:00.000+02:00</published><updated>2005-04-12T14:09:12.906+02:00</updated><title type='text'>இணையத்தில் தமிழ் அகராதிகள்</title><content type='html'>சிகாகோ பல்கலைக்கழகம் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சில மொழிகளுக்கான அகராதிகளை இணையத்தில் தேடும் வசதியுடன் வழங்கியுள்ளது. தமிழில் ஆறு அகராதிகளுக்கான பட்டியல் கொடுக்கப்பட்டு அவற்றில் ஐந்திற்கு சுட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. ஒருங்குறி(யுனிகோடு)யில் தேடும் வசதியும் உள்ளது. தமிழுக்கான மற்றுமொரு சிறந்த பங்களிப்பு, அயலிலிருந்து.&lt;br /&gt;&lt;br /&gt;அகராதிகளுக்கான சுட்டி: &lt;a href="http://dsal.uchicago.edu/dictionaries/list.html#tamil"&gt;http://dsal.uchicago.edu/dictionaries/list.html#tamil&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தகவல் உபயம்: திரு.கல்யாணசுந்தரம், &lt;a href="http://www.tamil.net/projectmadurai/"&gt;மதுரைத்திட்டம்&lt;/a&gt; &lt;a href="&lt;br /&gt;http://groups.yahoo.com/group/pmadurai/"&gt;யாஹூ மடற்குழு&lt;/a&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-111330775290533388?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/111330775290533388/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=111330775290533388' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111330775290533388'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111330775290533388'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/04/blog-post_12.html' title='இணையத்தில் தமிழ் அகராதிகள்'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-111235047957595280</id><published>2005-04-01T12:06:00.000+02:00</published><updated>2005-04-01T12:14:39.576+02:00</updated><title type='text'>சாலையோர ஓவியங்கள்</title><content type='html'>சென்ற ஞாயிறன்னு படம் பிடித்தவை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v101/nradhak/RoadSidePicture1.jpg" alt="Image hosted by Photobucket.com"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v101/nradhak/RoadSidePicture2.jpg" alt="Image hosted by Photobucket.com"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v101/nradhak/RoadSidePicture3.jpg" alt="Image hosted by Photobucket.com"&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-111235047957595280?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/111235047957595280/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=111235047957595280' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111235047957595280'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111235047957595280'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/04/blog-post.html' title='சாலையோர ஓவியங்கள்'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-111226610210358082</id><published>2005-03-31T12:45:00.000+02:00</published><updated>2005-03-31T12:48:22.103+02:00</updated><title type='text'>'எய்ட்ஸ் அமெரிக்காவினால் திட்டமிட்டு பரப்பப்பட்ட நோய்'</title><content type='html'>அப்படித்தான் சொல்கிறது &lt;a href="http://thatstamil.indiainfo.com/visai/feb05/nool.html"&gt;இந்த நூல் அறிமுகக் கட்டுரை&lt;/a&gt;. அதிர்ச்சியாகத்தான் உள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-111226610210358082?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/111226610210358082/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=111226610210358082' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111226610210358082'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111226610210358082'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/03/blog-post_31.html' title='&apos;எய்ட்ஸ் அமெரிக்காவினால் திட்டமிட்டு பரப்பப்பட்ட நோய்&apos;'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-111220525758242052</id><published>2005-03-30T19:13:00.000+02:00</published><updated>2005-03-30T19:57:22.533+02:00</updated><title type='text'>இக்கட்டில் பூமி</title><content type='html'>அது தெரிந்ததுதானே என்கிறீர்களா? இருந்தாலும், இன்றைக்கு ஐ.நா. மற்றும் வேறு சில அமைப்புகளின் சார்பில் கடந்த நான்காண்டுகளாக சூழமை/சூழியல் தொடர்பாக விரிவானதோர் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வறிக்கையின்படி, பல்கிப் பெருகும் உணவு, உறையுள், உடை, எரிபொருள் போன்ற தேவைகளுக்கான முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த ஐம்பதாண்டுகளில் மனித இனம் சூழமையை அதிவேகமாகவும் பரந்த அளவிலும் மாற்றிவிட்டது. இதுகாறும் மனிதன் பெற்ற நல்வாழ்வு மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள் யாவும் இயற்கையை அழித்தே பெற்றவை.&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கையின் மீதான இந்த அழிவுப் படலம் இந்நூற்றாண்டின் முதல் ஐம்பதாண்டுகளில் மேலும் கணிசமான அளவிற்கு அதிகரிக்கப்போவதாக எச்சரிக்கிறது அவ்வறிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;சீர்குலைந்து கொண்டிருக்கும் சூழமையைச் சரிசெய்வதும், அதேசமயத்தில் பெருகி வரும் தேவைகளை ஈடுகட்டுவதும் சில கடினமான மாற்றங்களால் சாத்தியமானது என்றும் தெரிவிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சூழமைச் சீர்கேட்டால் அதிகம் பாதிக்கப்படப்போவது வழக்கம்போல ஏழை, எளியோர்தான். (உடனடியாக மனதில் தோன்றும் உதாரணம்: ஜப்பான் தன்நாட்டில் மரம் வெட்டுவதைத் தடைசெய்துவிட்டு இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தால் கடைசியில் பெரிதும் பாதிக்கப்படப்போவது இந்நாட்டு மக்களல்லவா.)&lt;br /&gt;&lt;br /&gt;இதையும் மற்றோர் அறிக்கை என்று அலட்சியப்படுத்தாமல் ஒவ்வொருவரும் விழித்துச் செயல்பட்டால் நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வறிக்கை சார்ந்த சில சுட்டிகள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.millenniumassessment.org/en/Article.aspx?id=58"&gt;Experts Warn Ecosystem Changes Will Continue to Worsen, Putting Global Development Goals At Risk&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://news.bbc.co.uk/2/hi/science/nature/4391835.stm"&gt;Study highlights global decline&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.maweb.org//en/Products.Synthesis.aspx"&gt;Millennium Ecosystem Assessment-Synthesis Reports&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-111220525758242052?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/111220525758242052/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=111220525758242052' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111220525758242052'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111220525758242052'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/03/blog-post_30.html' title='இக்கட்டில் பூமி'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-111204788145260077</id><published>2005-03-28T23:43:00.000+02:00</published><updated>2005-03-29T00:11:21.456+02:00</updated><title type='text'>இறைந்து கிடக்கும் செல்வம்</title><content type='html'>ஏதோ ஒரு தகவலுக்காக இணையத்தில் தேடிக் கொண்டிருக்க, பின்வரும் தகவல் கண்ணில்பட்டது:&lt;br /&gt;&lt;br /&gt;தோரணை என்ற வார்த்தையும், style என்ற வார்த்தையும் தனித்தனியே பழக்கமானவையே ஆயினும் அவற்றை ஒன்றுசேர்த்துப் பார்க்கத் தோன்றியதில்லை, இக்குறிப்பை வாசிக்கும் வரை.&lt;br /&gt;&lt;br /&gt;//style sheet என்பதை அலங்காரக் குறிப்பு என்று சொல்லுவதைக் காட்டிலும் தோரணைத் தாள் என்று சொல்லுவது சிறப்பாக இருக்கும். style என்பது இரண்டு வகைப் பயன்பாட்டில் இருக்கிறது. ஒன்று நடையுடை பாவனையை ஒட்டியது. இன்னொன்று ஒரு படிவம் எழுதுவதற்கான மாதிரி.&lt;br /&gt;&lt;br /&gt;style comes via Old French stile from Latin stilus, which denoted a 'pointed writing istrument'. It came to be used metephorically for 'something written,' and hence for 'manner of writing'. The spelling with y instead of i arose from the misapprehension that the word was of Greek origin. It also invaded stylus, which was acquired directly from Latin.&lt;br /&gt;&lt;br /&gt;கூர்மை என்ற பொருள் துளைப்பதின் தொடர்ச்சி. துள்&gt;தூர் என்று விரியும். தூர்தலைச் செய்யும் கருவி தூரிகை. தூரிகை என்பதுதான் stylus கருவியைக் குறிக்கும் தமிழ்ச் சொல். (தூரிகை&gt;தூலிகை என்ற திரிவை, இந்தையிரோப்பியச் சொற்கள் பலவற்றில் வரும் முதல் எழுத்தான சகரவொலியை ஒதுக்குவதோடு, எண்ணிப் பார்த்தால், stylus என்ற சொல்லுக்கு உள்ள தொடர்பு புலப்படும். தூரிகையின் உதவியோடு செய்வது தோரணை என்னும் அலங்காரம், அழகு படுத்தல், ஒப்பனை செய்தல். தோரணை வரைந்த துணி தோரணம்; தோரணை வரைந்த கட்டுமானம் கூடத் தோரணம் என்று தெலுங்கில் வழங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதோ, அவன் தோரணையாகப் போகிறான் என்றால் style - ஆகப் போகிறான் என்று பொருள். நீங்கள் எழுதும் தோரணை இப்படி இருக்கலாம் என்னும் பொழுது இந்த style-ல் எழுதலாம் என்று பொருள்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;இராம.கி.//&lt;br /&gt;&lt;br /&gt;மூலம்: &lt;a href="http://kasi.thamizmanam.com/?item=167&amp;catid=3"&gt;http://kasi.thamizmanam.com/?item=167&amp;catid=3&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இராம.கி. அவர்களின் இவ்வாறான எழுத்துகள் &lt;a href="http://groups.yahoo.com/group/tamil-ulagam"&gt;தமிழ்-உலகம் மடற்குழு&lt;/a&gt; (கொஞ்ச காலமாக), அவரது &lt;a href="http://valavu.blogspot.com/"&gt;வலைப்பதிவு&lt;/a&gt;, மற்றும் அவர் அளிக்கும் மறுமொழிகளின் வாயிலாக மட்டுமே தெரியும். அவையல்லாது அவர் வேறு இடங்களிலும் எழுதியிருக்கக்கூடும். எனக்குத் தோன்றுவது என்னவென்றால் ஆய்வுப்பூர்வமாகச் சிந்தித்து ஒருவர் எழுதும் எழுத்துகள் சிதறிவிடாமல் ஓரிடத்தில் சேகரித்து வைக்கப்பட்டால் அச்சிந்தனைகள் வீண்போகாது. அவ்வாறான எழுத்துகள் நூல் வடிவில் தொகுக்கப்பட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-111204788145260077?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/111204788145260077/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=111204788145260077' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111204788145260077'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111204788145260077'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/03/blog-post_28.html' title='இறைந்து கிடக்கும் செல்வம்'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-111188075685606174</id><published>2005-03-26T23:59:00.000+01:00</published><updated>2005-03-27T00:45:56.856+01:00</updated><title type='text'>செம்மறியாடு</title><content type='html'>சில நாட்களுக்கு' முன்பு &lt;a href="http://paadal.blogspot.com/"&gt;சிறுவர் பாடல்கள்&lt;/a&gt; வலைப்பதிவிற்காக எழுத முயற்சித்த பாடலொன்று. சந்தேகமே வேண்டாம், ஆங்கிலப்பாடலின் 'உல்டா'தானிது. என்ன செய்வது, கற்பனை அந்த அளவுக்குத்தான் வேலை செய்யுது :(&lt;br /&gt;&lt;br /&gt;ம்மே ம்மே ஆடே கம்பளி இருக்கா? &lt;br /&gt;ஆமாம் ஆமாம் மூன்று பை இருக்கு!&lt;br /&gt;ஒன்றெங்கள் இடையனுக்கு ஒன்றுங்களுக்கு&lt;br /&gt;ஒன்றடுத்த ஊரில் இருக்கும் சின்னப் பையனுக்கு&lt;br /&gt;செம்மறி ஆடே கம்பளி இருக்கா?&lt;br /&gt;ஆமாம் ஆமாம் மூன்று பை இருக்கு!&lt;br /&gt;&lt;br /&gt;[முதல் வரியில் 'ம்மே ம்மே'-வுக்கு பதில் 'ஆடே ஆடே' அல்லது 'செம்மறி ஆடே' என்றும் சொல்லலாம், இருந்தாலும் ஆடெழுப்பும் ஒலியைச் சொல்லும்போது கொஞ்சம் நன்றாக உள்ளதாக நினைக்கிறேன்.]&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலப் பாடலுக்கான மெட்டு: &lt;a href="http://www.englishbox.de/song25.html"&gt;http://www.englishbox.de/song25.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செம்மறியாடுகள் கூட்டமாகச் சாலைகளில் ஓட்டிச்செல்லப்படுவதைக் கண்டிருக்கிறீர்களா? குட்டியாட்டைக் கம்பளி போர்த்திய தோளில் சுமந்துகொண்டு கையில் பெரிய கோலுடன் ஆட்டுக்காரன் நடக்க, அவனருகே ஒன்றிரண்டு நாய்களும் ஓட, இரண்டு மூன்று கூட்டங்களாக (ஒவ்வொரு கூட்டத்திலும் பலநூறு ஆடுகள் இருக்கும்) ஆடுகள் செல்லும். இதேபோல வாத்துக் கூட்டத்தையும் ஒரே ஒருமுறை திருமூர்த்திமலை செல்லும் வழியிலுள்ள கிராமமொன்றில் மிகவும் சிறிய வயதில் கண்டிருக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-111188075685606174?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/111188075685606174/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=111188075685606174' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111188075685606174'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111188075685606174'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/03/blog-post_26.html' title='செம்மறியாடு'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-111162227294464019</id><published>2005-03-23T23:51:00.000+01:00</published><updated>2005-03-24T00:57:52.946+01:00</updated><title type='text'>அரோகரா!</title><content type='html'>வேல் வேல் வெற்றிவேல்!&lt;br /&gt;வேல் வேல் வெற்றிவேல்!&lt;br /&gt;வெற்றிவேல் முருகனுக்கு அரோ....கரா!&lt;br /&gt;பழனியாண்டவனுக்கு அரோ....கரா!&lt;br /&gt;அரகர அரகர அரோ....கரா!&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியான சத்தங்களுக்கு வருடத்தின் ஒருசில மாதங்களில் எங்கள் ஊர்ப் பகுதியில் பஞ்சமே இருக்காது (எல்லாம் சில,பல வருடங்களுக்கு முந்தைய அனுபவம், இப்போது எப்படி என்று தெரியவில்லை). அதுவும் எங்கள் வீடு பிரதான சாலையைத் தொட்டபடியாதலால் இதிலிருந்து தப்பிக்கவே வழியில்லை. இருந்தாலும் கூட்டங்களைப் பார்ப்பதற்கும், ஒலிகளைக் கேட்பதற்கும் நன்றாகத்தான் இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற விழாக்களுக்கு மக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து பழனியை நோக்கி நடந்தே செல்வர். மேற்கே கேரளா, பொள்ளாச்சி, கோவை பகுதிகளின் சுற்றுவட்டாரங்களிலிருந்து ஒருவர் இருவர் எனச் சன்னமாக ஆரம்பித்து ஒரு கட்டத்தில் சாலை முழுவதும் ஆக்கிரமித்துச் செல்லுமளவிற்குக் கூட்டமிருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;வெறுங்கால்களுடன் குடும்பத்தோடு நடக்கும் இக்கூட்டங்களில் விவசாயிகள், உழைக்கும் மக்கள், நகர்ப்புறத்தார் என பலரைக் காணமுடியும். சிலர் மாலை போட்டிருப்பர் - அதற்கு அடையாளமாகப் பச்சை, கருப்பு, மஞ்சள் நிறமொன்றில் வேட்டி, சட்டை, துண்டும், உருத்திராட்சக் கொட்டை மாலைகளும் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நடைப் பயணங்களில் என்னை மிகவும் கவர்ந்தது சில ஊர்களிலிருந்து வரும் கூட்டங்கள் இசைக்கும் இசையும், அதற்கான காவடி ஆட்டங்களும். எங்கள் வீட்டிற்கு எதிர்புறமுள்ள பஞ்சாலைக்கு முன்பாகப் புளியமர நிழலுடன் தாரால் வேயப்பட்ட பெரிய இடமொன்று உள்ளது. அந்தி சாயும் நேரத்திற்கே வரும் கூட்டங்கள் அப்படியே இரவுத் தங்கலுக்காக அங்கு இருந்துவிடுவார்கள். வந்து சேர்ந்தவுடன் வட்டமாக நின்று பெரும் இசையுடன் காவடியோடு ஆட்டம் போடுவார்களே, கேட்டுக் காண கண்கோடி வேண்டும்!  (இதை எழுதும்போதே மனது குதூகலிக்கிறது).&lt;br /&gt;&lt;br /&gt;காவடி என்றால் வெறும் கட்டைகளை நிறுத்தி அட்டைகளை ஒட்டியதல்ல. பழுப்பு நிறத்தில் (தேக்கோ?) பல்வேறு வேலைப்பாடுகளுடன் கூடிய கனமான காவடிகள். அதில் மணிகள், மாலைகள், படங்கள், சந்தனம், பொட்டு என சகலத்தையும் காணலாம். காவடியின் இரண்டு பக்கங்களிலும் மயிற்தோகைகளைச் செருகி மேலும் வனப்பேற்றியிருப்பார்கள். (சின்னப் பையன்களான எங்களில் சிலரின் நோட்டுப் புத்தகத்தில் மறுநாள் சில மயில் தோகைகள் குட்டிபோட்டுக் கொண்டிருக்கும்). இக்காவடிகளை மிகுந்த பக்தியுடனும் மரியாதையுடனும் தரையில் துண்டை விரித்துத்தான் வைப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவு கனமான காவடிகளைத் தூக்குவதென்பதே கஷ்டமான காரியமாக இருக்கும் போது அதைத் தோளிலும் கழுத்திலும் சுழற்றி ஆட்டம் போடுவதைப் பார்க்க மலைப்பாக இருக்கும். இசைக்கு மேளம், நாதஸ்வரங்களுடன், பெரிய குழல்போன்று ஒன்றையும் வைத்து ஊதுவார்கள் (அதன் பெயர் தெரியவில்லை). இசையே ஆட்டம்போட வைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பஞ்சாலையை ஒட்டியிருந்த (இப்போது எல்லாவற்றையும் தூக்கிவிட்டார்கள்) ஓடுவேயப்பட்ட தரைப்பகுதி முழுவதும் மக்களோ மக்கள்தான். விடிந்ததும் காலையில் எழுந்துவந்த பார்த்தால் சாலையோர வீட்டு வாசல்களின் முன்பு பந்தல்களில் பெருங்கூட்டங்கள் உறங்கிக் கொண்டிருக்கும். ஒரு சில கூட்டங்கள் இப்படி ஓய்வெடுக்க, அருகாமை ஊர்களிலிலிருந்து நடக்கத் தொடங்கியோர் விடிய விடிய சென்று கொண்டே இருப்பார்கள். அவர்களை ஒதுக்க வாகனங்கள் எழுப்பும் ஒலியோ சொல்லி மாளாது.&lt;br /&gt;&lt;br /&gt;பக்தி முத்தியிருந்த காலத்திலும், ஓடுற பாம்பை கண்டு மேலும் ஓடின வயசிலும் எனக்கும் பழனிக்கு நடந்து செல்ல ஓரிரு வாய்ப்புகள் கிடைத்தன. காவடியெல்லாம் இல்லை, சும்மா போய்விட்டுவருவதே பெரிய விஷயம் இதுல காவடி வேறயா? :-) &lt;br /&gt;&lt;br /&gt;முதல் தடவை வீட்டருகாமையில் இருந்த தையல்காரர் அழைத்துச் சென்றார். பழனிக்கு முன்பாக சுமார் பத்து கி.மீ தூரத்தில் மேற்கொண்டு நடக்கமுடியாமல் அவர் நின்றுவிட்டார். வேறு வழியின்றி அங்கிருந்து பேருந்தில் செல்ல வேண்டிப்பட்டதால் முதல் பயணம் தோல்வி(?)யில் முடிவடைந்தது. பிறிதொருமுறை பள்ளி நண்பர்கள் சிலருடன் வெற்றிகரமாக நடந்து சென்ற போது பழனி முருகனுக்கு எங்களைத் தரிசிக்கும் பாக்கியம் உண்டானது. &lt;br /&gt;&lt;br /&gt;அம்முறை ஏதோ தேர்தல் சமயமாக இருந்ததால் வழியெங்கும் கட்சிக் கொடிகளும், வளைவுகளும் நிறையக் காணப்பட்டன. சில இடங்களில் குச்சிகளில் கட்டப்பட்டிருந்த கொடிகளை அவிழ்த்துவிட்டுச் சென்றதைக் கட்சிக்காரர்கள் யாரேனும் பார்த்திருந்தால் பெண்டு நிமிர்த்தியிருப்பார்கள். நல்லவேளை, ராத்திரியாகப் போய்விட்டதால் அவர்கள் புண்ணியம் தேடிக் கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மும்பைக்கு அடுத்த படியாக, பழனி எப்போதும் என்னை முகம் சுழிக்க வைக்கும் இடம் - கூட்டமும், நாற்றமும் (மற்ற ஊர்கள் மட்டும் என்ன வாழுதுவென்கிறீர்களா? இருந்தாலும் அங்கு கொஞ்சம் ஜாஸ்தியாக இருந்தது, அதான் சொன்னேன்; பழனிக்காரர்கள் கோவித்துக்கொள்ளவேண்டாம்).&lt;br /&gt;&lt;br /&gt;ம்...எல்லாத்தையும் இப்ப நினைச்சு மட்டும் பாத்துக்க வேண்டியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம், அரோகரா-வென்றால் என்னவென்று சொல்பவர்களுக்கு பழனி சித்தன்ன விலாஸ் விபூதி பொட்டலமும், பஞ்சாமிருத டப்பா ஒன்றும் அனுப்பிவைக்கப்படமாட்டாது ;-)&lt;br /&gt;&lt;br /&gt;[&lt;a href="http://thoughtsintamil.blogspot.com/2005/03/blog-post_23.html"&gt;அறுபத்து மூவர் விழா&lt;/a&gt;-வில் வந்த காவடியின் தாக்கம் மேற்கண்ட பதிவு. பத்ரிக்கு நன்றி!]&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-111162227294464019?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/111162227294464019/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=111162227294464019' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111162227294464019'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111162227294464019'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/03/blog-post_23.html' title='அரோகரா!'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-111150380512529952</id><published>2005-03-22T15:57:00.000+01:00</published><updated>2005-03-22T16:06:10.276+01:00</updated><title type='text'>தூரக் கணிப்பி</title><content type='html'>கோயம்புத்தூருக்கும் சென்னைக்கும் இடையில் (அதேபோல வெவ்வேறு இடங்களுக்கு இடையிலும்) இத்தனை கி.மீ தூரம் என்கிறோம். இதை ஏதாவது ஓர் அட்டவணையிலிருந்தோ அல்லது வழிகாட்டிகளில் எழுதப்பட்டிருப்பதைக் கொண்டோ அறிகிறோம். கோவையிலிருந்து சென்னையை அளக்க இரண்டு புள்ளிகள் தேவை அல்லவா? உண்மையில் இங்கு கோயம்புத்தூர் அல்லது சென்னை என்பது எந்தப் புள்ளி? நிச்சயமாக அளப்பீடு தொடர்புடைய துறை (சர்வே டிபார்ட்மெண்ட்?) ஒவ்வொரு ஊரிற்கும் என ஒரு புள்ளியைக் குறித்து வைத்திருப்பார்கள். &lt;a href="http://www.coimbatore.com/travel/coordinates.htm"&gt;இவ்வுரல்&lt;/a&gt; தமிழகத்தின் முக்கிய இடங்களின் ஆயத்தொலைகளைக் (coordinates) காட்டுகிறது. ஊரில் எந்த இடத்திற்கு இப்புள்ளி பொருந்தும் என்பது அறிந்துகொள்ள ஆவலூட்டுமொன்று.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் மின்னஞ்சலில் வந்த செய்திமடல் (newsletter) ஒன்றின் ஓரத்திலிருந்த நிரல் துண்டொன்று கவனத்தை ஈர்த்தது. அதில் பெருவட்டச் சூத்திரத்தைக் (Great Circle formula-வை இப்படி சொல்லலாமா?) கொண்டு இரு புள்ளிகளுக்கிடையிலான தூரத்தைக் கணக்கிடும் முறை எழுதப்பட்டிருந்தது. புவியில் ஒவ்வொரு இடத்திற்கும் வரையறுக்கப்படுள்ள அச்சரேகை (அல்லது குறுக்குக் கோடு), தீர்க்கரேகை (அல்லது நெடுங்கோடு) அளவுகள் இக்கணக்கீட்டிற்கு முக்கியமானவையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்ட உரல் சுட்டும் பட்டியலிலிருந்து சில ஆயத்தொலைகளை எடுத்து அவற்றை டிகிரியிலிருந்து ரேடியன்களுக்கு மாற்றி அச்சூத்திரத்தைக் கொண்டு கணக்கிட்டுப் பார்த்த போது கிடைத்த விடைகள் வழக்கமாக அறிந்த தூரங்களிலிருந்து வேறுபட்டிருந்தன!&lt;br /&gt;&lt;br /&gt;கோவை-சென்னை =&gt; 413 கி.மீ.&lt;br /&gt;கோவை-பொள்ளாச்சி =&gt; 68 கி.மீ.&lt;br /&gt;&lt;br /&gt;பெருவட்டம் பற்றிய சிறு குறிப்பை &lt;a href="http://mathworld.wolfram.com/GreatCircle.html"&gt;இங்கே&lt;/a&gt; காணலாம் (உபயம் கூகிள்). &lt;br /&gt;&lt;br /&gt;சொல்லப்பட்ட நிரல்துண்டு பின்வருமாறு:&lt;br /&gt;&lt;br /&gt;/* அச்சரேகை, தீர்க்கரேகைகள் ரேடியன்களில் */&lt;br /&gt;செயற்கூறு (அச்சரேகை1 உள்ளே எண், தீர்க்கரேகை1 உள்ளே எண்,அச்சரேகை2 உள்ளே எண், தீர்க்கரேகை2 உள்ளே எண்) திரும்பு எண்&lt;br /&gt;அறிவி&lt;br /&gt;  புவியின்ஆரம் := 6378.7; &lt;br /&gt;தொடக்கம்&lt;br /&gt;  அச்சரேகை1=அச்சரேகை2 மற்றும் தீர்க்கரேகை1=தீர்க்கரேகை2 இருப்பின்&lt;br /&gt;    திரும்பு 0;&lt;br /&gt;  திரும்பு புவியின்ஆரம் * ACOS(SIN(அச்சரேகை1) * SIN(அச்சரேகை2) +  COS(அச்சரேகை1)* COS(அச்சரேகை2) * COS(தீர்க்கரேகை2-தீர்க்கரேகை1));&lt;br /&gt;புறநடை பிற இருப்பின்&lt;br /&gt;  திரும்பு வெற்று;&lt;br /&gt;முடிவு;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியான நிரலை ஏற்றுப் புரிந்துகொண்டு விடையைத் தரும் மென்கலன்கள் இல்லாத நிலையில் :-) ஆர்வமுள்ளோர் &lt;a href="http://www.quest-pipelines.com/pipelines/plsql/tips.htm"&gt;இப்பக்கத்திற்குச்&lt;/a&gt; சென்றால் (பிப்.2005) மூல நிரலைக் காணலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-111150380512529952?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/111150380512529952/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=111150380512529952' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111150380512529952'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111150380512529952'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/03/blog-post_22.html' title='தூரக் கணிப்பி'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-111057896312825957</id><published>2005-03-11T22:57:00.000+01:00</published><updated>2005-03-11T23:09:23.130+01:00</updated><title type='text'>மாண்புமிகு?</title><content type='html'>"முதல்வருக்குப் பேரவைத் தலைவர் வணக்கம் சொல்கிறார் என்பதை விட என் தலைவிக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்; என் உயிர் காத்த தாய்க்கு வணக்கம் செலுத்துகிறேன். இதை எந்த நாய் கேலி செய்தாலும் எனக்கு கவலை இல்லை." [நன்றி: தினமணி 11.03.2005]&lt;br /&gt;&lt;br /&gt;மாண்புமிகு பேரவைத் தலைவர் என்று சொல்லக்கூடிய பொறுப்பிலிருப்பவர், இப்படியா 'நாய்' என்றெல்லாம், அதுவும் சட்டப் பேரவையில், பேசுவது?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-111057896312825957?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/111057896312825957/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=111057896312825957' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111057896312825957'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111057896312825957'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/03/blog-post_11.html' title='மாண்புமிகு?'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-111040933058660801</id><published>2005-03-09T23:28:00.000+01:00</published><updated>2005-03-10T00:02:10.586+01:00</updated><title type='text'>தேசியக் கொடியைத் தலைகீழாகக் குத்தாமலிருக்க</title><content type='html'>சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் பெருந்தலைகளே சில சமயங்களில் தேசியக் கொடியைத் தங்கள் உடையில் தலைகீழாகக் குத்திக்கொண்டுவிட்டு, பிற்பாடு அங்குள்ளவர்கள் எவரேனும் சுட்டிக்காட்டும்போது சங்கடத்தில் நெளிவது ஒன்றும் புதுமையான செய்திகளல்ல. சமீபத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூட அவ்வாறு குத்திக்கொண்டு வந்தார் என்று செய்திகள் வந்தன. கம்பங்களில் பறக்கவிடப்படும் கொடிகளுக்கும் இந்த கதி நடப்பதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;தேசியக் கொடியிலுள்ள மூவர்ணங்களின் சரியான வரிசையை நினைவிற் கொள்ளும் வழிமுறை ஒன்றை நம்மூர் ஆசிரியர் ஒருவர் தம் மாணவர்களுக்குச் சொல்லித்தந்ததாக வந்த செய்தியை எங்கோ படித்ததாக மனைவி தெரிவித்தார். அது என்னவென்று கேட்டேன். வாழை இலையை விரித்து, அதில் சோற்றைப் போட்டுக் குழம்பை ஊற்றுவதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டுமாம். பச்சை கீழே வந்து விடுகிறதல்லவா? அடங்கப்பா! உதாரணம் நன்றாகத்தான் உள்ளது; சோற்று விஷயமாயிற்றே அவ்வளவு எளிதில் மறந்துவிடுமா என்ன!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-111040933058660801?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/111040933058660801/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=111040933058660801' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111040933058660801'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111040933058660801'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/03/blog-post_09.html' title='தேசியக் கொடியைத் தலைகீழாகக் குத்தாமலிருக்க'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-111028995768419146</id><published>2005-03-08T14:48:00.000+01:00</published><updated>2005-03-08T14:52:37.686+01:00</updated><title type='text'>உலக மகளிர் தினம்</title><content type='html'>இன்று மட்டுமல்ல ஒவ்வொரு நாளும் மகளிரின் தினம் தானோ!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v101/nradhak/albania.jpg" alt="Image hosted by Photobucket.com"&gt;&lt;br /&gt;[அல்பேனியா]&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v101/nradhak/Serbia.jpg" alt="Image hosted by Photobucket.com"&gt;&lt;br /&gt;[செர்பியா]&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v101/nradhak/Ireland.jpg" alt="Image hosted by Photobucket.com"&gt;&lt;br /&gt;[அயர்லாந்து]&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-111028995768419146?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/111028995768419146/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=111028995768419146' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111028995768419146'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111028995768419146'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/03/blog-post_08.html' title='உலக மகளிர் தினம்'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-111023640119140203</id><published>2005-03-07T23:47:00.000+01:00</published><updated>2005-03-08T00:00:01.200+01:00</updated><title type='text'>கற்பனை வறட்சியா?</title><content type='html'>விண்வெளி செல்ல ராக்கெட்டு&lt;br /&gt;பஸ்ஸில் போக டிக்கெட்டு;&lt;br /&gt;காய்கறி வாங்க மார்க்கெட்டு&lt;br /&gt;மாடியில் ஏறிட படிக்கட்டு;&lt;br /&gt;இரும்பை இழுப்பது மாக்னெட்டு&lt;br /&gt;அண்ணன் ஆடுவது கிரிக்கெட்டு;&lt;br /&gt;தம்பிக்குப் பிடித்தது ரவா லட்டு&lt;br /&gt;எனக்குப் பிடித்தது பிஸ்கெட்டு;&lt;br /&gt;மிட்டாய் தாரேன் கைநீட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;தலையில் அடித்துக் கொள்ளலாம் போலிருந்தது முதலில் இதை வாசித்த போது. எதுகை மோனையாக இருந்தால் போதும் எதை வேண்டுமானாலும் எழுதி விற்க ஆரம்பித்து விடுகின்றனர். [புத்தகம்: எனது முதல் மழலை மொழி பாடல்கள்; ISBN:81-7478-233-8]&lt;br /&gt;&lt;br /&gt;'&lt;a href="http://sundaravadivel.blogspot.com/2005/03/blog-post.html"&gt;அப்பா பாட்டு&lt;/a&gt;'க்கும், '&lt;a href="http://tamil.weblogs.us/archives/026025.html"&gt;கத்தரி வெருளி&lt;/a&gt;'க்கும் முன்பு இது குப்பையாகத் தெரிகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-111023640119140203?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/111023640119140203/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=111023640119140203' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111023640119140203'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111023640119140203'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/03/blog-post_07.html' title='கற்பனை வறட்சியா?'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-111010367991720663</id><published>2005-03-06T11:03:00.000+01:00</published><updated>2005-03-06T11:07:59.916+01:00</updated><title type='text'>வணக்கம்!</title><content type='html'>&lt;img src="http://img.photobucket.com/albums/v101/nradhak/sattasabai1.jpg" alt="Image hosted by Photobucket.com"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தைச் சில நிமிடங்கள் பார்ப்பதால் தோன்றும் கற்பனைகளுக்கு நான் பொறுப்பல்ல :-)&lt;br /&gt;&lt;br /&gt;[படம்:சு.குமரேசன் (அ) கே.ராஜசேகரன்; ஜூனியர் விகடன்-http://www.vikatan.com/jv/2005/mar/09032005/jv0103.asp]&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-111010367991720663?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/111010367991720663/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=111010367991720663' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111010367991720663'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/111010367991720663'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/03/blog-post_06.html' title='வணக்கம்!'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-110980625572177948</id><published>2005-03-02T23:49:00.000+01:00</published><updated>2005-03-03T00:30:55.723+01:00</updated><title type='text'>புதிய எண், பழைய எண்</title><content type='html'>தமிழகத்தில் கொஞ்ச நாட்களாக ஒரு கூத்து நடந்து கொண்டுள்ளது. அஞ்சல் முகவரிகளில் வீட்டின் புதிய இலக்கம், பழைய இலக்கம் என்று எழுதப்பட்டுக் கொண்டிருப்பதைக் காணலாம். புதிய எண்கள் எப்போதிருந்து, எதற்காகக் கொடுக்கப்பட்டன, இவ்வெண்கள் யாரால் நிச்சயிக்கப்படுகின்றன, அஞ்சல் முகவரியில் இரு இலக்கங்களையும் குறிப்பிட்டாக வேண்டுமா, இருப்பின் எவ்வளவு காலத்திற்கு அவ்வாறு செய்யவேண்டும் முதலான தகவல்களையும் வழிகாட்டுதல்களையும் கேள்விப்பட்டதில்லை (அப்படியொன்று இருந்தால்தானே என்கிறீர்களா?), தெரிந்தவர்கள் சொல்லவும்.தினத்திற்கு நான்கு கடிதங்கள் எழுதி அனுப்புவதில்லையென்றாலும் தெரிந்துகொள்ளலாமே ஒரு நப்பாசைதான், வேறு என்ன!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-110980625572177948?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/110980625572177948/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=110980625572177948' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/110980625572177948'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/110980625572177948'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/03/blog-post.html' title='புதிய எண், பழைய எண்'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-110920114942839345</id><published>2005-02-23T23:12:00.000+01:00</published><updated>2005-02-24T00:25:49.433+01:00</updated><title type='text'>ஒள</title><content type='html'>"அம்மா இங்கே வா வா..." என்ற அகரவரிசை எழுத்துகள் வரும் பாடலைப் பாடிக் காட்டிக்கொண்டிருந்த போது பாடலில் இருந்த 'ஒள' வரி தடம் புரண்டு, "ஒளவியம் பேசேல்" என்ற ஆத்திச்சூடி வரியை வாய் உளறிவிட்டது. சமாளித்துக் கொண்டு ஒளவியம் என்றால் என்ன என்று யோசித்துப் பார்த்தேன்; அகராதிதான் கைகொடுத்தது. ஒள வரிசையில் வரும் வார்த்தைகள் கொஞ்சம்தான் எனினும் சில சுவையாக உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஒள&lt;/span&gt; - அநந்தன் என்னும் பாம்பு; நிலம்; விளித்தல், அழைத்தல், வியப்பு, தடை இவற்றைக் காட்டும் ஓர் உபசருக்கம்; கடிதல்; ஒளவென்னேவல்.&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஒளகம் &lt;/span&gt;- இடைப்பாட்டு.&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஒளகாரம்&lt;/span&gt; - ஒள என்னும் எழுத்து.&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஒளகி &lt;/span&gt;- இடைப்பாட்டுக் கூத்தி.&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஒளசரம் &lt;/span&gt;- கோடாங்கல்லு.&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஒளசனம் &lt;/span&gt;- உப புராணம் பதினெட்டனுள் ஒன்று. (அதென்ன உப புராணம்?)&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஒளசித்தியம்&lt;/span&gt; - தகுதி.&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஒளஷதம், ஒளடதம்&lt;/span&gt; - மருந்து.&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஒளடவம் &lt;/span&gt;- ஒளடவராகம்.&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஒளடனம் &lt;/span&gt;- மிளகு ரசம்.&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஒளதசியம் &lt;/span&gt;- பால், பழம், அமிழ்து; கீரம்.&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஒளதா &lt;/span&gt;- அம்பாரி; யானை மேற்பீடம்.&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஒளதாரியம்&lt;/span&gt; - உதாரம்; மிகுகொடை; உதாரகுணம்; பெருந்தன்மை.&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஒளபசாரிகம்&lt;/span&gt; - ஒன்றன் தன்மையை மற்றொன்றில் ஏற்றிக் கூறுவது.&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஒளபசானம்&lt;/span&gt; - காலை மாலைகளில் இல்லறத்தோர் வேள்வித் தீ வளர்த்தல்.&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஒளரசன், ஒளரதன்&lt;/span&gt; - உரிமைமகன்; கணவனுக்குப் பிறந்த மகன்.&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஒளரப்பிரகம்&lt;/span&gt; - ஆட்டுமந்தை.&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஒளருவவிரதி&lt;/span&gt; - நீரொன்றையே உட்கொண்டு தவஞ்செய்பவன்.&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஒளலியா&lt;/span&gt; - பக்தர்கள்.&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஒளவித்தல்&lt;/span&gt; - பொறாமைப்படுதல்.&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஒளவியம்&lt;/span&gt; - பொறாமை; தீவினை.&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஒளவை &lt;/span&gt;- தவப்பெண்; தாய்; ஆரியாங்கனை; ஒளவையார்.&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஒளவைநோன்பு&lt;/span&gt; - செவ்வாய் நோன்பு.&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஒளனம்&lt;/span&gt; - மிளகுரசம்; காயரசம்; மிளகுநீர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style:italic;"&gt;நன்றி: கழகத் தமிழ் அகராதி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்ட சில வார்த்தைகளை வாசித்தும் வந்த எதிர்வினை:&lt;br /&gt;ஐ!&lt;br /&gt;ஓ!&lt;br /&gt;ம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-110920114942839345?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/110920114942839345/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=110920114942839345' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/110920114942839345'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/110920114942839345'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/02/blog-post_23.html' title='ஒள'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-110902225232332165</id><published>2005-02-21T22:41:00.000+01:00</published><updated>2005-02-21T22:44:12.326+01:00</updated><title type='text'>படிக்காட்டியும் பரவாயில்லை, வாங்குங்க!</title><content type='html'>அறிவு, திறமை, ஆர்வம் அனைத்தும் இருந்தும் பொருள் வளம் இல்லாதிருப்பது துரதிஷ்டமான ஒன்று. நல்ல நோக்கத்திற்குப் பொருளுதவி கிடைப்பதும் அரிதான காரியமாகவே இருக்கிறது. &lt;a href="http://www.varalaaru.com/"&gt;வரலாறு&lt;/a&gt; மின்னிதழின் பிப்ரவரி 15 - மார்ச் 14, 2005 பதிப்பில் வந்துள்ள செய்தியொன்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். புத்தகம் எழுதுவதென்பது, அதுவும் ஆய்வுக் கட்டுரைகளுடன், அனைவராலும் செய்துவிடக்கூடிய சாதாரண காரியமல்ல. அப்படி எழுதியும் அதை எளிதில் வெளியிடச் செய்யமுடியாத நிலை இருப்பதை நினைத்தால் வருத்தமாக உள்ளது. ஒரு புத்தகத்தை வெளிக்கொண்டுவர எவ்வளவு சிரமப்படவேண்டியுள்ளது! "பெண் தெய்வ வழிபாடு தோற்றமும் வளர்ச்சியும்" என்ற புத்தகத்தின் ஆசிரியர் இரா.கலைக்கோவனின் வார்த்தைகள்:&lt;br /&gt;&lt;br /&gt;"...ஏராளமான ஆய்வுகள் செய்து வைத்திருக்கிறோம். வெளியிடுவதற்கு வாய்ப்பில்லை.......&lt;br /&gt;ஆளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் சேமித்தால் ஐந்து பேர்கள் என்றாலும் ஆறு மாதங்களில் முப்பதாயிரம் ரூபாய் சேர்ந்துவிடும். ஒரு புத்தகம் கொண்டுவர முடியும். ஆண்டுக்கு இரண்டு நூல்கள் கொண்டு வரலாம். இரண்டாண்டுகளுக்கு அப்படிக் கொண்டு வந்தால் பிறகு நூலகங்கள் வாங்குகின்ற அந்த பதிப்பகத் தொகை கொண்டே தொடர்ந்து நூல்கள் வெளியிட வாய்ப்பாக இருக்குமென்று சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே ஒப்புக்கொண்டார். அவருடன் இணைந்த நண்பர்கள் இராமசந்திரன், கோகுல், கமலக்கண்ணன், செல்வி இலாவண்யா. இந்த ஐந்துபேரும் சென்ற ஜூன் மாதத்திலிருந்து மாதந்தோறும் அவர்கள் வாங்குகின்ற ஊதியத்திலிருந்து தலைக்கு ஆயிரம் ரூபாய் சேமித்து மாதத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் என்று ஆறு மாதங்களில் முப்பதாயிரம் ரூபாய் சேமித்து மேற்கொண்டு ஒரு ஐந்தாயிரமும் கொடுத்து இந்த நூலை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையிலேயே நான் பூரித்துப்போய்ச் சொல்கிறேன் - தமிழ்நாட்டு வரலாற்றுக்கு இப்படி ஒரு குழு அமையுமானால் சரியான வரலாற்றை சரியான தரவுகளோடு எழுதிவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அறியாத தமிழ்நாட்டு வரலாற்றை எழுத இங்கு ஆய்வாளர்கள் இருக்கிறார்கள். வெளியிடுவதற்குத்தான் சரியான ஆட்களில்லை."&lt;br /&gt;&lt;br /&gt;பொருளிருப்போர் வாசிக்காவிடினும் புத்தகமொன்றை வாங்கி வைத்தும், ஆர்வமிருப்போர் புத்தகத்தை வாங்கிப் படித்தும் இதுபோன்ற முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-110902225232332165?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/110902225232332165/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=110902225232332165' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/110902225232332165'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/110902225232332165'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/02/blog-post_21.html' title='படிக்காட்டியும் பரவாயில்லை, வாங்குங்க!'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-110893697169656696</id><published>2005-02-20T22:57:00.000+01:00</published><updated>2005-02-20T23:02:51.743+01:00</updated><title type='text'>வனப் பராபத்திய அவை</title><content type='html'>மரம் மற்றும் சில வனப்பொருட்கள், அவற்றின் விளம்பரங்கள் FSC என்ற குறியைத் தாங்கிவருவதைக் காணலாம் (குறைந்தபட்சம் ஐரோப்பிய நாடுகளில்). Forest Stewardship Council (FSC) என்பது வனங்களைப் பொறுப்புடன் பயன்படுத்தும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்ட ஓர் அரசு சாரா, பன்னாட்டு அமைப்பு. மரங்கள் விடாமல் வெட்டப்பட்டு உண்டான வனங்களின் அழிவுக்கு ஒருவகையான எதிர்வினை என்று இதைக் கூறலாம். சூழமைக்குத் தகுந்த, சமுதாயத்திற்குப் பயன்படக்கூடிய மற்றும் பொருளாதாரத்திற்குத் தோதான வகையில் வனங்களை நிர்வகிக்கும் பொருட்டு 1993-ல் இவ்வமைப்பு ஏற்படுத்தப்பட்டது. வனத்திலிருந்து மரம் மற்றும் பிற பொருட்களை எடுக்கும்போது அதன் பல்லுயிர்த் தன்மைக்குப் பங்கம் வராமல் பாதுகாப்பதும், வன வளத்தைத் தொடர்ந்து பெருக்குவதும், சூழமைச் செயல்பாடுகளைத் தொடரச் செய்வதும் முக்கியமானதாகும். அதே சமயத்தில் வனத்தைச் சார்ந்து வாழும் மக்கள், அவர்களின் சமுதாயமும் தொடர்ந்து வருமானம் பெறும் வகையிலும் இருக்கவேண்டும். சுருக்கமாகச் சொன்னால் இயற்கையைக் கொள்ளையடித்து வெறும் இலாபம் மட்டும் பார்க்காமல் அதைத் தொடர்ந்து பேணிப் பராமரித்தலும், அப்பகுதிவாழ் மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் வன வளங்களை நிர்வகிப்பதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வமைப்பு உருவாக்கியுள்ள வனச் சான்றிதழ் மற்றும் பொருட் குறியீட்டு முறைமைகள், சரியாக நிர்வகிக்கப்படும் காடுகளிலிருந்து கிடைக்கும் மரம் மற்றும் அவை சார்ந்த பொருட்களைச் சாதாரண நுகர்வோர் நம்பிக்கையுடனும், எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் விதத்திலும் உள்ளன. வனங்கள் கடுமையான தரக்கட்டுப்பாடுகளால் (இதற்கான பத்து கொள்கைகளை உருவாக்கியுள்ளனர்) சோதனை செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. வனத்திலிருந்து நுகர்வோரைச் சேரும் வரையில் ஒரு பொருளானது ஒவ்வொரு மட்டத்திலும் கண்காணிக்கப்படுவதால் அதன் நம்பகத்தன்மை அதிகரிக்கிறது. மேலும், WWF, Friends of the Earth, Greenpeace மற்றும் Woodland Trust போன்ற பெரும் சூழமை சார்ந்த அமைப்புகள் FSCயை ஆதரிக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வமைப்பைப் பற்றிய கூடுதல் விவரங்களை &lt;a href="http://www.fsc.org/en/"&gt;http://www.fsc.org/en/&lt;/a&gt; என்ற முகவரியில் அறியலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;(Stewardship என்பதற்கு கொலோன் பல்கலை அகராதி 'பராபத்தியம்' என்ற சொல்லை வழங்குகிறது; வேறு நல்ல சொற்கள் இருப்பின் தெரியப்படுத்தவும்; நன்றி!)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-110893697169656696?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/110893697169656696/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=110893697169656696' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/110893697169656696'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/110893697169656696'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/02/blog-post_20.html' title='வனப் பராபத்திய அவை'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-110769880092291913</id><published>2005-02-06T14:54:00.000+01:00</published><updated>2005-02-06T15:09:46.076+01:00</updated><title type='text'>ஆகாயத் தாமரை</title><content type='html'>&lt;a href="http://maalans.blogspot.com/2005/02/blog-post_04.html"&gt;"பல நூறு தலைமுறைகளை ஆதரித்துத் தாங்கிய அந்த ஆறு (தாமிரபரணி) இன்று ஆதரிப்பாரற்றுக் கிடக்கிறது. கருவேலம் மட்டுமல்ல. சில பகுதிகளில் ஆகாயத்தாமரை எனப்படும் Water Hysynth படர்ந்து கிடக்கிறது. இது ஆற்றையே அழித்து விடும் தன்மை கொண்டது. இதை அகற்றக் கூட சக்தியற்றுக் கிடக்கிறான் நெல்லைத் தமிழன். ஒரு சில இளைஞர்கள் இதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்."&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்டதை வாசித்தபின்பு அச்செடியைப் எண்ணம் மனதில் சற்று ஓடிக்கொண்டிருந்தது. ஆகாயத் தாமரையை (வெங்காயத் தாமரை, ஆம்பல் என்பவையும் அதே செடியைக் குறிப்பனவா என்பதை அறிந்தவர்கள் சொல்லவும்) அதிக அளவில் கோவை உக்கடம் பேருந்து நிலையத்திற்குப் பின்புறமுள்ள எஞ்சி நிற்கும் குளத்திலும், திருச்சி சாலையிலிருக்கும் சிங்காநல்லூர் குளத்திலும் கண்டிருக்கிறேன். நீரின் மீது பச்சைக் கம்பளம் விரித்தாற்போல பார்பதற்குப் அழகாக இருக்கும் இத்தாவரம் தானிருக்கும் பகுதி பசுமையால் பூத்துக் குலுங்குவதுபோலத் தோன்றச் செய்யும். அழகான இத்தாமரை அழிவையும் தன்னகத்தே கொண்டுள்ளது.  அது எவ்வாறு ஆறு, குளம் முதலான நீர்நிலைகளை அழிக்கிறது என்று தெரிந்துகொள்ளத் தலைப்பட்டு கூகிளில் தேடியபோது பல தகவல்கள் கிடைத்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://agspsrv34.agric.wa.gov.au/programs/app/Weeds/images/waterhyac_flower.gif"&gt;&lt;br /&gt;ஆகாயத் தாமரையின் அழகில் மயங்கி அதை சென்ற நூற்றாண்டுகளில் அமேசான் படுகையிலிருந்து இறக்குமதி செய்து மக்கள் தம் வாழுமிடத்தைச் சுற்றி வளர்க்க ஆரம்பித்துள்ளனர். இருக்க இடங்கொடுத்தால் படுக்கப் பாய் கேட்கிறதைப் போல், தனது அசுர வளர் திறனால் அங்கிங்கெனாதபடி உலகெங்கும் பரவிவிட்டது இச்செடி. மனிதன் எதையுமே தனக்குப் பாதகம் என்று வந்தால் தானே அதைப்பற்றி கவலைப்படுவான்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலத்தில் Water hyacinth என்றழைக்கப்படும் ஆகாயத் தாமரையின் தாவரவியல் பெயர் Eichhornia crassipes. இதை ஒரு மிதக்கும் நீர்க்களை என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். இதனால் ஏற்படும் பிரச்சனைகள் சில பின்வருமாறு:&lt;br /&gt;&lt;br /&gt;குடிநீர் மற்றும் பாசனக் குழாய்களுக்குச் செல்லும் நீரின் அளவை இவற்றின் வேர்கள் மட்டுப்படுத்துவதால் நீர் இறைக்கும் நேரமும், செலவும் அதிகரிக்கிறது.&lt;br /&gt;கோடையில் இலைகளின் வழியான நீராவிப் போக்கு வழக்கத்தைவிட அதிகமாக இருப்பதால் நீரின் அளவு வெகுவிரைவில் குறையும்.&lt;br /&gt;அடர்ந்த புதர்போலப் பரவியிருக்கும் இச்செடிகள் சூரிய ஒளி நீரினுள் ஊடுருவுவதற்குத் தடையாக இருப்பதால் அந்நீரில் வாழும் மற்ற தாவரங்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.&lt;br /&gt;இறந்து மட்கும் இத்தாவரத்தால் நீரிலுள்ள ஆக்ஸிஜன் போய் நீர் மாசடைவதுடன் தேங்கவும் செய்கிறது.&lt;br /&gt;நீர் மற்றும் நீர்-நிலவாழ் உயிர்களின் நடமாட்டம் மற்றும் இனப்பெருக்கத்திற்கு இச்செடிகள் பெரிய இடையூறுதான்.&lt;br /&gt;இச்செடிகளினூடே நீர் அருந்துவது கால்நடைகளுக்கு பெரிய பிரச்சனை; சிலசமயம் அவை அவற்றில் மாட்டிக்கொண்டு மூழ்கிவிடும் அபாயமும் இருக்கிறது.&lt;br /&gt;சாகாவரம் பெற்ற கொசுக்களுக்கு இது ஒரு சொர்க்க பூமிதான்.&lt;br /&gt;வெள்ள காலங்களில் இவற்றால் சேதம் அதிகரிக்கவும் வாய்ப்புண்டு.&lt;br /&gt;பெரும் பரப்பில் வியாபித்திருக்கும் இச்செடிகள் படகுப் போக்குவரத்து, மீன்பிடிப்பு போன்றவற்றைப் பெரிதும் பாதிக்கிறது.&lt;br /&gt;மேலும், நீர்வெளியின் இயற்கையான அழகை மாற்றுவதுடன் அப்பகுதிவாழ் தாவரங்கள், விலங்குகள் மற்றும் பறவைகளை வேற்றிடம் தேடிச்செல்லச் செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இது உலகெங்கும் உள்ள பெரிய பிரச்சனையாக இருப்பதால் பல்வேறு வகையான தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முயற்சிக்கப்பட்டும் நடைமுறையிலும் உள்ளன. தமிழகத்திலும் அரசு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் போன்ற அமைப்புகளும், தன்னார்வலர்களும் இது குறித்து ஆய்வுகள் செய்திருக்கக்கூடும். ஆனால் எந்த அளவிற்கு அவை நடைமுறையில் இருக்கிறதென்று தெரியவில்லை. சாதாரண மக்களுக்கு இச்செடிகள் தினமும் வழியில் பார்த்துச் செல்லும் மற்றொரு காட்சியே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.pbs.org/wgbh/nova/algae/images/impa-waterhyacinth-l.jpg"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல்கிப் பெருகிவிட்டன இச்செடிகளை அழிப்பதோ, கட்டுப்படுத்துவதோ சாதாரண காரியங்களாகத் தெரியவில்லை. வேதியல் மற்றும் உயிரியல் வழிமுறைகள் சில இருந்தாலும் நம்மூரில் அதிக அளவில் கிடைக்கும் மனித வளத்தைக் கொண்டு (நிபுணர்களின் வழிகாட்டல், அரசு மற்றும் ஆர்வலர்களின் ஆதரவுடன்) கையால் அழிப்பது பல்வேறு வழிகளில் பயனளிக்கும் என்று நினைக்கிறேன். மாவட்ட நிர்வாகங்கள் இதை ஒரு தற்காலிக வேலைவாய்ப்பாகக் கூட வேலையற்ற இளைஞர்களுக்கு அளிக்கலாம். அல்லது உணவிற்கு வேலை என்று ஏதோ ஒரு திட்டம் இருக்கிறதென்று சொன்னார்களே அதன் மூலமாகக்கூட முயற்சிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இச்செடியால் ஏதேனும் பயனுள்ளதா என்றுகூட சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சாண எரிவாயுவைப் போல இயற்கை &lt;a href="http://www.mtnforum.org/apmn/biomass1.htm"&gt;எரிவாயு&lt;/a&gt;, &lt;a href="http://databank.nedfi.com/content.php? menu=131701&amp;page_id=793"&gt;காகிதம் தயாரித்தல்&lt;/a&gt;, &lt;a href="http://www.itdg.org/docs/technical_information_service/water_hyacinth_control.pdf"&gt;கயிறு, நூல் மற்றும் கைவினைப் பொருட்கள்&lt;/a&gt; தயாரிக்கப் பயன்படுவதாகத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற டிசம்பர் (9-13.12.2004) புவனேஸ்வரில் நடந்த '&lt;a href="http://144.16.93.203/energy/lake2002/Main/LAKE%202004_p.pdf"&gt;Lake 2004&lt;/a&gt;' என்ற கருத்தரங்கிலும் ஆகாயத்தாமரை பற்றி விவாதித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இணையத்தில் ஆகாயத்தாமரையைக் குறித்த தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன, அச்செடியைப் போலவே.&lt;br /&gt;&lt;br /&gt;செடியைப் பற்றிய பொதுவான தகவல்கள் மற்றும் பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் சிலவற்றிற்கான சுட்டிகள்:&lt;br /&gt;&lt;a href="http://www.invasivespecies.gov/profiles/waterhyacinth.shtml"&gt;http://www.invasivespecies.gov/profiles/waterhyacinth.shtml&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.water-hyacinth.com/"&gt;http://www.water-hyacinth.com/&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.nrm.qld.gov.au/factsheets/pdf/pest/PP6.pdf"&gt;http://www.nrm.qld.gov.au/factsheets/pdf/pest/PP6.pdf&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.pbs.org/wgbh/nova/algae/impact.html"&gt;http://www.pbs.org/wgbh/nova/algae/impact.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.worldfishcenter.org/naga/naga-ntafp%20news.pdf"&gt;http://www.worldfishcenter.org/naga/naga-ntafp%20news.pdf&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.issg.org/database/species/ecology.asp?si=70&amp;fr=1&amp;sts=sss"&gt;http://www.issg.org/database/species/ecology.asp?si=70&amp;fr=1&amp;sts=sss&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-110769880092291913?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/110769880092291913/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=110769880092291913' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/110769880092291913'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/110769880092291913'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/02/blog-post_06.html' title='ஆகாயத் தாமரை'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-110727744155711906</id><published>2005-02-01T18:02:00.000+01:00</published><updated>2006-05-02T13:40:55.976+02:00</updated><title type='text'>சிற்றிதழ்களின் களஞ்சியம்</title><content type='html'>சுபமங்களா - எனக்கு வாசிக்க கிடைத்த ஆரம்பகால சிற்றிதழ். கோமல் சுவாமிநாதன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்துகொண்டிருந்த அருமையான அவ்விதழ் அவரது மறைவுடன் நின்றுவிட்டது. பிற்பாடு, காலாண்டு இதழாக வந்து கொண்டிருந்த காலச்சுவடின் அறிமுகம். இதே காலகட்டத்தில் கோவையிலிருந்து வெளியாகும் கலைக்கதிர் என்ற அறிவியல் சிற்றிதழும் வாசிக்கக் கிடைக்கும். இவற்றின் வாயிலாக சமகாலத்தைய இலக்கியச் சிற்றிதழ்கள் சிலவற்றின் பெயர்கள் தெரிந்திருந்தாலும், வாசிக்கக் கிடைத்ததில்லை. கல்லூரி நூலகத்தில் சில இதழ்கள் புத்தாடை கலையாது மேசையின் மேல் மின்விசிறியின் காற்றுக்கு ஆடிக்கொண்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கியம் மட்டுமல்லாது, பல்வேறு தளங்களில் எத்தனை சிற்றிதழ்கள் தமிழில் வந்துகொண்டும், வந்து நின்றுபோயும் இருக்கும்! ஒவ்வொரு ஊரிலும் எல்லாக் காலத்திலும் இதுபோன்று ஏதாவது இதழ்கள் (அது பத்து பேர் மட்டுமே படிக்கும் கையெழுத்துப் பிரதியானாலும் சரி, இல்லை பல நூறு படிகளாக வரும் அச்சுப் பிரதியானலும் சரி) தயாராகிக் கொண்டிருக்கும். கொஞ்ச காலத்திற்கு வெகு அமர்க்களமாக வரும் இவ்விதழ்கள் ஒரு காலகட்டத்தில் பல்வேறு காரணங்களால் காணாமல் போய்விடுவதுடன், அப்படியொன்று வந்ததற்கான சுவடே இல்லாமல் ஆகிவிடும். எதையும் ஆவணப்படுத்தியோ, சேகரித்துப் பாதுகாத்தோ வைத்துவிட்டால் தன் சுயத்தை இழந்து விடமாட்டானா தமிழன்!!&lt;br /&gt;&lt;br /&gt;நிலைமை இப்படியிருக்க, "உலக அளவில் கருத்துச் செறிவோடு தொடங்கப்பட்டுத் தொடரப்படுகிற இதழ்கள், அனைவரது பார்வைக்கும் படாமலேயே நின்றுவிடுகின்றன. இவ்வகை இதழ்கள் அந்த இதழாளர் வாழும் வரை அவரோடு வாழ்ந்து அவரது மறைவிற்குப் பிறகு அவரது உறவினர்களாலேயே பழைய புத்தகக் கடைக்குத் தூக்கி எறியப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்துலும், வெளிநாட்டிலும் இவ்வாறு வெளியிடப்படும் இதழ்களைத் திரட்டுவதும், பாதுகாப்பதும் முதன்மையாகும். இந்த நோக்கில் நமது நூலகத்தில் இன்றுவரை 2,533 வகையான தமிழ்ச் சிற்றிதழ்கள் திரட்டப்பட்டுள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;இவற்றில் வானம்பாடி, தேனீ, சரஸ்வதி, டமாரம் இதழ்களைக் குறுந்தகடு ஆக்கியுள்ளேன். இந்த முறையில் இதழ்களின் தோற்றத்தை அப்படியே, அதே வண்ணத்தில் பாதுகாக்க முடியும். இதழ்களை அடுத்த தலைமுறைக்குக் காட்சிப்படுத்துகிற இந்த அரிய முயற்சியில் உங்களையும் இணைத்துக் கொள்ள வருமாறு அன்போடு அழைக்கிறேன்" என்று பதினைந்து ஆண்டுகளாக இதழ்களைச் சேகரித்து வருவதுடன், அவற்றை குறுவட்டு வழிப்பாதுகாப்பதிலும் ஈடுபட்டுள்ள ஒரு தமிழ் ஆர்வலரைப் பற்றி அறிய வந்தால் மனதில் ஒரு வித மகிழ்ச்சி தோன்றாதா? &lt;br /&gt;&lt;br /&gt;1983-ல் இந்தியக் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவிடம் நல்லாசிரியர் விருது பெற்ற, பொள்ளாச்சி நசன் என்று அழைக்கப்படுகிற ம.நடேசன் அவர்கள் இவ்வரிய பணியில் ஈடுபட்டுள்ளார். கூடவே "எளிய முறையில் தமிழ் கற்பித்தல்", "கற்பித்தலுக்கான எளிய கருவிகளை ஆக்குதல்", "தாய்த் தமிழ்த் தொடக்கப்பள்ளி நடத்துதல்" போன்றவற்றையும் செய்து வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு காலகட்டத்தின் வரலாறு, குமுகாயத்தின் போக்குகள் முதலானவற்றை அறிந்து கொள்ள இவரது நூலகத்திலுள்ள இதழ்கள் உதவும். இதழியல் துறையில் ஆய்வு செய்வோருக்கும் இது ஒரு களஞ்சியம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோன்று அரிய பணியில் ஈடுபட்டிருப்போரை உலகிற்குக் காட்டும் உருப்படியான பணியை வெகுசன ஊடகங்கள் செய்தால் நன்றாயிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://thamizham.net/"&gt;மேலதிகத் தகவல்களுக்கு...&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-110727744155711906?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/110727744155711906/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=110727744155711906' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/110727744155711906'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/110727744155711906'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/02/blog-post.html' title='சிற்றிதழ்களின் களஞ்சியம்'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-110683964076020553</id><published>2005-01-27T16:23:00.000+01:00</published><updated>2005-01-27T16:27:20.760+01:00</updated><title type='text'>மாலன் அவர்களுக்கு...</title><content type='html'>தங்களது '&lt;a href="http://maalans.blogspot.com/"&gt;வாசகன்&lt;/a&gt;' வலைப்பதிவில் பின்னூட்டமிட முனைந்தபோது, 'Comments are for team members only.' என்ற செய்தி வந்ததால் அப்பின்னூட்டத்தை இங்கேயே இடுகிறேன். இது உங்களைச் சென்றடைந்தால் மகிழ்வடைவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகங்கள் சிலவற்றைப் பற்றி அருமையாகச் சொல்ல ஆரம்பித்துள்ளீர்கள்; ஆவலுடன் வாசித்துக்கொண்டுள்ளேன். எனது வேண்டுகோள் என்னவெனில், ஒவ்வொரு புத்தக அறிமுகத்தின்போதும் அதன் முழு விவரங்களையும் (பெயர், ஆசிரியர், பதிப்பகம், ISBN [இருந்தால்], விலை முதலானவை) தெரிவித்தீர்களேயானால், அவற்றைக் குறித்து வைத்துக்கொண்டு பின்னாளில் வாங்கி வாசிப்பதற்கு ஏதுவாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்பும், நன்றியும்.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-110683964076020553?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/110683964076020553/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=110683964076020553' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/110683964076020553'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/110683964076020553'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/01/blog-post_27.html' title='மாலன் அவர்களுக்கு...'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-110675606370236017</id><published>2005-01-26T17:09:00.000+01:00</published><updated>2005-01-26T17:14:23.703+01:00</updated><title type='text'>எப்படி சுகம்? - பரோபகாரி - சைவம்</title><content type='html'>அதுவோர் ஈரடுக்கு ரயில் வண்டி ('புகைவண்டி', 'புகையிரதம்[ஈழத்தில்]', 'தொடர்வண்டி', 'ரயில்', 'ட்ரெயின்' - ஒரு வண்டியைக் குறிக்கத்தான் எத்தனை சொற்கள்!!; இதற்கு 'இருவுள்' என்ற நல்லதொரு தமிழ்ச் சொல்லை இராம.கி. கையாள்கிறார்). சென்றவாரக் கடைசியில், வெளியூர் சென்றுவிட்டு திரும்பியபோது குழந்தை-வண்டியை ரயில் பெட்டியின் வாயிலுக்கு அருகில் நிறுத்திவிட்டு, செல்லும் தொலைவு ஒரு சில நிமிடங்களே என்பதால் அங்கேயே நின்றுகொண்டிருந்தோம். மேலடுக்கிலிருந்து பயணச்சீட்டுப் பரிசோதகர் வந்து எங்களிடம் சோதனையை முடித்துவிட்டு கீழ்த்தளத்திலிருக்கும் சக பரிசோதகர் வருவதற்காக காத்திருந்தார். கீழ்தளத்தில் சோதனையை முடித்துக்கொண்டு சர்ரெனப் படிக்கட்டில் ஏறி வேகமாக வந்தவர் எங்களைப் பார்த்தும்,&lt;br /&gt;&lt;br /&gt;"வணக்கம்!"&lt;br /&gt;"எப்படி சுகம்?"&lt;br /&gt;"நன்றி!"&lt;br /&gt;&lt;br /&gt;என்று வரிசையாகச் சொல்லி ஆச்சரியப்படுத்திவிட்டு, எங்களின் பதிலைக் காதில் வாங்கியவாறே புன்முறுவலுடன் அடுத்த பெட்டிக்குச் சென்றுவிட்டார். தமிழ், தமிழர் என்று அயல்நாடுகளில் இன்று &lt;span style="font-weight:bold;"&gt;பரவலாக&lt;/span&gt; அறியப்படுகிறதென்றால் அதற்கு புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களே முக்கியமான காரணம் என நம்புகிறேன்.&lt;br /&gt;----------&lt;br /&gt;&lt;br /&gt;philanthropist = பரோபகாரி என்கிறது &lt;a href="http://www.uni-koeln.de/phil-fak/indologie/tamil/otl_search.html"&gt;கொலோன் பல்கலைக்கழகத் தமிழ் அகராதி&lt;/a&gt;.&lt;br /&gt;பரோபகாரி = one who is willing to help others, தயங்காமல் தாராளமாக உதவி செய்பவர் (க்ரியாவின் தற்காலத் தமிழகராதி)&lt;br /&gt;பரோபகாரம் = பிறர்க்குதவி (கழகத் தமிழகராதி)&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கில விக்கிபீடியாவின் &lt;a href="http://en.wikipedia.org/wiki/Philanthropist"&gt;விளக்கம்&lt;/a&gt;: "A philanthropist is someone who devotes her or his time, money, or effort towards helping others. The label is most often applied to someone who gives large amounts to charity."&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்னுமில்லீங்க, நம்ம &lt;a href="http://news.bbc.co.uk/1/hi/world/americas/4204425.stm"&gt;பில்கேட்ஸ் உலகத்தின் முன்வரிசைப் பரோபகாரிங்களாம்&lt;/a&gt;. சரி, இதுக்கு நம்ம அகராதிகள்ளாம் என்ன சொல்லுதுன்னு பாத்தப்பக் கெடச்சதுதாங்க மேல இருக்கறதெல்லாம்.&lt;br /&gt;----------&lt;br /&gt;&lt;br /&gt;மாமிசம் அல்லாத உணவிற்கு 'சைவம்' என்ற சொல்லை எப்படிப் புழக்கத்திற்குக் கொண்டுவந்தார்களென்பது வியப்பாக உள்ளது. இதைக்கொண்டு புலால் உணவை 'அசைவம்' என்று சுலபமாகச் சொல்லிவிட்டார்கள். சமயத்தின் (சைவம், வைணவம் போன்ற) பெயரிலிருந்து வந்ததா இது? அப்படியானால் சைவ சமயத்தைப் பின்பற்றியோர் புலால் உணவை மறுத்தவர்களா? "இந்தக் குழம்பில் கறி சேர்க்கப்பட்டுள்ளதா?" எனக் கேட்டால் "இல்லை, இது மரக்கறி" என்றே சொல்வார் எங்கள் அலுவலகத்திலுள்ள உணவகத்தின் ஊழியர், ஈழத்துக்காரர். &lt;a href="http://groups.yahoo.com/group/tamil-ulagam/message/31088"&gt;இதை நினைக்கத் தூண்டிய தகவல்&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-110675606370236017?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/110675606370236017/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=110675606370236017' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/110675606370236017'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/110675606370236017'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/01/blog-post_26.html' title='எப்படி சுகம்? - பரோபகாரி - சைவம்'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-110588899875826107</id><published>2005-01-16T16:19:00.000+01:00</published><updated>2005-01-16T16:23:18.760+01:00</updated><title type='text'>அவியல்</title><content type='html'>கடந்த வெள்ளிக்கிழமை (14.01.2005) சென்னையில் அகலப்பட்டைச் சேவையைத் தொடங்கிவைத்த மையத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர், ஜூன் மாதத்திற்குள் ரூ.10 ஆயிரம் விலையில் கணினி கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறார் ("அகண்ட அலைவரிசைச் சேவை தொடக்கம்: ஜூன் மாதத்துக்குள் ரூ.10 ஆயிரத்துக்குக் கணினி" - தினமணி, ஞாயிறு 16.01.2005 மின்பதிப்பு). மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், திரையின் விலையே ஏறக்குறைய ரூ.5000 இருக்கும் சமயத்தில் இக்கணியில் என்னென்ன வசதிகள் இருக்குமென்று தெரியவில்லை. அதுபோல மாதத்திற்கு ரூ.500-ஐ சாதாரண வீடுகளில் அகலப்பட்டை இணைப்பிற்காகச் செலவழிப்பார்களா என்ற சந்தேகமும் உள்ளது. வணிகப் போட்டிகள் பெருகும்போது இத்தொகை மேலும் குறையக்கூடும். &lt;br /&gt;&lt;br /&gt;மைக்ரோசாஃப்ட்டின் தமிழ் மென்பொருள் அடுத்த மாதம் வெளியிடப்படுகிறதாம்-'ஆபீஸ்' தொகுப்பாக இருக்குமோ? வரட்டும் வரட்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் கணிப்பொருட்களுக்கான இறக்குமதி வரி (35% ?) மிக அதிகம் என்று தெரிகிறது. இந்த அளவிற்கு அதிகமாக வரிவிதிக்க வேண்டிய அவசியம் என்னவோ - உள்ளூர் தயாரிப்புகளைக் காப்பாற்றுதலா?&lt;br /&gt;&lt;br /&gt;-----&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற ஆண்டு ஈராக்கின் சிறைச்சாலையில் (அபு க்ராயிப்) நடந்த அக்கிரமங்களுக்காக அமெரிக்கச் சிப்பாய், சார்லஸ் க்ரானெர் (36), பத்தாண்டுகள் சிறைவாசம் பெற்றுள்ளார் (&lt;a href="http://news.bbc.co.uk/2/hi/americas/4177883.stm"&gt;செய்தி&lt;/a&gt;). தொ.காவில் பார்த்தபோது இத்தீர்ப்பால் அவர் ஒன்றும் வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை. 'மேலிடத்து உத்தரவுகளை'யே அமல்படுத்தியதாகவும், 'போர் நடந்துகொண்டுள்ளது, அங்கு கெட்ட செயல்களும் நடக்கும்' என்ற வியாக்கியானம் வேறு. இந்த 'மேலிடங்களுக்கெல்லாம்'  விசாரணை என்றே ஒன்று இருக்குமா என்பது சந்தேகம்தான். இத்தீர்ப்புகள் வெறும் கண்துடைப்பாக இல்லாமலிருந்தால் சரி.&lt;br /&gt;&lt;br /&gt;-----&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://outlookindia.com/full.asp?fodname=20050111&amp;fname=pilger&amp;sid=1"&gt;மனிதன் உருவாக்கிய வேறொரு சுனாமி&lt;/a&gt; &lt;br /&gt;[அவுட்லுக் இந்தியா, ஜன.11 2005, The Other, Man-Made Tsunami]&lt;br /&gt;&lt;br /&gt;-----&lt;br /&gt;&lt;br /&gt;'இந்த வார நட்சத்திரம்'-ஆக அழைத்து, எழுதத் தூண்டிய தமிழ்மணம் குழுவிற்கு மிக்க நன்றிகள்! சுமாராக எழுதப்பட்டதாக இருந்தாலும் அவைகளையும் வாசித்து, பின்னூட்டம் அளித்து வந்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஒரு வாரத்தில் நான் கவனித்த வரைக்கும் ரோஸாவசந்த் தான்-படித்த வலைப்பதிவுகளில் பெரும்பாலானவற்றிற்குப் பின்னூட்டமிட்டுள்ளார் என்றே சொல்வேன். இது அந்தந்த வலைப்பதிவாளர்களை நிச்சயம் உற்சாகம் அளிக்கும். அதற்காக அவருக்கு மேலும் ஒரு நன்றி!  எல்லாப் பதிவுகளுக்கும் எல்லோராலும் எல்லா சமயத்திலும் பின்னூட்டம் அளிக்க இயலாது. இருப்பினும், முக்கியமான பதிவுகளுக்கு (குறிப்பாகத் துறை சார்ந்து எழுதுவோருக்கு) பின்னூட்டம் இடுவது, அதை எழுதுவோர்களுக்கு உந்துசக்தியாக இருக்கும். இல்லையெனில், இவ்வளவு சிரமமெடுத்து எதற்கு எழுதினோம் என்ற சலிப்பே ஏற்படும். அதேபோல வலைப்பதிவாளரும், பின்னூட்டமளிப்போரை ஊக்குவிக்கும் வண்ணம் பின்னூட்டங்களுக்குப் பின்னூட்டம் அளித்தல் நலம் (குறைந்தபட்சம் கேள்விகள் எழுப்பப்படும் போதாவது). &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த வார நட்சத்திரத்தை வரவேற்று விடைபெறுகிறேன். நன்றி!&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-110588899875826107?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/110588899875826107/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=110588899875826107' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/110588899875826107'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/110588899875826107'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/01/blog-post_16.html' title='அவியல்'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-110581598994891965</id><published>2005-01-15T19:56:00.000+01:00</published><updated>2005-01-15T20:06:29.946+01:00</updated><title type='text'>நடை</title><content type='html'>நடைப் பிரியர்களுக்கு சுவிஸ் ஒரு சொர்க்க பூமி என்று சொன்னாலது மிகையாகாது. கிட்டத்தட்ட எல்லா ஊர்களிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நடப்பதற்குத் தேவையான வசதிகளைச் செய்துவைத்துள்ளனர். துவங்கும் இடத்தையும், அங்கிருந்து சென்று சேர வேண்டிய இடத்தை மட்டும் நிர்ணயித்துக் கொண்டால் போதும், யாரிடமும் வழிகூடக் கேட்காமல் நடந்து கொண்டேயிருக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலும் வெயில் இருக்கும் சமயங்களிலெல்லாம் மக்கள் நடப்பதைக் காணமுடியும், குளிர்காலத்தில்கூட (என்ன, இச்சமயங்களில் நடப்போரின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்). ஊர்கள் வழியாக, மேய்ச்சல் நிலங்களில், ஏரிகளைச் சுற்றி, மரங்கள் நிறைந்த காடுகளின் ஊடே, மலைகளின் மேலே என்று சகல இடங்களிலும் நடைபாதைகள் இருப்பதைக் காணலாம். அந்தந்த இடத்தைச் சார்ந்த அமைப்புகள் (ஊராட்சி போன்றவை) இப்பாதைகளைப் பராமரித்து வருவதாகக் கேள்விப்பட்டேன். மக்கள் தங்கள் விருப்பம், நேரத்திற்கேற்ப இடங்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு தனியாகவோ, ஜோடியாகவோ, குடும்பமாகவோ நடந்து செல்வர். நடப்பதற்கென்றே இருக்கும் கைத்தடிகளுடன் கரடுமுரடான மலைப்பாதைகளில் அறுபது, எழுபது வயதைத் தாண்டியவர்களைக் கண்டு ஆச்சரியப்படத் தேவையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நடைபாதைகளுக்கான வரைபடங்களும் தனியாகக் கிடைக்கின்றன. சில இடங்களுக்கு வழியில் பார்க்க வேண்டியவைகளுக்கான குறிப்புகளுடன் சிறு புத்தங்கள்கூட இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று நடக்க வேண்டுமென்றால் அப்பகுதிக்கான வரைபடத்தை எடுத்துக் கொண்டு போனால் போதுமானது, சில சமயங்களில் அதுவும் தேவையில்லை. இங்குள்ள பொதுப் போக்குவரத்து அமைப்பு ரயிலை மையமாகக் கொண்டது (இம்முறைமையைப்பற்றி பிறிதொரு சமயத்தில் எழுதவேண்டும், முறைமை=system). பெரும்பாலும் எல்லா நடைப்பாதைகளும் ஒரு ஊருக்கும் மற்றொரு ஊருக்கும் இடையில் இருப்பதால் (இடையில் உள்ள பாதை மேற்சொன்னபடி எங்கு வேண்டுமாலும் இருக்கும்), வசிப்பிடத்திலிருந்து அவ்வூருக்கு ரயில், தேவைப்பட்டால் அங்கிருந்து பேருந்தில் சென்று நடையைத் துவங்கவேண்டும். சென்று சேருமிடமும் ரயில் நிலையமாகவோ அல்லது பேருந்து நிறுத்தமாகவோ இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;நடக்கத் தோதான ஒவ்வோர் இடத்தின் ரயில் நிலையங்களின் முன்பாகவும் மஞ்சள் நிறத்தில் திசைகாட்டிகள் வைக்கப்பட்டிருக்கும். அவற்றில் அவ்விடத்தின் பெயர், அது கடல் மட்டத்திலிருந்து எவ்வளவு மீட்டர் உயரத்தில் உள்ளது, அங்கிருந்து எங்கெல்லாம் செல்ல முடியும் (ஊர்கள்/இடங்களின் பெயர்கள்), நடந்து சென்று அடைவதற்கான நேரம் (பெரும்பாலும் இது சரியாகவே இருக்கும்) போன்ற தகவல்கள் பொறிக்கப்பட்டிருக்கும். வழியில் விளக்குக் கம்பங்கள், மரங்கள், சுவர்கள், பெருங்கற்கள் போன்றவற்றில் குறிகளைப் போட்டுவைத்துள்ளனர். இது வழியைத் தொடர்ந்து காண்பிக்கும். இக்குறிகள் பாதைகளுக்கேற்றவாறு வேறுபடும். உதாரணமாக, மலைப்பாதையென்றால் சிவப்பு-வெள்ளைக்குறி, சாதாரண பாதையென்றால் வைரவடிவில் மஞ்சள் குறி என்றிருக்கும். முக்கியமான சந்திப்புகளில் மீண்டும் திசைகாட்டிகள் இருப்பதைக் காணமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v101/nradhak/WWeg_Uznach.jpg"&gt;&lt;br /&gt;ரயில் நிலையம் ஒன்றினருகே, நடையைத் துவங்க...&lt;br /&gt;&lt;br /&gt;இடத்திற்கேற்ற நல்ல காலணிகளும் அவசியம். பனியில் நடப்போருக்கு மேலும் சில உபகரணங்கள் தேவைப்படும். உண்பதற்கு பெரும்பாலும் பழங்கள், உலர் பழங்கள், தண்ணீர் போன்றவற்றை எடுத்துச் செல்லவேண்டும். நன்றாகச் சாப்பிட வேண்டுமென்றால் வழியில் முக்கியமான இடங்களில் உணவுவிடுதிகளும் இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;வழியில் இயற்கைக் காட்சிகளுக்குப் பஞ்சமே இருக்காது. பனிபடர்ந்த மலைகள், பல வண்ணங்களில் பூக்கள் பூத்துக் குலுங்கும் பசுமையான புல்வெளிகள், அடர்ந்த மரங்களால் இருட்டான காடுகள், சலசலக்கும் நீரோடைகள், மேய்ச்சலில் மேயும் பசுக்கள், அவற்றின் கழுத்தில் தொங்கும் பெரிய மணிகளின் ஓசை (இம்மணிகளை கடைகளில் சுற்றுப்பயணிகளுக்கு பரிசுப்பொருட்களாக விற்பர்) நடையின் அலுப்புத் தெரியாத வண்ணம் விரிந்து செல்லும். பள்ளத்தாக்குகளிலுள்ள கிராமங்களின் வழியாக நடக்கும் போது அருகிலுள்ள மலைகளைப் மேலெடுத்துப் பார்க்கும்போது அதன் பிரம்மாண்டம் பிரமிக்கச் செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v101/nradhak/WWeg_Uznach1.jpg"&gt;&lt;br /&gt;கிராமம் ஒன்றை நோக்கி...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v101/nradhak/WWeg_Uznach2.jpg"&gt;&lt;br /&gt;கிராமமொன்றிலிருந்து மரங்கள் செறிந்த காடொன்றிற்கு...&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாப் பாதைகளும் நடப்பதற்கு சுலபமாக இருந்துவிடுவதில்லை. அதுவும் வெயில்காலத்தில் மலைகளில் ஏற்றம் மிகுந்த பாதையில் நடப்பதற்குக் கேட்கவே வேண்டாம். முகட்டை ஏறி அடைந்துவிட்டு வந்த பாதையைத் திரும்பிப் பார்த்ததால், களைப்பெல்லாம் காணாமல் போய்விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v101/nradhak/WWeg_Pilatus_down.jpg"&gt;&lt;br /&gt;இதுவும் ஒரு பாதை...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v101/nradhak/WWeg_Saentis.jpg"&gt;&lt;br /&gt;அதோ அந்த மலையுச்சியிலிருந்து இங்கு வர மூன்றரை மணிநேரங்கள் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;கோடைகாலத்திற்குக் காத்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-110581598994891965?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/110581598994891965/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=110581598994891965' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/110581598994891965'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/110581598994891965'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/01/blog-post_15.html' title='நடை'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-110572581621785418</id><published>2005-01-14T18:50:00.000+01:00</published><updated>2005-01-14T19:03:36.216+01:00</updated><title type='text'>ஒருத்தன் போனாலென்ன?</title><content type='html'>சென்னைப் புத்தகக் கண்காட்சியைப் பற்றி வலைப்பதிவுகளில் வந்து கொண்டிருக்கும் தகவல்களை அவ்வப்போது படித்துக் கொண்டிருக்கும்போது ஒரு சில விஷயங்கள் சட்டென நினைவுக்கு வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பல மாதங்களாக இங்கே வந்து கொண்டிருந்த காலச்சுவடின் அச்சுப்பிரதி ஒரு நாள் நின்றுவிட்டது. எப்பொழுது சந்தா முடிகிறதென்று பார்க்க நானும், சந்தா முடியப்போகுமுன் சந்தாதாரருக்கு நினைவூட்ட அவர்களும் மறந்துவிட்ட சமயத்தில் (விற்பவர்கள் இப்படியா இருப்பது?!), காலச்சுவடு இணையத்திலேயே படிக்கக் கிடைப்பது தெரியவர, அதிலேயே எப்போதாவது படிக்கிறேன். சமீப காலத்தில் காலச்சுவட்டைப் பற்றிக் கேட்கும் சில செய்திகளும் சந்தாவைப் புதிப்பிப்பதற்கு உள்ள ஆர்வத்தைத் தள்ளிப்போடுகிறது, பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;டாலர் தேசம் என்கிற புத்தகம் வருவதற்குமுன் பா.ராகவன் தனது வலைப்பதிவில் இந்தத் தேதிக்கு முன்னால் முன்பதிவு செய்து கொள்பவர்களுக்கு 30% தள்ளுபடி தரப்படும் என்று அறிவித்திருந்தார். மலிவாகக் கிடைக்கிறதே, அப்படியாவது ஊரில் இருப்போர் படிக்கட்டுமேயென அதை இந்தியாவிலிருக்கும் உறவினர் பெற்றுக்கொள்ளும் வகையில், கடைசி நாளன்று குறிப்பிடப்பட்டிருந்த முகவரிக்கு மின்னஞ்சலொன்று அனுப்பினேன். அது கிணற்றில் போட்ட கல்லாகிவிட்டதென்று நினைக்கிறேன். அவ்வஞ்சலிலேயே, ஒருவேளை தள்ளுபடிக்கான தேதி முடிவடைந்திருந்தாலும் சாதாரண விலையிலேயே அங்கு அனுப்பி வைக்கும்படியும் எழுதியதாக நினைவு. அனுப்பும்போதே ஒருவிதத் தயக்கத்துடன் இருந்த எனக்கு, பதிலொன்றும் வராமையைக் கண்டு ஏன் அனுப்பினோம் என்றாகிவிட்டது. ஒரு பிரதியை நான் வாங்காததாலோ அல்லது அதை எனக்கு விற்காததாலோ இருவருக்கும் ஒன்றும் நஷ்டம் வந்துவிடப்போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்சொன்ன இரண்டு சம்பவங்களை வைத்துப்பார்த்து, கணிசமாக விற்க ஆரம்பித்துவிட்ட நிலையில் பதிப்பாளர்களுக்கு ஒரு-வாசகன் என்ன பெரிய பொருட்டாகிவிடப்போகிறான் என்று எனக்குள் சொல்லிக் கொள்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கிடக்கட்டும் விடுங்கள், நல்ல இசையொன்றைக் கேட்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;யொஹான் ஸெபாஸ்டியான் பாஹ் (&lt;a href="http://www.jsbach.org/"&gt;Johann Sebastian Bach&lt;/a&gt;, 1685-1750)-ன் Air. இந்த Air-லேயே பல வடிவங்கள் (D-Dur, G,...)இருப்பதாகத் தெரிகிறது. மேலும், இந்த இசை பல்வேறு கருவிகளால் இசைத்துப் பார்க்கப்பட்டுள்ளது. நான் கேட்டதில் (குழல், வயலின், ஆர்கன்), வயலினைக் கொண்டு வாசிக்கப்பட்ட D-Durதான் அருமையாக இருந்தது. இணையத்தில் தேடிப்பார்த்ததில் சுமாரான &lt;a href="http://artists.iuma.com/IUMA/Bands/JUOZAS_RIMAS__OBOE,_PIANO_AND_STRINGS/"&gt;இந்த சுட்டி கிடைத்தது&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்! &lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-110572581621785418?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/110572581621785418/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=110572581621785418' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/110572581621785418'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/110572581621785418'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/01/blog-post_14.html' title='ஒருத்தன் போனாலென்ன?'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-110563192276261080</id><published>2005-01-13T16:48:00.000+01:00</published><updated>2005-01-13T17:35:53.180+01:00</updated><title type='text'>பொங்கலுக்கு முந்துன நாள்</title><content type='html'>நம்மூர்ல இன்னிக்கு போகீங்களா, ஒன்னுந் தெரியமாட்டேங்குதுங்க இங்க! இந்நேரம் எல்லா வூட்லயும் பூசி மொழிகி கோலம்போட்டு காப்புக் கட்டீருப்பாங்க. அத்தோட அத முடிச்சுக்கிட்டாப் பத்தாதுங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;வெநாயகர் சதுர்த்தியன்னைக்கு எங்கூர் புள்ளயார் கோயிலுக்கு கொழுக்கட்டகளக் கொண்டுக்கிட்டுப்போயி வேண்டிக்குவாங்க. அதுக்கப்புறம் அதயே அங்க பெரசாதம்ன்னு திருப்பித் தருவாங்க. கோயில்ல அன்னைக்குக் கொஞ்ச நேரம் சீர்காழி, டி.எம்.எஸ் பாட்டுக பாடிக்கிட்டு இருக்கும். அந்தளவுக்குத்தான் வெநாயகர் சதுர்த்திங்கறது நடந்துக்கிட்டிருந்தது. இன்னிக்கென்னடான்னா வண்ண வண்ணமா அந்த வெநாயகர், இந்த வெநாயகர்ன்னு பல தினுசுல, அளவுல கண்ட ரசாயனச் சாமாங்களப் போட்டுச் செய்யறதோட நிக்காம, அதுகளத் தண்ணீல கரைக்கெறேம் பேர்வழின்னு சொல்லிக்கிட்டு கூட்டங்கூட்டமா சத்தம் போட்டுக்கிட்டுப் போய் கடல்ல கொட்டி நாறடிக்கறாங்க. அதப்பாத்துட்டு மித்த ஊரு சனம் சும்மா இருக்குங்களா, தம் பங்குக்கு ஆறு, கொளம் குட்டைகள ஒரு வழி பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அதமாதிரியே போகியக் கொண்டாடரேன்னுட்டு கண்டதப் போட்டு எரிச்சு கூத்தடிச்சிட்டிருக்காங்க. இப்படி குப்ப கூளத்த வழில போட்டு எரிக்கற சமாச்சாரத்த எங்கயும் பாத்ததில்லீங்க. எதெதுலயோ முன்னேறறோங்கறோம், இதுகள்ல மட்டும் ஏம்பின்னுக்குப் போறோம்னு தெரீலீங்க!&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6269013-110563192276261080?l=nradhak.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nradhak.blogspot.com/feeds/110563192276261080/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6269013&amp;postID=110563192276261080' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/110563192276261080'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6269013/posts/default/110563192276261080'/><link rel='alternate' type='text/html' href='http://nradhak.blogspot.com/2005/01/blog-post_13.html' title='பொங்கலுக்கு முந்துன நாள்'/><author><name>இராதாகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/16897765296666827907</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6269013.post-110555391374081726</id><published>2005-01-12T19:07:00.000+01:00</published><updated>2005-01-12T19:18:33.740+01:00</updated><title type='text'>
ரயிலை மறந்தோம்!</title><content type='html'>தமிழகத்தில் பிரயாணம் என்பது பேருந்தை மையமாகக் கொண்டே இருப்பது என்னளவில் கேள்விக்குரியது. கோவையிலிருந்து நாற்பது கி.மீக்கு
